நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (08) புதன்கிழமை கறுப்புப்பட்டி அணிந்து பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டனர்.
சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் தங்களது எதிர்ப்பையும் கவலையையும் வெளிப்படுத்தும் அடையாளமாக இந்த நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.