தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : பிரிவினைவாதத்தைத் தோற்கடிக்க ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களும் ஒன்றிணைய அழைப்பு!

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் ஒற்றையாட்சிக்கும் அச்சுறுத்தலாக அமையும் வகையில் மீண்டும் தலைதூக்க முனையும் பிரிவினைவாதக் கருத்தியல்களையும் அதற்குத் தூண்டுதல் அளிக்கும் சக்திகளையும் தோற்கடிப்பதற்கு, இனம், மதம், கட்சி பேதங்களைக் கடந்து ஒட்டுமொத்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என இராணுவ வீரர்களின் பெருஞ்சுவர் அமைப்பின் அழைப்பாளர் பந்துல அத்துகோரல அழைப்பு விடுத்துள்ளார்.

இராணுவ வீரர்களின் பெருஞ்சுவர் அமைப்பின் காரியாலயத்தில் இன்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில நாட்களாக இந்நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அல்லது பிரிவினைவாதக் கருத்தியலுக்கு தூண்டுதல் அளிக்கும் வகையிலான சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமையினாலேயே நாம் இந்த ஊடகவியலாளர் சந்திப்பைக் கூட்டியுள்ளோம். இது தொடர்பாக, ஓய்வுபெற்ற மற்றும் சேவையை நிறைவு செய்த இராணுவ வீரர்களின் சங்கம் என்ற ரீதியில் எமது நிலைப்பாட்டை வெளியிடுவதே இதன் நோக்கமாகும்.

குறிப்பாக, 1990 ஜூன் மாதத்தில் கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் நிலையங்களில் இருந்த சுமார் 600 ஆயுதமற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் படுகொலை செய்யப்பட்டனர். ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டமையானது இரண்டாவது ஈழப் போரின் ஆரம்பத்தைக் குறித்தது.

ஜூன் 11ஆம் திகதி நடைபெற்ற அந்தச் சோகமான சம்பவத்தை நாம் மிகுந்த மனவேதனையுடன் நினைவுகூருவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேபோல், 1987 ஜூன் மாதம் 4ஆம் திகதி இந்திய அரசாங்கத்தினால் எமது வான் பரப்பு வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டது.

முப்பது ஆண்டுகால மோதலுக்குள் சர்வதேச தலையீடுகள் எமது நாட்டுக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தின என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும், இந்தியப் பிரதமரான ராஜீவ் காந்தியை தேர்தல் பிரச்சாரத்தின் போதும், எமது நாட்டின் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசவை மே தின பேரணியிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பே படுகொலை செய்தது.

அத்தகைய கொடூரமான அமைப்பைத்தான் 2009 மே 18 அன்று நந்திக்கடல் களப்பில் வைத்து எமது இராணுவ வீரர்கள் முழுமையாகத் தோற்கடித்தனர்.

இந்த யுத்தத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முப்படைகள், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படை உட்பட அனைவரும் உண்மையான இராணுவ வீரர்கள் ஆகும்.

இந்தியப் பிரதமர் ஒருவரையே படுகொலை செய்யும் அளவுக்குப் பலம் வாய்ந்த பிரிவினைவாத பயங்கரவாதத்தை இலங்கையின் ஆயுதப் படைகளே முடிவுக்குக் கொண்டு வந்தன.

ஆனால், கடந்த சில நாட்களாக நாம் பல்வேறு விடயங்களைக் காண்கிறோம். இராணுவ வீரர்களின் பெருஞ்சுவர் என்ற ரீதியில் எமது அமைப்பு பிரிவினைவாதத்தை முற்றாக எதிர்க்கிறது. அன்று போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டு, இரண்டாகப் பிரியவிருந்த நாட்டை, எமது அரசியலமைப்பை பாதுகாக்க முப்படைகளாலும் அரசியல் அதிகாரத்தினாலும் முடிந்தது.

அவ்வாறு பாதுகாக்கப்பட்ட நாடு மற்றும் அரசியலமைப்பு என்பவற்றின் காரணமாகவே, இன்று தமிழ் புலம்பெயர் சமூகத்தினரதும் பிரிவினைவாதக் குழுக்களினதும் பிரதான இலக்காக இந்த இராணுவ வீரர்கள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து எமது பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துக்கொள்கிறோம். இனிவரும் காலங்களில் பிரிவினைவாதக் கருத்துக்களைத் தோற்கடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேவேளை, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியிற்குச் சென்று, ஏற்படவிருக்கும் இந்த ஆபத்து குறித்து அவர்களை விழிப்புணர்வூட்டும் பணிகளிலும் ஈடுபடுவோம்.

55OGDDGBRNDMDLRPGLCJT6AH5Q

கேப் பிரெட்டன் (Cape Breton) தீ விபத்து நடந்த இடத்தில் சடலம் மீட்பு; காவல்துறையினர் தீவிர விசாரணை

July 27, 2026

மெக்ஆடம்ஸ் ஏரி பகுதியில் நடந்த உயிரிழப்பை ஏற்படுத்திய தீ விபத்து குறித்து கேப் பிரெட்டன் பிராந்திய போலீசார் விசாரணை நடத்தி

7

அடையாளம் தெரியாத நபர் தொல்லை: மேயர் பிரியா பரபரப்பு புகார்!

July 27, 2026

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வரும் பிரியா, தனக்கு சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம்

6

ஆட்சிக்கு வந்த இரண்டரை மாதங்களில் ரூ.20,881 கோடி கடன்- தவெக அரசை விளாசிய கீதாஜீவன்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்

ED5JQPYN5NF6XDCAHMETPYHFMM

காணாமல் போன 23 வயது டொராண்டோ பெண்ணைத் தேட கட்டளை மையம் (Command Post) அமைப்பு

July 27, 2026

டிக்சன் மற்றும் மார்ட்டின் குரோவ் வீதிகளுக்கு அருகே கடைசியாகக் காணப்பட்ட 23 வயது பெண்ணை டொராண்டோ போலீசார் தேடி வருகின்றனர்.

AAFNGBSIVY7P5CLUU3MZCILP4M

ஆஜாக்ஸ் பூங்காவில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியில் காரை ஓட்டிச் சென்றதாக நபர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு

July 27, 2026

இம்மாத தொடக்கத்தில், ஆஜாக்ஸ் (Ajax) பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியிலும் நடைபாதைகளிலும் காரை ஆபத்தான முறையில்

XUP2KI6NKFC6BB6QNVCW5Y4UCQ

அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு; அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

July 27, 2026

அமெரிக்க தூதரகத்திற்கு அருகே அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்திற்கு

Rev.ASirisumana-263x263

யுத்த காலத்தில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க காவி உடையும் பிக்குகளின் தியாகமும் முக்கிய பங்கு வகித்தது – அகலகட சிறிசுமண தேரர்

July 27, 2026

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்தில் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் பௌத்த பிக்குகளும், காவி உடையும்

5

காமன்வெல்த் போட்டியில் சாதித்த தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி!

July 27, 2026

ஹைதராபாத்: கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு தொடரில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி

missing per fa

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு: யாழ்ப்பாணத்தில் ஓகஸ்ட் 30இல் நடத்த ஏற்பாடு!

July 27, 2026

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட சர்வதேச மாநாடு ஒன்றை

jaffna court

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: “சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது” – எதிர்மனுதாரர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி கடும் வாதம்!

July 27, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கில், “குற்றவாளிகளோ அல்லது சந்தேகநபர்களோ சட்டத்தை ஆயுதமாகப்

Screenshot

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகே திடீர் தீ பரவல் – பெரும் அனர்த்தம் தவிர்ப்பு; பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் கேள்வி!

July 27, 2026

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) எரிபொருள் களஞ்சிய வளாகத்திற்கு அண்மையில் உள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென ஏற்பட்ட தீ பரவல், கடற்படையினரும்

san

நிதி மோசடி; சாந்த பண்டாரவின் புதல்வர் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை

July 27, 2026

தி மோசடிச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரான அனுத ஜனாதித்