நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்கள்;உயிர்ப்பலிகள் காணாமல் போன இரு T-56 துப்பாக்கிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையின் உள்ளக மோதல்கள் காரணமாக, இரு தரப்பிலும் மிகவும் கவலைக்கிடமான முறையில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் சிறைக்கைதிகள் 19 பேரும், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் உயிரிழந்த இருவருடன் சேர்த்து மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. இந்த மோதலில் சிறைச்சாலை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலை நிர்வாகம் என்பது சாதாரணமான ஒரு நிர்வாகம் அல்ல. அவர்கள் எந்தவித ஆயுதங்களும் இன்றி, வெறும் வாய்வார்த்தையினாலேயே கைதிகளைக் கட்டுப்படுத்துகிறார்கள்.

அதனால்தான் கைதிகள் பலரும் இவர்களை “எங்கள் அதிகாரிகள்” (அபே மஹத்துரு) என்று அழைக்கிறார்கள். ஆனால் இன்று அந்த அதிகாரிகளும் அடித்துக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலை வீசெட பாதுகாப்பு அதிகாரிகள் சிலரை கைதிகள் தூக்கி சென்று மலசல கூடத்திலுள்ள கொமட்டில் முகத்தை புதைத்து பொல்லுகள் மற்றும் கைகளால் தாக்கி கால்களால் உதைத்தே கொன்றுள்ளனர்.

மேலும், உள்ளே இருக்கும் கதவின் அருகே இருந்த ஒரு சிலைச்சாலை அதிகாரியை துக்கி சென்று ஒரு அறையில் போட்டு தலையில் மிக மனிதாபிமானம் அற்ற முறையில் காலால் உதைத்தே கொலை செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் போது இரண்டு T-56 ரக துப்பாக்கிகள் கைதிகளின் கைகளுக்குச் சென்றுள்ளன. சிறைச்சாலை அதிகாரி ஒருவர் ஜன்னல் வழியாகத் துப்பாக்கியை நீட்டும் காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டன.

உண்மையில், கைதிகள் T-56 துப்பாக்கியை ஜன்னல் வழியாக வெளியே நீட்டி பாதுகாப்புப் பிரிவினர் மீது சுட முயன்ற போதே, தடியால் அடித்து கைதிகள் தடுக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும், இந்த மோதலின் இறுதியில் 7 அதிகாரிகள் மிகக் கொடூரமான மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். தற்போது வரை இரண்டு T-56 துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளன. இந்தச் சம்பவத்தால் சிறை அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியில் திகைத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் உண்மைக் கதை என்னவென்றால், நேற்று முன்தினம் இந்த மோதல் ஆரம்பமானது போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரம் தொடர்பான பிரச்சினையினால்.

சிறைச்சாலையின் உட்பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் “கடுல்லகம சுரேஷ்” என்ற நபர் பற்றிய தகவல்களை கைதிகள் சிலர் அதிகாரிகளுக்கு வழங்கியமையே இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படுவதற்கான காரணமாக அமைந்தது.

அத்துடன் சிறைச்சாலையின் உட்பகுதியில் உள்ள மருத்துவமனை உடைக்கப்பட்டு, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகள், பரசிட்டமோல் உட்பட பல்வேறு வகையான மருந்துகள் கைதிகளால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவோடு இரவாக விசேட அதிரடிப்படை (STF) மற்றும் பொலிஸார் வரவழைக்கப்பட்ட போதிலும், அவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

அதிகாரிகள் வெறும் பேச்சுவார்த்தை மூலம் நிலைமையைக் கட்டுப்படுத்தியதை அடுத்து, நள்ளிரவு 12:45 மணியளவில் கூரையில் இருந்த கைதிகள் அனைவரும் கீழே இறங்கி தத்தமது அறைகளுக்குச் சென்றனர்.

கைதிகள் அடைக்கப்பட்டிருந்த அறைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. அவ்வாறானதொரு சூழ்நிலையில், கைதிகள் கீழே இறங்கியதும் அவர்களை மீண்டும் பாதுகாப்பான கூண்டுகளுக்குள் அடைக்கவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றவோ சிறைச்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஏனெனில், ஏற்கனவே எதிர் தரப்பைச் சேர்ந்த இருவர் உயிரிழந்திருந்த நிலையில், தாக்குதல் நடத்திய குழுவினரும் சுதந்திரமாகவே உலா வந்தனர்.

அதிகாலை 2-3 மணியளவில் பசி காரணமாக அவர்கள் கீழே வந்து, சிறைச்சாலை மைதானத்தின் ஆங்காங்கே உறங்கத் தொடங்கினர்.நேற்றுக் காலை நிலவரப்படி, நிலைமை சுமுகமாகிவிட்டதாகக் கருதிய சிறை அதிகாரிகள், நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கைதிகளை வெளியே அனுப்பவும், கைதிகளைப் பார்வையிட வந்த உறவினர்களுக்கு அனுமதி வழங்கவும் தயாராகிக் கொண்டிருந்தனர்.

சிறைச்சாலையில் உட்புறக் கதவு, வெளிப்புறக் கதவு என இரண்டு கதவுகள் உள்ளன. அவற்றிற்கு இடையே பாதுகாப்புக்கான விசேட பிரிவு (Special Unit) நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இரு குழுவினருக்கும் உள்ளே எரிந்து கொண்டிருந்த பகை மீண்டும் ஒரு கொடூர மோதலாக வெடித்தது. அப்போது கைதிகள் உட்புறக் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்து மோதலில் ஈடுபட்டனர்.

அந்த நேரத்தில், சிறைச்சாலையின் விசேட பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளை அவர்கள் தாக்கத் தொடங்கியுள்ளனர். நேற்று முன்திகம் இரவே இந்தச் சம்பவத்தை முழுமையாகத் தீர்த்து, கைதிகளைக் கூண்டுகளுக்குள் அடைத்திருக்க வேண்டும்.

கைதிகளை சுதந்திரமாக இருக்க அனுமதித்ததே இந்த வன்முறை மீண்டும் வெடிப்பதற்குக் காரணம் என்பதை சிறைச்சாலை நிர்வாகம் உணர்ந்திருக்க வேண்டும்.

தற்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு (CCD) விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. தாக்குதல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 10 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த நாட்களில் சிறை அதிகாரிகளுக்கு டெங்கு நோய் ஏற்பட்டிருந்ததால், பலர் விடுமுறையில் சென்றுள்ளனர்.இதனால் சிறையை நிர்வகிக்கக் குறைந்தளவிலான அதிகாரிகளே இருந்துள்ளனர்.

900 பேர் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு சிறைச்சாலையில் 2000க்கும் அதிகமானோரை அடைத்து வைத்திருந்ததே இந்த மோதல் இவ்வளவு விரைவாகப் பரவுவதற்குக் காரணமாகும்.

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்

Tamil_News_lrg_432121120260912210533

லண்டன் கார் பந்தயம்: விபத்தைத் தாண்டி 3-வது இடத்தைப் பிடித்து நடிகர் அஜித் சாதனை!

September 13, 2026

லண்டன்: லண்டனில் முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்த புகழ்பெற்ற ‘லீ மான்ஸ் கப்’ (Le Mans Cup) கார்

images - 2026-09-13T133956.877

“வார்த்தைகளை அளந்து பேசுவது அரசியல்வாதிகளின் கடமை!” – அவதூறு பேச்சுகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கண்டனம்

September 13, 2026

சென்னை: அரசியல் விமர்சனம் என்ற பெயரில் ஆபாசமாகப் பேசுவதும் மிரட்டல் விடுப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது

36a6a19c6587d011b2834d714207e935

“லீடர்னா என்னன்னே தெரியாம பேசுறது ஏமாத்து வேலை!” – பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேச்சு; முதலமைச்சருடன் ஒப்பிட்டுப் பரவும் சர்ச்சை!

September 13, 2026

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு (Leadership) குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி

26-6aa59dd45056b

லண்டன் கார் பந்தயத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த த்ரிஷா!

September 13, 2026

லண்டன்: இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தொடங்கி

ba4598f0-5b62-11ee-8789-13750be9e58d.jpg

“நாவைக் காக்க வேண்டும்”: திமுகவினரின் அநாகரிகப் பேச்சுக்குத் திருக்குறள் வழியே கனிமொழி கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு அறிவுரை

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“ஆ.ராசா மற்றும் சேகர்பாபுவின் பேச்சுகள் திமுகவின் வன்மத்தைக் காட்டுகிறது” – அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; ஆவணங்கள் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

September 13, 2026

துரை: அவசரநிலையின் போது மிசா சட்டத்தின் (MISA) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகவே அவர்

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை