பயிர்ச்செய்கை பற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லோரும் விவசாயிகள் தானா?

அரசாங்கம் என்ற ரீதியில் விவசாயிகளதும் பொது மக்களதும் நலனுக்காக எடுக்கக்கூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம், இந்நிலையில் விவசாயிகளது ஆர்பாட்டங்களில் பங்குகொள்பவர்கள் அனைவரும் உண்மையிலேயே விவசாயிகள்தானா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது என்று கண்டி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தெரிவித்தார்.

கண்டி, கண்ணொறுவாவில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

விவசாயிகளது ஆர்பாட்டங்களில் ஈடுபடும் சில நபர்களது முகங்கள், ஏனைய ஆர்பாட்டங்களிலும் கண்ட முகங்களாக உள்ளன. அதாவது தீப்பந்தப் ஆர்பாட்டம், மீனவர் ஆர்பாட்டட்டங்கள் மற்றும் பல்வேறு போராட்டங்களிலும் அடிக்கடி காணப்படுபவர்களாக உள்ளனர். இதனால் இந்த விவசாயப் போராட்டங்களில் காணப்படும் அனைவரும் விவசாயிகள்தானா என்ற சந்தேகம் எழுந்தது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அருகில் நடைபெறும் போராட்டங்களில் கூட இந்த நபர்களைக் காண முடிந்தது. அங்கேயே தரையில் அமர்ந்து விலங்குகளைப் போல சோற்றுப் பார்சல்களை உண்ணும் முறையையும் நாம் கண்டோம்.

அதுமட்டுமன்றி, இவர்கள் காலிமுகத்திடல் இடம் பெற்ற போராட்டத்திலும் இருந்தார்கள். எனவே, இவர்கள் விவசாயிகளா, மீனவர்களா அல்லது வேறு யாருமா என்று எம்மால் நினைத்துப்பார்க்க முடியாமல் உள்ளது.

தற்போது நாம் அரசாங்கம் என்ற ரீதியில் நெல்லுக்கு நிலையான விலையொன்றை வழங்கியுள்ளோம். களஞ்சியசாலைகளில் உள்ள நெல் இருப்புகளை அகற்றிவிட்டு, இந்தச் சிறுபோக நெல்லைக் கொள்வனவு செய்வதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

அரசாங்கம் என்ற ரீதியில் விவசாய மக்கள் மற்றும் சாதாரண மக்களின் நலனுக்காக எடுக்கக்கூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம்.

இவ்வாறு பணிகளை முன்னெடுத்துச் செல்லும்போது சிறிய பிரச்சினைகள் சில எழுகின்றன. அவற்றை நாம் படிப்படியாக முடிவுக்குக் கொண்டு வருவோம். இரசாயனப் பசளை பயன்பாட்டை நீக்கியமை போன்ற பிரச்சினைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டிய தேவை எமக்குக் கிடையாது.

இது மக்களின் அரசாங்கம். அதேபோல், இந்நாட்டு விவசாயத்திற்கு வனவிலங்குகளால் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குரங்குப் பிரச்சினைக்கு எப்படியும் தீர்வுகொண்டு வரப்பட வேண்டும். யார் என்ன கூறினாலும் நாம் அதனைச் செய்வோம்.

இந்த ஆராய்ச்சிகளை நாம் செயல்படுத்துவோம். உலகில் எந்தவொரு நாடும் குரங்குப் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வைக் கண்டறியவில்லை. நாம் அது குறித்துக் கவனம் செலுத்தியுள்ளோம்.

பழைய உணவுப் பழக்க, கலாச்சாரத்தை மாற்றிவிட்டு, ஆரோக்கியமான உணவு முறைகளை நோக்கி நகர வேண்டும். இன்று பெருமளவிலான மக்கள் இந்த உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக தொற்றா நோய்களுக்கு உள்ளாகி அவதிப்படுகின்றனர் என்றார்.

 

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்

Tamil_News_lrg_432121120260912210533

லண்டன் கார் பந்தயம்: விபத்தைத் தாண்டி 3-வது இடத்தைப் பிடித்து நடிகர் அஜித் சாதனை!

September 13, 2026

லண்டன்: லண்டனில் முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்த புகழ்பெற்ற ‘லீ மான்ஸ் கப்’ (Le Mans Cup) கார்

images - 2026-09-13T133956.877

“வார்த்தைகளை அளந்து பேசுவது அரசியல்வாதிகளின் கடமை!” – அவதூறு பேச்சுகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கண்டனம்

September 13, 2026

சென்னை: அரசியல் விமர்சனம் என்ற பெயரில் ஆபாசமாகப் பேசுவதும் மிரட்டல் விடுப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது

36a6a19c6587d011b2834d714207e935

“லீடர்னா என்னன்னே தெரியாம பேசுறது ஏமாத்து வேலை!” – பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேச்சு; முதலமைச்சருடன் ஒப்பிட்டுப் பரவும் சர்ச்சை!

September 13, 2026

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு (Leadership) குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி

26-6aa59dd45056b

லண்டன் கார் பந்தயத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த த்ரிஷா!

September 13, 2026

லண்டன்: இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தொடங்கி

ba4598f0-5b62-11ee-8789-13750be9e58d.jpg

“நாவைக் காக்க வேண்டும்”: திமுகவினரின் அநாகரிகப் பேச்சுக்குத் திருக்குறள் வழியே கனிமொழி கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு அறிவுரை

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“ஆ.ராசா மற்றும் சேகர்பாபுவின் பேச்சுகள் திமுகவின் வன்மத்தைக் காட்டுகிறது” – அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; ஆவணங்கள் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

September 13, 2026

துரை: அவசரநிலையின் போது மிசா சட்டத்தின் (MISA) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகவே அவர்

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை