“டித்வா” புயல் குறித்த முன்னெச்சரிக்கை அரசு புறுக்கணிப்பு?

கண்டி பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு செவ்வாய்க்கிழமை (15) அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

“டித்வா” புயல் குறித்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும், அதன் தாக்கத்தைக் குறைப்பதற்கு ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் உரிய அரச அதிகாரிகளால் உரிய நேரத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று அந்த மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இம்மனுவை ஒக்டோபர் 30 ஆம் திகதி ஆதரவுக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர் ஜனக் டி சில்வா மற்றும் நீதியரசர் அச்சுல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, 2025 நவம்பர் 13 ஆம் திகதியிலிருந்து இலங்கையின் வானிலை முன்னறிவிப்புகளைக் கொண்ட பிபிசி (BBC) ஆவணப்படம் மற்றும் ஸ்லைடுஷோ (slideshow) ஒன்றையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க மனுதாரர் உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்தார்.

மனுதாரர் தமது மனுவில், பிரதிவாதிகள் சில தகவல்களை வெளிப்படுத்த உத்தரவிடுமாறு கோரியுள்ளார். இதற்குப் பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, அரசாங்கம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

இம்மனு தொடர்பிலான மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடப்பட்டது. தேவைப்படின் மனுதாரர் மட்டுப்படுத்தப்பட்ட மறுப்புரைகளைச் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி கீர்த்தி பண்டார கிரிதென இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி, அமைச்சரவை, தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் மீது அவர் இந்த வழக்கைச் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி தமது உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றும் போது மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால், அரசியலமைப்பின் 35 ஆவது உறுப்புரையின்படி சட்டமா அதிபர் முதல் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.

2025 நவம்பர் 12 ஆம் திகதியே வளிமண்டலவியல் திணைக்களம் புயல் உருவாகப்போவது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். புயல் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும், கொத்மலை போன்ற முக்கிய நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை முன்கூட்டியே வெளியேற்றுதல் உள்ளிட்ட எவ்வித முன்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், கம்பளை போன்ற பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைக் குறைத்திருக்க முடியும் என்றும், உயிர்ச்சேதம் மற்றும் சொத்துச் சேதங்களை பெருமளவு தவிர்த்திருக்க முடியும் என்றும் மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் தலைவராகப் பணியாற்றுவதாகவும், பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அமைச்சரவையினர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர் என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

கண்டி நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகில் அமைந்திருந்த தனது சட்ட அலுவலகம், புயலால் ஏற்பட்ட வெள்ளத்தினால் முற்றாகச் சேதமடைந்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தனது தொழில்முறை கடமைகளை நிறைவேற்றுவதற்கு அவசியமான கணினித் தரவுத்தளம் முழுமையாக அழிந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அனர்த்த முகாமைத்துவம் மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை விவகாரங்களில் பிரதிவாதிகளின் செயற்பாடுகள், அக்கறையற்ற தன்மை மற்றும் கடமையின்மை ஆகியவற்றை வெளிப்படுத்துவதாகவும், இது சட்டபூர்வமான மற்றும் அரசியலமைப்பு ரீதியான கடமைகளின் மீறல் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரியவுடன் சட்டத்தரணிகளான நிசல் பெர்னாண்டோ, கல்பனி திசாநாயக்க மற்றும் ஹேஷானி பொன்சேகா ஆகியோர் முன்னிலையாகினர்.

thara

5 முனைப் போட்டியால் சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ளது!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால், தேர்தல் களம்

1200-675-27028368-thumbnail-16x9-veerapandiyan

இடைத்தேர்தலில் தனித்துக் களமிறங்கும் இடதுசாரிகள்: தவெக ஆதரவுக் கோரிக்கையை நிராகரித்தது சிபிஐ!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், எந்தக் கூட்டணியிலும் இடம்பெறாமல் இடதுசாரி கட்சிகள் (CPI & CPM)

page

இடைத்தேர்தல் களம்: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு!

September 13, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்

Tamil_News_lrg_432121120260912210533

லண்டன் கார் பந்தயம்: விபத்தைத் தாண்டி 3-வது இடத்தைப் பிடித்து நடிகர் அஜித் சாதனை!

September 13, 2026

லண்டன்: லண்டனில் முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்த புகழ்பெற்ற ‘லீ மான்ஸ் கப்’ (Le Mans Cup) கார்

images - 2026-09-13T133956.877

“வார்த்தைகளை அளந்து பேசுவது அரசியல்வாதிகளின் கடமை!” – அவதூறு பேச்சுகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கண்டனம்

September 13, 2026

சென்னை: அரசியல் விமர்சனம் என்ற பெயரில் ஆபாசமாகப் பேசுவதும் மிரட்டல் விடுப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது

36a6a19c6587d011b2834d714207e935

“லீடர்னா என்னன்னே தெரியாம பேசுறது ஏமாத்து வேலை!” – பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேச்சு; முதலமைச்சருடன் ஒப்பிட்டுப் பரவும் சர்ச்சை!

September 13, 2026

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு (Leadership) குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி

26-6aa59dd45056b

லண்டன் கார் பந்தயத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த த்ரிஷா!

September 13, 2026

லண்டன்: இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தொடங்கி

ba4598f0-5b62-11ee-8789-13750be9e58d.jpg

“நாவைக் காக்க வேண்டும்”: திமுகவினரின் அநாகரிகப் பேச்சுக்குத் திருக்குறள் வழியே கனிமொழி கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு அறிவுரை

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“ஆ.ராசா மற்றும் சேகர்பாபுவின் பேச்சுகள் திமுகவின் வன்மத்தைக் காட்டுகிறது” – அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; ஆவணங்கள் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

September 13, 2026

துரை: அவசரநிலையின் போது மிசா சட்டத்தின் (MISA) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகவே அவர்