நேற்று தீ விபத்துக்குள்ளான முதியோர் இல்லம் பதிவு செய்யப்படவில்லை

அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் தீ விபத்துக்குள்ளான முதியோர் இல்லம் எந்தவொரு அரச நிறுவனத்தின் கீழும் பதிவு செய்யப்படவில்லை என்பதை கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே உறுதிப்படுத்தியுள்ளார்.

“அத தெரண” மேற்கொண்ட தேடலின் போதே, அமைச்சர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.

அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் அமைந்துள்ள இந்த முதியோர் இல்லம், சமூக ஊடகங்கள் மூலம் மிகவும் பிரபலமான ஒரு இடமாகும். அங்கு தங்கியுள்ளவர்கள் மற்றும் வழங்கப்படும் சேவைகள் குறித்து தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட வீடியோக்களே இதற்குக் காரணமாகும்.

குறித்த இடத்தில் நேற்று மாலை 5.10 அளவிலேயே திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனடியாகச் செயற்பட்ட பிரதேசமக்களும், ஹொரணை தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

தீ ஏற்படும் போது, அந்த மையத்திற்குள் வெவ்வேறு வயதுடைய மனநல குறைபாடுகள் கொண்ட 70 பேர் இருந்துள்ளனர்.

அவர்களில் 52 பேரை அக்கம் பக்கத்தினரும் பொலிஸாரும் இணைந்து காயங்களின்றி மீட்டுள்ளனர்.

தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மேலும் 8 பேர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்களில் இருவர் பின்னர் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் தீ விபத்தினால் குறித்த முதியோர் இல்லம் முழுமையாக சேதமடைந்த நிலையில், மீட்க முடியாமல் போன 10 பேரின் உடல்கள் தீயணைக்கப்பட்ட பின்னர் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

நேற்று இரவே பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா, களுத்துறை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்த கொட்டஹச்சி மற்றும் அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விபத்தை பார்வையிட்டனர்.

அங்கிருந்து காயங்களின்றி மீட்கப்பட்டவர்களை நேற்று இரவே படகொட ஆரம்பப் பாடசாலையில் தற்காலிகமாகத் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு இன்று காலை வருகை தந்த ஹொரணை பிரதான நீதவான், அங்கு நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன், அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகளும் அங்கு வருகை தந்திருந்தனர்.

இதன்போது, முதியோர் இல்லத்தை நடத்திச் சென்ற நபர் கைது செய்யப்பட்டு சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

நீர் மோட்டார் மற்றும் அங்கிருந்த மல்டி பிளக் ஒன்றில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே தீ பரவியுள்ளதாக இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கு அருகில் சுமார் 80 மெத்தைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், அதில் தீப்பிடித்து பரவியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையில், படகொட ஆரம்பப் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்த மீட்கப்பட்டவர்கள், இன்று காலை இராணுவத்தின் உதவியுடன் கல்பாத பகுதியிலுள்ள மற்றொரு பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், தீ விபத்துக்குள்ளான தடுப்பு மையத்தில் இருந்தவர்களின் உறவினர்களும் இன்று சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அதற்கமைய தடுப்பு மையத்தின் சிசிடிவி (CCTV) காட்சிகளை பரிசோதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த தடுப்பு மையத்தின் பணிப்பாளராகச் செயற்பட்டு அதனை நடத்தி வந்த நபரை, எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹொரணை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

722205425_2516904032157267_6855962867046714642_n

மயிலிட்டி மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற நாளைய போராட்டத்திற்கு பூரண ஆதரவு, அனைவரையும் கலந்து கொள்ளுமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை

June 14, 2026

போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மக்களது காணிகள் 36 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலையில் மயிலிட்டி மக்கள்

pta

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) நீக்கப்படுகிறது; இரண்டு மாதங்களில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது

June 14, 2026

கொழும்பு: இலங்கையில் நீண்டகாலமாகப் பலத்த விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) முழுமையாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக

QLLE5GRSC5F5FCSDC7A63GB54U

பிரிட்டிஷ் கொலம்பியா இளைஞரைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்: தொடர் அச்சுறுத்தல் குற்றச்சாட்டு

June 14, 2026

ரொறன்ரோ: நபர் ஒருவருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் மற்றும் தொல்லை கொடுத்து வந்த குற்றச்சாட்டின் பேரில், பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தைச்

VFSVNY33WNCS5IL6IWULQ3EVUQ

ரொறன்ரோவில் கத்திக்குத்துச் சம்பவம்: 50 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயம்

June 14, 2026

ரொறன்ரோ: கனடாவின் ரொறன்ரோ நகரின் கிழக்குப்பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 13, 2026) இரவு நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 50 வயது

JZTK3F6L2NCDDLTE6OY6XIQ4OI

கனடாவில் கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் பலி

June 14, 2026

ஒண்டாரியோ: கனடாவின் ஒண்டாரியோ (Ontario) மாகாணத்தில் நிகழ்ந்த மிக மோசமான வாகன விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள்

sss

சியான்’ விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

June 14, 2026

தமிழ் திரையலகின் பெருமிதமாக ஜொலிக்கும் சர்வதேச தரத்திலான நட்சத்திர நடிகர் சியான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்

ang

நவீன தொழில் நுட்பத்தில் தயாரான பாடலை வெளியிட்ட ‘அங்கீகாரம்’ படக் குழு

June 14, 2026

அறிமுக நாயகன் கே ஜே ஆர் நடிப்பில் தயாராகி உள்ள ‘அங்கீகாரம்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெற்றி விழா ஆந்தம்’எனும்

sam

நடிகை சமந்தா நடிக்கும் ‘எங்கள் தங்கம்’

June 14, 2026

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையாக திகழும் சமந்தா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

100

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படம்

June 14, 2026

மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இயக்குநர் சசி

sea

கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை!

June 14, 2026

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, காங்கேசன்துறையிலிருந்து மன்னார்

Legends_1

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 14, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

Shakthivel

இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் கொடூர உண்மைகளை செம்மணி புதைகுழி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது – அருட்தந்தை மா. சத்திவேல்

June 14, 2026

செம்மணி சமூக புதைகுழி அகழ்வுப் பணிகளில் வெளிவரும் மனித எச்சங்களும், குழந்தைகளின் பாவனை பொருட்களும் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும்