நாட்டை அரசாங்கம் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது…

தற்போது இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள செயல்திறனற்ற ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் வேலை செய்யத் தெரியாத அரசாங்கமும் நமது நாட்டை நாளுக்கு நாள் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட அலுவலகத் திறப்பு விழாவில் நேற்று (26) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

தேயிலை, இறப்பர், ஆபரணம் மற்றும் இரத்தினக்கற்கள் போன்ற நமது நாட்டின் வளங்களை மேம்படுத்த அரசாங்கத்திற்கு இயலாது போயுள்ளது. பொய்யும் புரட்டும் கூறி மக்களை ஏமாற்றி வாக்குகளை வென்றவர்கள், தற்போது பொய்களாலும் புரட்டுகளாலும் அதிகாரத்தைத் தக்கவைக்க முயற்சித்து வருகின்றனர்.

பாராளுமன்றத்தில் ஜே.வி.பியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய அவர்களுக்கு முதலமைச்சர் வேட்பாளரை பெற்றுத் தருவேன் என நான் வாக்களித்துள்ளதாக பிரஸ்தாபித்தார். உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அவர் நடந்து கொள்வதாலயே அந்த வேட்பாளர் பதவியை பெற்றுத் தருவேன் என கூறியுள்ளார். திசைகாட்டியின் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்கு பின்னால் ஒழிந்து கொண்டே இவ்வாறு பொய்களை கூறி வருகிறார்.

இவை அனைத்தையும் செய்துகொண்டு நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கு மரண அடி கொடுத்து, உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. நீதிமன்றங்களின் அதிகாரத்தை அரசாங்கம் பலவந்தமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்படுகின்றது. இன்றும் கூட உயர்நீதிமன்றங்களில் வெற்றிடங்கள் காணப்பட்டாலும் அவற்றை நிரப்புவதற்கு இவர்கள் நடவடிக்கை எடுத்தபாடில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி எந்நேரத்திலும் திசைகாட்டி கூறும் அரசியல் இலஞ்சங்களைக் கொடுத்ததில்லை. நாட்டு மக்களை பொய்களாலும் புரட்டுகளாலும் ஏமாற்றி நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்ல முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி எப்போதுமே நாட்டிற்கான கடமையை ஆற்றிவருகின்றது.

கட்சியாக முதுகெலும்புடன் நின்று சுதந்திரமான, பக்கச்சார்பற்ற நீதிமன்றம் குறித்துப் பேசும் உரிமை ஐக்கிய மக்கள் சக்திக்கு மாத்திரமே காணப்படுகின்றது. ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களைப் போல நாம் கனம் நீதிபதிகளைப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு அழைத்து அழுத்தம் கொடுக்கவில்லை.

இன்றும் கூட முதுகெலும்புடன் மக்களின் முன்னால் நிற்பதற்கும், நீதிமன்றத்திற்காகக் குரல் கொடுப்பதற்கும் ஐக்கிய மக்கள் சக்தியால் மாத்திரமே முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

E7OQZHSI4BFLXIQ6AVSVBLR2IE

பெர்லின் பிரைட் (Berlin Pride) நிகழ்வில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியல் ஃபியர்டே (Fierté Montreal) பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது

July 28, 2026

கடந்த வார இறுதியில் பெர்லின் பிரைட் நிகழ்வில் ஒரு நபர் கொல்லப்பட்டுப் பல காயமடைந்த தாக்குதலைத் தொடர்ந்து, மொன்றியல் ஃபியர்டே

IHRULYUKZJG3VPPAZFZSRKMH2M

சிறுவர்களை காரில் வைத்துக்கொண்டு அதிவேகமாக காரைச் செலுத்திய ஓட்டுநருக்கு வழக்கு பதிவு

July 28, 2026

திங்கட்கிழமை காலை 10 ஆவது வீதியில் (10th Line) மணிக்கு 50 கி.மீ வேகம் அனுமதிக்கப்பட்ட பகுதியில், மணிக்கு 93

savak

சாவகச்சேரி நகர சபையின் விசேட கூட்டம்

July 28, 2026

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை உறுப்புரிமையில் இருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி

arjun

அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை

July 28, 2026

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி

ne

நீர்கொழும்பு சிறை கலவரம்;சந்தேக நபர்களாக நால்வர்!

July 28, 2026

அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் மற்றும் 6ஆம்

ner

அரச சேவையில் தேசிய நேர்மை வாரம்!

July 28, 2026

அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா”

photo-collage.png (3)

ஓகஸ்ட் 30; சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் குறித்த விசேட சந்திப்பு

July 28, 2026

எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில்

sea

அவசர வானிலை எச்சரிக்கை!

July 28, 2026

பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கல்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது

sa

நாட்டை அரசாங்கம் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது…

July 28, 2026

தற்போது இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள செயல்திறனற்ற ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் வேலை செய்யத் தெரியாத அரசாங்கமும் நமது நாட்டை நாளுக்கு நாள்

spo

மெய்வல்லுநர் தெரிவுக்குழு இராஜினாமா!

July 28, 2026

இலங்கை மெய்வல்லுநர் போட்டிகளுக்கான தெரிவுக்குழு உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, அவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக

YQIVVADQMVALHP6FFWJKTJMBMI

அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் பயணித்த வாகனம் 140 கி.மீ வேகத்தைத் தொட்டதால் பொலிஸார் துரத்துவதைக் கைவிட்டனர்

July 28, 2026

திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகநபரின் வாகனத்தைப் பொலிஸார் டான் வேலி பார்க்வேயில்

Arrest

தனியார் வகுப்பு நிலைய உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது

July 28, 2026

ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரணை,