ஐக்கிய நாடுகள் சபையின் தமிழ்த் தேசியப் பேரவையினர் – ஐ.நா. பிரதிநிதி சந்திப்புவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். இதன் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை (26.03.2026) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் அவருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன், கொள்கை பரப்புச் செயலாளர் ந. காண்டீபன், தேசிய அமைப்பாளர் த. சுரேஸ் ஆகியோருடன் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசனும் கலந்துகொண்டிருந்தார்.
இச்சந்திப்பின்போது மத்திய கிழக்குப் போர் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், அவற்றால் ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு தமிழ் மக்களும், டித்வா புயலாலும் தற்போது தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாகவும் மலையக மக்களும் மேலதிகமாக எதிர்கொள்ளும் சவால்கள் போன்றவற்றுடன், தேசிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரஜாசக்தி முறைமையால் ஜனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், அரச திணைக்களங்களால் தொடரும் காணி அபகரிப்புகள், மகாவலி அதிகாரசபையால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு, தையிட்டி விகாரை விவகாரம், மற்றும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டம், ஒற்றையாட்சி அரசியல் அமைப்பைத் தமிழ் மக்கள் நிராகரிப்பதற்கான காரணங்கள் உட்படப் பல்வேறு விடயங்கள் பற்றி விரிவாக உரையாடப்பட்டதாகத் தமிழ்த் தேசியப் பேரவையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த வருடம் மே மாதத்தில் ஐ.நா வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்சேயை அவரது கொழும்பு அலுவலகத்தில் தமிழ்த் தேசியப் பேரவையினர் சந்தித்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்.கது