தேர்தல்கள் தொடர்பான சட்டங்கள் மீளாய்வு யோசனைகள்

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பராாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு முன்மொழிவுகளை சமர்ப்பிக்க அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் ஆரம்பகட்ட கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளது.

பத்தாவது பாராளுமன்றத்திற்கான “தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகள் மற்றும் விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்காக, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைவான பாராளுமன்ற விசேட குழுவிற்கு பொது மக்களின் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் கோரப்பட்டிருக்கின்றன.

இந்த பின்னனியில், இதன் நோக்கங்களை முஸ்லிம் சமூக அரசியல் நோக்கில் விரிவாக ஆராய்ந்து விதப்புரைகளை வழங்க வேண்டிய தேவையும், கொள்கை வகுப்பாளர்களின் இறுதி முடிவு நோக்கு நிலைகள் வடிவம் பெறும் பின்னனி தேடல்கள் எவ்வாறு அமையப்போகின்றன மற்றும் இது சார்ந்த ஏனைய விடயங்களை ஆராயும் நோக்கில் துறைசார் நிபுணர்களுடனான முதற்கட்ட கலந்துரையாடல் ஒன்றை அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தலைவர் ஷாம் நவாஸ் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப கட்ட கலந்துரையாடலில், இலங்கை தேர்தல் திணைக்களத்தின் முன்னாள் பிரதி தேர்தல்கள் ஆணையாளரும், தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான எம்.எம். மொஹமட், அரசியலமைப்புப் பேரவையின் முன்னாள் உறுப்பினரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜாவிட் யூசுப், சிரேஷ்ட சட்டத்தரணியும் மனித உரிமை ஆர்வலருமான ருஷ்தி ஹபீப், கொழும்பு பல்கலைக்கழ சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம்.ஹகீம், சிரேஷ்ட சட்டத்தரணி யூசுப், பாராளுமன்றத்தின் சிரேஷ்ட ஆய்வாளரும் கொள்கை மதிப்பீட்டாளருமான அஜ்வதீன், லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தின் முன்னாள் ஆய்வாளரும், அரசியல் தொடர்பாடல் நிபுணருமான ஏ.ஜீ.நளீர் அஹமட் ஆகியோர் பங்கேற்று தமது அவதானிப்புகளை முன்வைத்து கருத்து பரிமாற்றங்களில் ஈடுபட்டனர்.

முஸ்லிம் அரசியல் தரப்புகளைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், தேர்தல்கள் தொடர்பான நிபுணர்கள், கொள்கை ஆய்வாளர்கள், கொள்கை ஒப்பீட்டாளர்கள், முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கிட்டிய காலத்தில் அடுத்த கட்ட இக்கலந்துரையாடலை நடத்தி இறுதி தீர்மானத்தை எட்டுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

982673

தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வருத்தப்படுகின்றனர் – சென்னை மேயர் பிரியா!

June 24, 2026

சென்னை: சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த

7

மின் வாரியத்தில் 401 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய்!

June 24, 2026

சென்னை: கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், மின்சார வாரியத்திற்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 401 பேருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய்

6

பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய் சிபிஐ(எம்)-க்கு எப்போதும் இல்லை! – போஸ்டரால் பரபரப்பு

June 24, 2026

சென்னை: தமிழக அரசியல் களத்தில் தவெக அரசுக்கான ஆதரவு விவகாரம் பெரிய பிளவை உருவாக்கியுள்ளது. தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்ததற்காக

5

தைலாபுரத்தில் இன்று ராமதாஸ்-அன்புமணி சந்திப்பு: கட்டியணைத்து அழுத தந்தை ராமதாஸ்!

June 24, 2026

திண்டிவனம்: பாமக-வின் பிளவு மற்றும் ராமதாஸ் – அன்புமணி இடையேயான கருத்து வேறுபாடுகளால் கடந்த சில மாதங்களாக அக்கட்சியின் செயல்பாடுகள்

arrestt

36 கிலோ கிராம்  (Hashish) -கனடா பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

June 24, 2026

சுமார் 35 கிலோ கிராமிற்கும் அதிக எடையுடைய கஞ்சா (Hashish) போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 18 வயதுடைய

730732303_1036117958871627_4138093801309942397_n

பொலிசாருக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்!!

June 24, 2026

கடந்த 22. 06.2026 அன்றைய தினம் கிளிநொச்சி பொலிஸ் நிலைய முன்பாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பொழுது அதிவேகமாக

images (11)

கேப்பாபுலவு பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி தொடர் போராட்டத்தில் குதித்த மக்கள் ; ஆளுநரிடம் அவசர கோரிக்கை

June 24, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு பகுதியில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மக்கள் இராணுவ படைத்தலைமையகத்தின் முன்பாக இன்று (24)

parliment

16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய இலங்கை நடவடிக்கை

June 24, 2026

சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களை (Social media platforms) அணுகுவதைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தனிநபர் சட்டமூலம் (Private Member’s

4

சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல! – ஜெயக்குமார் ஆவேசப் பதிவு!

June 24, 2026

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் திமுக-வை நையாண்டி செய்து பேசிய குட்டிக்கதை, எதிர்க்கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

3

பட்டியலின மக்களுக்கு மறுக்கப்பட்ட ஆலயப் பிரவேசம்; அதிரடி காட்டிய தமிழக அரசு!

June 24, 2026

கரூர் மாவட்டம்: கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம், புஞ்சை கடம்பன்குறிச்சி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மற்றும் அருள்மிகு

sajith 2026

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்தி, மாகாண சபைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

June 24, 2026

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நாட்டின் உச்சக்கட்ட சட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதால் அது பாதுகாக்கப்பட வேண்டும். எனினும், அதனைப்

2

இன்னும் நடிகராகவே செயல்படுகிறார் முதலமைச்சர் விஜய்! – சிவசங்கர் அதிரடிப் பேட்டி!

June 24, 2026

சென்னை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் திமுக மீது முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர், அண்ணா