தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ப்ளூ பிரிண்ட்; ஸ்டாலினின் 14 முக்கிய அம்சங்கள் வெளியீடு!

முதல்வர் மு. க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், “உங்கள் கனவ சொல்லுங்க” திட்டத்தின் நிறைவாக “கனவுகள் மெய்ப்படும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, “மனதில் உறுதி வேண்டும்; வாக்கினிலே இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும்; நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும்; கைவசமாவது விரைவில் வேண்டும்” என்று இப்போது நமக்குத் தேவையான கவிதையை எப்பொழுதோ எழுதிவிட்டார் மகாகவி பாரதியார். இதே கவிதையில்தான், “மண் பயனுற வேண்டும்” என்றும் பாரதியார் சொல்லியிருப்பார். மண்ணும், மக்களும், மாநிலமும் பயன்பெறத் தேவையான கனவுகளை உருவாக்க வேண்டும் என்றுதான் உங்களை நான் அழைத்திருக்கிறேன்.

உங்கள் ஒவ்வொருவரையும் தனி மனிதர்களாக நான் பார்க்கவில்லை. உங்கள் எல்லோரையும் தமிழ்நாட்டின் பிரதிநிதிகளாக பார்க்கிறேன்! அந்த பெரும் நம்பிக்கையுடன்தான் உங்களுக்கு அழைப்பு விடுத்து வரவைத்திருக்கிறோம். எங்களின் அழைப்பை ஏற்று வந்திருக்கும் அனைவருக்கும் முதலில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இன்றைய நிகழ்ச்சி போல என்றைக்கும் நடந்திருக்காது. கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் மட்டுமல்ல, எதிர்கால தமிழ்நாட்டையும் மனதில் வைத்து, இந்த “தமிழ்நாடு 2030 – கனவுகள் மெய்ப்படும்” நிகழ்ச்சியை உருவாக்கியிருக்கிறோம்!

கடந்த ஐந்தாண்டுகளில், நம்முடைய திராவிட மாடல் அரசு, ஒவ்வொரு துறையிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆற்றிய மகத்தான பணிகளை, அளப்பரிய சாதனைகளை சுருக்கமாக, ஆனால், மிகத்தெளிவாக, இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்து நம்முடைய அமைச்சர்கள் சிலர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். நேரத்தின் நெருக்கடி காரணமாக, அவர்கள் சுருக்கமாக பேசினார்கள். இன்னும் சில அமைச்சர்களும் பேசுவதற்கு நேரம் இடம் கொடுக்கவில்லை. நாம் அவ்வளவு காரியங்களை நிறைய செய்திருக்கிறோம்! எல்லாவற்றையும் இந்த நிகழ்ச்சியில் சொல்ல முடியாத அளவுக்கு மலையளவு சாதனைகளை வைத்திருக்கிறோம்!

ஒவ்வொரு துறையிலும் அமைச்சர்கள் – துறையின் அதிகாரிகள், கடைநிலை அரசு ஊழியர்கள் வரை அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, அதன் பயன்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் காட்டி வரும் அர்ப்பணிப்பு உணர்வும் – அயராத உழைப்பும் – நிர்வாகத்திறனும் – தமிழ்நாட்டை அடுத்தகட்ட வளர்ச்சி நோக்கி உயர்த்தியிருக்கிறது

கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் அடைந்திருக்கும் மகிழ்ச்சிதான், நான் மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணம்! சொன்னதை மட்டுமல்ல. சொல்லாத பல முத்திரை திட்டங்களையும் செயல்படுத்தி இருக்கிறோம்! ஆட்சிக்கு வரும்போது, இவ்வளவு திட்டங்களை நம்மால் நிறைவேற்ற முடியுமா? என்ற ஏக்கம் எனக்கு இருந்தது. ஆனாலும், அத்தனைத் திட்டங்களையும் நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்ற கனவும் எனக்கு இருந்தது.

கடந்த 5 ஆண்டுகளுக்கான என்னுடைய கனவுகளில் பெரும்பாலும் நிறைவேறிவிட்டது என்று இந்த நிகழ்ச்சி மூலமாக அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

war

கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட ஈரானின் 30 போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

March 7, 2026

ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30 இற்கும் மேற்​பட்ட கப்​பல்​களை தகர்த்​த​தாக​வும், கடந்த 72 மணி நேரத்​தில்

mur

முதியவர் அடித்துக் கொலை: ஒருவர் கைது!

March 7, 2026

மின்னேரியா – ரொட்டவெவ பகுதியில், தனது சகோதரியைக் காப்பாற்றச் சென்ற முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம்

wate

கடலில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இருவர் மீட்பு!

March 7, 2026

ஹிக்கடுவை துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடலில் நீராடச் சென்று, கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

ko

கோடாவுடன் இருவர் கைது!

March 7, 2026

கட்டுநாயக்க – தடுகங்ஓயா பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை

arrest

அக்குரேகொட இரட்டைக் கொலைக்கு உதவிய மேலும் இருவர் கைது!

March 7, 2026

தலங்கமை – அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைச் சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு

acc

பிரதான வீதியில் லொறி மோதி பாதசாரி உயிரிழப்பு

March 7, 2026

கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்

t

நிபந்தனையற்ற சரணாகதி தவிர ஈரானுக்கு வழியில்லை – ட்ரம்ப் எச்சரிக்கை

March 7, 2026

ஈரானுடனான போர் தீவிரமடைந்த நிலையில், நிபந்தனையற்ற சரணாகதி தவிர வேறு எந்த ஒப்பந்தத்திற்கும் இடமில்லை என்று அமெரிக்க ஜனனாதிபதி டொனால்ட்

ir

இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்

March 7, 2026

ஐக்கிய அமெரிக்காவானது தாம் இவ்வாரம் மூழ்கடித்த ஈரானிய போர்க்கப்பலில் உயிர் தப்பியவர்களையும் இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள இரண்டாவது ஈரானியக் கப்பலின் மாலுமிகளையும்

sa

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அடக்குமுறை நடந்திருந்தால் ஆதாரத்தை முன்வையுங்கள்!

March 7, 2026

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், அதன் மூலம் ஏதேனும் அடக்குமுறைகள் இடம்பெற்றிருந்தால் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறு பிரதமர்ஹரிணி

au

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் சடலமாக மீட்பு

March 7, 2026

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள லொட்ரோப் பகுதியில், உள்ள வீட்டில் இலங்கைப் பெண் உட்பட தம்பதி சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள்

drone

நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பு

March 7, 2026

ட்ரோன்களை (Drone)பயன்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான உணர்திறன் மிக்க தகவல்களைச் சேகரித்தல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளைத்

ba

பாகிஸ்தான் தொடரிலிருந்து பங்களாதேஷ் முக்கிய வீரர்கள் விலகல்?

March 7, 2026

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட பங்களாதேஷ் அணியை அந்நாட்டு