நாட்டில் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கல் அல்ல – பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க

நாட்டில் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்காகவே தவிர அரசியல் பழிவாங்கல்கள் அல்ல. கடந்த காலங்களில் குறிப்பிட்ட அரசியல் வர்க்கத்தினருக்கும், ஆதாரவாளர்களுக்கும் சட்டம் தன் கடமையை செய்ய தவறியதாக குற்றச்சாட்டுகள் காணப்பட்டன. அத்தகைய நிலைமை தற்போது மாற்றப்பட்டுள்ளது என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தெரிவித்ததாவது,

நாட்டில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மூன்று முக்கிய கைது நடவடிக்கைகள், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் அல்ல. கடந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட அரசியல் வர்க்கத்தினருக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் சட்டம் தன் கடமையைச் செய்யத் தவறியதாகவும், அதன் காரணமாகவே பாதாள உலகக் குழுவினரின் செயல்பாடுகள் மற்றும் சட்டவிரோத செயல்கள் அரசியல் பின்னணியுடன் தொடர்ந்து நீடித்து வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தற்போது அந்த நிலைமை மாற்றப்பட்டு, பொதுச் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துதல், நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுத்தல், பாதாள உலகக் குழுவினருக்கு உதவுதல் மற்றும் அரச வங்கிகளில் கடன்களைச் செலுத்தாமல் ஏமாற்றுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக எவ்வித பாகுபாடுமின்றிச் சட்டம் கடுமையாகப் நடவடிக்கைகளை எடுகக்கப்படுகிறது. அத்துடன் இலங்கையின் சொத்துக்களை யாராவது முறைகேடாகப் பெற்றிருந்தால், அவர்கள் அவற்றை இப்போதே சரிசெய்துகொள்ள வேண்டும்.

குறித்த கைதுகளை எதிர்க்கட்சிகள் அரசியல் பழிவாங்கல் என்று விமர்சிப்பது உண்மைக்கு புறம்பானது. நாட்டின் கடந்த கால வரலாற்றை மக்கள் மறந்துவிடவில்லை. கடந்த 1983 ஆம் ஆண்டு கொழும்பில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்தவை, அதற்குப் பின்னர் சுமார் 70,000 இளைஞர்கள் பழிவாங்கப்பட்டமை, அரசியல் ரீதியாக முரண்பட்ட அரச அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் அன்றைய அரசியல் அமைப்பிற்கு எதிராகச் செயல்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டமை ஆகியவையே உண்மையான பழிவாங்கும் நடவடிக்கைகள் ஆகும்.

தற்போது அரசாங்கத்திற்கு இவர்களால் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும், நீதிமன்றங்களின் எண்ணிக்கையை 3 இல் இருந்து 11 ஆக உயர்த்தி, தேவையான அதிகாரிகளை நியமித்து சட்ட அமுலாக்க நிறுவனங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளதால், சட்டம் தனது கடமையைச் சுயாதீனமாகச் செய்கிறது. இதனை பொதுமக்களும் ஒரு சாதாரண விடயமாகவே கருதுகின்றனர்.

மேலும், நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை அரசாங்கம் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்று கூறுமுடியாது. கடந்த ஒன்றரை வருடங்களாக கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ஒழிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவகிறது.

டெங்குவில் உள்ள 4 மாறுபாடுகளில் தற்போது பரவி வரும் குறிப்பிட்ட ஒரு மாறுபாடு தீவிர காய்ச்சலை ஏற்படுத்தக்கூடியது. பொதுவாக 4 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாறான பாதிப்பு அதிகரிப்பு ஏற்படுவது வழக்கம் என்பதால், தற்போது பதிவுகள் அதிகமாக உள்ளன. பிரதமரின் தலைமையின்கீழ் கொழும்பு மாவட்டத்தில் விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கழிவு முகாமைத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் தூய்மையைப் பேண பொதுமக்களும் உள்ளூராட்சி மன்றங்களும் அரசாங்கத்துடன் இணைந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்ந்து வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் வெறும் குப்பைகளை அகற்றுவதுடன் மாத்திரமன்றி, நாட்டின் பிரதான பிரச்சினைகளாகக் காணப்படும் கால்வாய்கள் மற்றும் குப்பை முகாமைத்துவப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பில்லியன் கணக்கிலான நிதியைப் பயன்படுத்தி, கொழும்பு மத்திய போக்குவரத்து மத்திய உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இத்திட்டத்தின் பலனைப் பொதுமக்கள் நேரடியாக அனுபவித்து வருகின்றனர் என்றார்.

si

அரசின் செயற்பாடுகள் ஐனநாயகத்திற்கான அச்சுறுத்தலாக உருவாகிக் கொண்டிருக்கின்றன – சித்தார்த்தன்

June 27, 2026

மிகக் கொடூரமான ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் நடைபெறவில்லை. கட்சிகளும் மக்களும் ஒன்றிணைந்து தொடர்ச்சியான எதிர்ப்புகளை தெரிவிப்பதன்

iran

எங்களின் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்கானது மட்டுமே – ஈரான்

June 27, 2026

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதை நோக்கியதாக மாறாமல் இருப்பதை உறுதிசெய்ய, அங்கு “மிகவும் வலுவான சோதனை மற்றும்

veni

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 589 ஆக அதிகரிப்பு

June 27, 2026

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 589 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு ஊடகங்களின் செய்திகளின்படி, சுமார் 2,980 பேர்

Praga

யாழ்.சர்வதேச விளையாட்டரங்கு திட்டத்தில் மாற்றம்!

June 27, 2026

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முந்தைய நிறைவேற்றுச் சபையினால் யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமான சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கம் ஒன்றை நிர்மாணிக்க ஆரம்பிக்கப்பட்ட திட்டம்

death

மட்டு. வைத்தியசாலையில் குழந்தையைப் பிரசவித்த பெண் டெங்குவால் உயிரிழப்பு

June 27, 2026

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர், அண்மையில் பெண்குழந்தையை பெற்றெடுத்த

Selvam

மனித எச்சங்கள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென்றால் அது செம்மணி புதைகுழியாகவே இருக்கும் – செல்வம் அடைக்கலநாதன்

June 27, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளின் போது உதய கம்மன்பிலவின் செயற்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

acci main

அதிவேக நெடுஞ்சாலையில் 5 வாகனங்கள் தொடர் விபத்து

June 27, 2026

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம மற்றும் தொடங்கொட பகுதிகளுக்கு இடையிலுள்ள 31ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற

arres

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் ஒருவர் கைது

June 27, 2026

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டை தயாரித்து மோசடி செய்த

CWY7Q7QYY5DLXEWDI2XETVXMWU

முக்கிய ஆதாரங்கள்’ பறிமுதல்: கேப் பிரெட்டன் நபர் மீது பாலியல் கடத்தல் குற்றச்சாட்டு

June 26, 2026

இந்த வார தொடக்கத்தில் வீடு ஒன்றிலிருந்து “முக்கிய ஆதாரங்களை” பறிமுதல் செய்துள்ளதாகக் கூறியுள்ள காவல்துறையினர், அதனைத் தொடர்ந்து கேப் பிரெட்டன்

police rcmp

நியூ பிரன்சுவிக் (N.B.) பால்மோரல் அருகே விபத்தில் ஒருவர் பலி: இரண்டு வாகனங்களைத் தேடும் முக்கிய குற்றப் புலனாய்வுப் பிரிவு

June 26, 2026

கனடாவின் நியூ பிரன்சுவிக் (New Brunswick) மாகாணத்தில் உள்ள பால்மோரல் அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

hamilton police1

ஹாமில்டனில் வாகன நிறுத்துமிடத் தகராறு: பெண்ணை தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கிய இரு பெண்கள் கைது

June 26, 2026

ஒன்டாரியோவின் ஹாமில்டன் (Hamilton, Ont.) நகரில் கடந்த வார இறுதியில் வாகனத்தை நிறுத்தும் இடம் (Parking spot) தொடர்பாக ஏற்பட்ட

10_thirumavalavan-expresses-anguish-over-criticisms-26-06-2026

இழிவாக விமர்சித்து வருகிறார்கள்; வீடியோ வெளியிட்டு திருமாவளவன் ஆதங்கம்!

June 26, 2026

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் தனது அரசியல் பயணம் மற்றும் எதிர்கொண்டு வரும் விமர்சனங்கள் குறித்து வீடியோ வாயிலாக விரிவான