திண்டுக்கல்: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று தவெக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளரும், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி வேட்பாளருமான செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் கடந்த 23-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
நாளைய தமிழகத்தை ஆளப்போகும் முதல்வர் விஜய், இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் செய்துள்ளதைச் சிறந்த நாளாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட செங்கோட்டையன், விஜய்யின் தொலைநோக்குச் சிந்தனை நாளை தமிழகத்தை ஆளும் என்றார். பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி வரிசையில் வரும் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தமிழகத்தில் விஜய்யின் ‘விசில் புரட்சி’ வெடிக்கும் என்றும், மக்கள் ஒருமனதாக விஜய்யைத் தேர்ந்தெடுத்துள்ளதால் 200-க்கும் அதிகமான இடங்களில் தவெக சாதனை படைக்கும் என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.
#Sengottaiyan #TVK #ThalapathyVijay #TNElection2026 #VijayForCM #WhistleRevolution #DindigulNews #ElectionResults #May4 #200PlusSeats #VijayTVK #TamilPolitics #BreakingNews #ThiruchendurVisit #VictoryMarch #TomorrowTamilNadu #VetrivelVijay