தேர்தலுக்காகவே நடிகர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் பெரிதாக்கப்படுகிறன!

தவெக தலைவர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து நான் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிர அரசியலில் ஈடுப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதன் முறையாக தேர்தல் களத்தை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எதிர்க்கொள்ள உள்ளது.வீட்டில் இருந்து அரசியல் செய்கிறார், அறிக்கை அரசியல் என வைக்கப்பட்ட விமர்சனத்தை உடைக்கும் வகையில் மக்கள் சந்திப்பை விஜய் முன்னெடுத்தார். கடந்த ஆண்டு கரூர் சம்பவம் முதல் ஜனநாயகன் தணிக்கை சான்று வரை தொடர்ந்து வழக்குகளில் சிக்கி வருகிறார்.

இது அவருக்கு நெகட்டிவாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், அதனை தகர்த்தெறியும்படி இருந்தது தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம். தொடர்ந்து மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார் விஜய்.இதற்கிடையே, கட்சித் தொடங்கிய போது தவெகவுடன் கூட்டணி அமைத்தால்,ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று கூறினார். இதில், விசிக இணையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அது நடக்கவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற குண்டை தூக்கி எறிந்தது. இதனால், திமுக அதிர்ச்சி அடைந்தது. மறுப்புறம் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது.

இதனால், திமுகவை விட்டு வெளியேறி காங்கிரஸ் – தவெக கூட்டணி அமைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் சொன்ன போலிட்டிகல் பார்ம் வொர்க்காமல் போனது. இதனால் விஜய் போட்டு இருந்த கூட்ட்ணி கணக்கும் முடிவுக்கு வந்தது. இந்த சூழலில்,விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, ஒட்டு மொத்த தமிழகத்தின் பார்வை விஜய் மீது.காரணம் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறியது.இது அவரது ரசிகர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக, சென்னை நடந் த பிரபல தயாரிப்பாளர் நிகழ்ச்சில் விஜய் கலந்துக் கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது.

.இதனால்,சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித்லைவர்கள் மற்றும் நடிகை கருத்து தெரிவித்து வந்த நிலையில், இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனும் கூறியிருந்ததார். இது பேசுப்பொருளானது. இந்த நிலையில், அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :நடிகர் விஜயின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து நான் எந்தவிதமான கருத்தையும் வெளியிடவில்லை. அதேபோல் அவரது அரசியல் வருகை பற்றியும் நான் கருத்து தெரிவிக்கவில்லை.

விஜயை நான் மரியாதையுடன் நடந்து கொள்கிற, அமைதியான இணை நடிகராக மட்டுமே அறிந்திருக்கிறேன். மேலும் அவரது தாயாரைப் பற்றியும் எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உள்ளது. எனக்கு தெரிந்த தகவல் அதுவரை மட்டுமே.

சமீபத்தில் நான் மேடையில் பேசிய சில வரிகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, அவை விஜயின் அரசியல் வருகையுடனும் தற்போது அவரது தனிப்பட்ட விஷயங்களுடனும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. ஒரு நாளிதழ் என்னிடம் கருத்து கேட்டபோது, தனிப்பட்ட விஷயங்களையும் அரசியல் செயல்பாடுகளையும் மக்கள் தனித்தனியாக புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர்கள் என்றும், தேர்தல் காலம் என்பதால் இந்த விஷயத்திற்கு தேவைக்கு மீறிய கவனம் கிடைக்கிறது போல தெரிகிறது என்றும் மட்டுமே நான் கூறினேன்.

மேலும் ஒரு விஷயத்தைச் சேர்த்துக் கூற விரும்புகிறேன். பெண்களின் உரிமைகள் குறித்து உண்மையாகவே அக்கறை இருந்தால், சமூகத்தில் இன்னும் பல பெண்கள் வன்முறை மற்றும் அநீதிகளை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு சட்ட உதவி, பொருளாதார பாதுகாப்பு, சில நேரங்களில் அன்றாட உணவுக்கூட இல்லாத நிலை உள்ளது. அவர்களுக்கும் நம்முடைய கவனமும் ஆதரவும் சம உரிமை கிடைக்க வேண்டும்.எனவே, எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும் தவறான புரிதலை சரிசெய்யவும் இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

puputhu

ஆகஸ்ட் மாதம் முதல் மின்வெட்டு ஏற்படும் அபாயம் – முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை

March 9, 2026

நாட்டில் கடந்த பத்து நாட்களாக நிலக்கரி ஏற்றிய கப்பல்கள் எதுவும் வருகை தராத காரணத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல்

ni

புதிய தவிசாளராக றியாஸ் ஆதம் தெரிவு!

March 9, 2026

நிந்தவூர் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதுடன் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார். அம்பாறை

en

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி விபத்தில் உயிரிழப்பு

March 9, 2026

இன்று (09) மாலை வாத்துவ ரயில் நிலையத்திற்கும் பின்வத்தை ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள ரயில் பாலத்தின் மீது, இரண்டு

fire

கடும் வறட்சி; பற்றி எரியும் காடு

March 9, 2026

மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலையைத் தொடர்ந்து, ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியின் அளுத்கம பகுதியில் நேற்று

ha

“வளமான நாட்டின் அபிமானம் – அவளே நாட்டின் முன்னோடி” – பிரதமர்

March 9, 2026

பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் சட்டப் புத்தகங்களுக்குள் மட்டும் முடங்கிவிடாமல், அவை ஒவ்வொரு பெண்ணும் நிஜ வாழ்க்கையில்

arrest

பல  காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது 

March 9, 2026

ஹட்டன் பகுதியில் பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப்

wil

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

March 9, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கை

keri

கேரி கிர்ஸ்டன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம்

March 9, 2026

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன்

thekk

வன்னியில் தேக்குமரக் குற்றிகளை கடத்திய சாரதி கைது

March 9, 2026

வன்னி பகுதியில் இருந்து தேக்குமரக் குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்த லொறி ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் புத்தூர் சந்தி பகுதியில்

pu

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து

March 9, 2026

ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முஜ்தபா காமேனிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு

sa vas

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது

March 9, 2026

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை

ta

தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயம்

March 9, 2026

பத்தேகமவில் உள்ள பாடசாலையொன்றில் இன்று (9) மதியம் தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பத்தேகம