நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதத்தை தூண்டுவதற்கு வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் முற்படுகின்றனர்

“வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதத்தை தூண்டுவதற்கு முற்படுகின்றனர். இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது” என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் காலகாலமாக இனவாதப் பிரச்சினைகள் மேலோங்கியே காணப்பட்டன. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வஞ்சிக்கப்பட்டனர். ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

எனினும், நாடாளுமன்றத்தில் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு வாழ்ந்த அரசியல்வாதிகள் இன நல்லிணக்கத்தை மற்றும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மாறாக இன ரீதியான பாகுபாட்டுக்கு தீணி போடுபவர்களாகவே செயற்பட்டனர். இப்படியானவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் சலுகைகள் எதற்கு? எனவே, ஓய்வூதியம் தேவையில்லை எனவும் அமைச்சர் கூறினார்.

ஊடகவியலாளர்களுக்காக பல்வேறு நலன்புரி திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன – அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன

ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில் திட்டங்கள், பிரதேச ஊடகவியலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டத்துடன் அரச பங்களிப்புடன் சுகாதார காப்புறுதிகளை வழங்கவும் எதிர்பார்த்துள்ளோம். இந்த வருடத்தில் அதனை செயற்படுத்துவதற்குள்ளோம். இதன்படி ஊடகவியலாளர்களுக்காக பல்வேறு நலன்புரி திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன என வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் டி சில்வா முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தனியார் ஊடகங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கின்றன. ஊடக நிறுவனங்கள் மூடப்படுதல், ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் செலுத்தப்படாமைஈ முறையாக சம்பளம் வழங்கப்படாமை உள்ளிட்ட முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

ஆனால் தனியார் ஊடக நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாக இயங்குவதால் அவர்களின் சம்பளம் மற்றும் தொழில் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சுக்கு தலையிடுவதற்கான அதிகாரங்கள் குறைவாகும். தொழில் சட்டத்தின் கீழ் அந்த விடயம் இருப்பதால் தொழில் திணைக்களத்தின் ஊடாகவே நடவடிக்கை எடுக்கப்படும்.

எவ்வாறாயினும் ஊடகவியலாளர்கள் என்ற ரீதியில் அவர்களுக்கான கௌரவம் வழங்கும் வகையில் அரச தகவல் திணைக்கள பணிப்பாளரால் சகல ஊடக நிறுவனங்களுக்கும் முறையாக கொடுப்பனவுகளை வழங்குமாறு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் என்ற ரீதியில் அவர்களுக்கு முறையாக கொடுப்பனவுகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இதேவேளை அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திற்கமைய எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களுக்காக பட்டய நிறுவனத்தை தொடர்பான சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது.

அது கூடிய விரைவில் வர்த்தமானியில் அறிவிக்கப்படும். ஊடகவியலாளர்களை தொழில்சார் உரிமைகளுடன் கௌரவமாக பணியாற்றக்கூடிய வகையில் பொருத்தமான நிறுவனத்தை அமைக்கும் வகையில் இது அமையும்.

ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில் திட்டங்கள்,பிரதேச ஊடகவியலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டத்துடன் அரச பங்களிப்புடன் சுகாதார காப்புறுதிகளை வழங்கவும் எதிர்பார்த்துள்ளோம்.

இந்த வருடத்தில் அதனை செயற்படுத்துவதற்குள்ளோம். இதன்படி ஊடகவியலாளர்களுக்காக பல்வேறு நலன்புரி திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன என்றார்.

dac

ஒன்டாரியோ அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கக்கு புதிய திட்டம்

March 12, 2026

ஒன்டாரியோ அரசு, ஆரம்பப்பள்ளி வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டிலும் வகுப்பறை உபகரணங்களை வாங்குவதற்காக நேரடியாக $750 நிதியை வழங்கும் வகுப்பறை

un

ரஷ்யாவின் தீர்மானம் தோல்வி

March 12, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய போர் சூழல் தொடர்பாக ரஷ்யாவினால் முன்வைக்கப்பட்ட தீர்மானம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்படாமல்

oil

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

March 12, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச சந்தையில்

lep

எலி காய்ச்சலால்: 1,800 பேர் பாதிப்பு!

March 12, 2026

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1,800 எலி காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார

ma

நிபந்தனைகளுடன் போரை முடிக்க தயார் – ஈரான்

March 12, 2026

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். டெஹ்ரானின் நியாயமான உரிமைகளை அங்கீகரித்தல்,

arrest

நோட்டன் பிரிட்ஜ் ஒஸ்போன் வனப்பகுதியில் மரையை வேட்டையாடிய குற்றச்சாட்டில் இருவர் கைது!

March 12, 2026

ஹட்டன் வனப்பகுதிக்குச் சொந்தமான நோட்டன் பிரிட்ஜ் ஒஸ்போன் வனப்பகுதியில் கம்பி பொறியைப் பயன்படுத்தி மரை ஒன்றினை வேட்டையாடி அதிக விலைக்கு

tru

ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ மிகப்பெரிய வெற்றி

March 12, 2026

ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) இராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்று

ham

 சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் : 2 இந்தியர்கள் பலி?

March 12, 2026

ஹார்மூஸ் நீரிணையில் தாய்லாந்து, பிரிட்டிஷ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் 2

Air ind

போர் காரண​மாக விமான கட்டணம் அதிகரிப்பு?

March 12, 2026

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரண​மாக, விமான எரிபொருள் விலை அதி​கரித்​துள்​ள​தால், ஏர் இந்​தியா நிறு​வனம் விமானக் கட்​ட​ணங்​களை

ir

பாடசாலையில் நடத்தப்பட்ட தாக்குதல் இலக்குத் தவறு – இராணுவ விசாரணை

March 12, 2026

ஈரானின் மினாப் பகுதியில் உள்ள பாடசாலையில் நடந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும், இதில் 175 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்,

mod

இந்தியா எப்போதும் தனது குடிமக்களை தவிக்க விடுவதில்லை

March 12, 2026

இந்தியா எப்போதும் தனது குடிமக்களை வெளிநாடுகளில் சிக்கித் தவிக்க விடுவதில்லை. மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் அங்குள்ள இந்தியர்களுக்கு

mal

அமெரிக்க தூதுவராக பீட்டர் மண்டல்சன் நியமனம்

March 12, 2026

அமெரிக்காவிற்கான பிரித்தானியத் தூதுவராக பீட்டர் மண்டல்சன் (Peter Mandelson) நியமிக்கப்பட்டது தொடர்பான முதல் கட்ட அதிகார பூர்வ ஆவணங்களை ஐக்கிய