நுண்நிதி, கடன்; அதிகாரசபை சட்டமூலம் தொடர்பில் கருத்துக் கோரல்

நுண்நிதி, கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் தொடர்பில் கருத்து கோரல்
நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, சமுதாய அடிப்படையிலான நிதி சங்கங்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்டறிந்தது.

பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில் அண்மையில் (07) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு கருத்துகள் கேட்டறியப்பட்டன.

இங்கு கருத்துத் தெரிவித்த சமுதாய அடிப்படையிலான நிதி சங்கங்களின் பிரதிநிதிகள், சமுதாய அடிப்படையிலான நிதி சங்கங்களின் வகிபாகம் மற்றும் நுண்நிதி மற்றும் கடன் நிறுவனங்களிடமிருந்து இவை எவ்வாறு வேறுபடுகின்றன என்பதையும் விளக்கினர்.

இலங்கையின் கிராமப்புறங்களில் பெண்கள் உட்பட மக்களின் அபிவிருத்தியில் சமுதாய அடிப்படையிலான நிதி சங்கங்கள் தனித்துவமான பங்கை வகிக்கின்றன என்பதையும் குறித்த சங்கத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலம் ஊடாக நுண்நிதி மற்றும் கடன்களை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் ஒரே அதிகாரசபையின் கீழ் கொண்டுவரப்படும் என்றும், இதனால் இது சமுதாய அடிப்படையிலான நிதி சங்கங்களின் பகிபாகத்தைப் பாதிக்கக் கூடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், உத்தேச சட்டமூலத்தில் சமூக அடிப்படையிலான நிதி சங்கங்கள் குறித்து தனியான வியாக்கியானம் வழங்கப்படவில்லை என்றும், அவ்வாறான சங்கங்களை பொதுவான அளவுகோல்கள் மூலம் ஒரு அதிகாரசபையால் ஒழுங்குபடுத்துவது அந்த நிறுவனங்களின் அடிப்படை நோக்கங்களைத் தடுக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த சமூக அடிப்படையிலான நிதி சங்கங்களின் பிரதிநிதிகள், தங்கள் சங்கங்களை ஒழுங்குமுறைக்கு உட்படுத்த வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்தியபோதும், தமது அடிப்படை நோக்கங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சட்டமூலத்தைத் திருத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.

இந்த விடயங்களைக் கருத்தில் கொண்ட குழுவின் தலைவர், நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலத்தில் “சமூக அடிப்படையிலான நிதி நிறுவனங்கள்” என்பதை சரியான முறையில் வரையறுக்கும் வகையிலும், அவற்றின் அடிப்படை நோக்கங்களைப் பாதிக்காத வகையில் சட்டத்தைத் திருத்துவதற்குமான முன்மொழிவை முன்வைத்தார்.

இதற்கு அமைய, திருத்தங்களுக்கு உட்பட்டு நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலத்திற்கு குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. இந்தச் சட்டமூலத்தில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் நோக்கெல்லையுடன் தொடர்புபட்ட விடயங்களும் இருப்பதால் இதனை குறித்த குழுவுக்கு ஆற்றுப்படுத்தவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுன ஆரச்சி, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, திலின சமரக்கோன் மற்றும் சமன்மலி குணசிங்க ஆகியோரும், அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது