செம்மணி மனிதப் புதைக்குழி: உண்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன – எஸ்.சிறிதரன் குற்றச்சாட்டு

செம்மணி மனிதப் புதைக்குழி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை ஆராய்ந்தால்  ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகள், உயர் அதிகாரிகளை கைது செய்ய நேரிடும் என்ற அச்சத்தில் அரசாங்கம் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுக்காமல் வெளிப்படுத்தல்களை பொருட்படுத்தாமல் இருக்கிறது என்பது தெளிவாக விளங்குகிறது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் மரண் தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ தன்னை சுயாதீன சாட்சியாளராக விடுவிக்கும் பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு என்று குறிப்பிட்டுள்ள விடயம்  தொடர்பில் கேசரிக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Language Resources

அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ்ப்பாணம் -சிந்துப்பாத்தி இந்து மயானம் என்பது தமிழ் மக்களின் எலும்புகள் விதைக்கப்பட்டுள்ள,இனப்படுகொலையின் வயலாகவே இன்று உலகுக்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த பகுதியில் பெருமளவிலான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள் என்பதை மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ கைது செய்யப்பட்ட காலப்பகுதியில் குறிப்பிட்டிருந்தார்.

வீரசேகரி பத்திரிகைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியில் மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ,செம்மணிச் சந்தியில் உள்ள கோயிலுக்கு முன்புறத்திலும்,நல்லூருக்குச் செல்லும் பாதையிலும் மனித உடல்கள் புதைக்கப்பட்டதாகவும், இராணுவத்தால் அவர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.ஆகவே இது மறைக்கப்படகூடியதொரு விடயமல்ல,

உண்மையும், நேர்மையுமான வகையில் இந்த விடயம் ஆராயப்பட வேண்டும். சோமரத்ன குறிப்பிட்டதற்கமைய செம்மணி பகுதியில் இருந்து இதுவரையில் 400 இற்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.அதனைக் காட்டிலும் மேலும் 200 இற்கும் அதிகமான எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படும் சூழல் காணப்படுகின்றன.

கொப்பேகடுவ இராணுவத்தளபதியாக இருந்தக் காலத்தில் வேலணை,அல்லைப்பிட்டி, மண்டைத்தீவு ஆகிய பகுதிகளில் இருந்த இளைஞர்கள் அழைத்து வரப்பட்டு மண்டைத்தீவு  தோமையார் தேலாலயத்துக்கு முன்பாக இருந்த கிணற்றிலும், மண்டைத்தீவு செம்பாட்டித்தோட்ட கிணற்றிலும் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்கள்.அவர்களின் தாய்,தந்தையர் மற்றும் சகோதர்கள் இன்னும் வாழ்கிறார்கள். ஆகவே அந்த புதைகுழிகளும் அகழப்பட வேண்டும்.

கொக்கித்தொடுவாய் பகுதியில் மிக மோசமான முறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். வாய்கள் பிளந்தவாறு, எலும்புகள் முறிக்கப்பட்ட நிலையில் எலும்புகூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.இது மிகவும் பயங்கரமானதொரு செயற்பாடு.

உலகில் மனித குலத்துக்கு எதிராக நிகழ்ந்த மோசமான மனிதப்படுகொலை இதுவாகும்.இந்த எலும்புகூடுகளும், அதனுடனான உண்மையும் உலகுக்கு காட்சிப்படுத்தப்பட வேண்டும்.காலவோட்டத்தில் உண்மைகள் மறைக்கப்பட கூடாது.யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டு, அழிக்கப்பட்டது. அந்த சம்பவத்தின் உண்மை அவ்வாறே மூடி மறைக்கப்பட்டு, புதிய நூலகம் அமைக்கப்பட்டது. ஆனால் உண்மை இறுதி வரையில் வெளிப்படுத்தப்படவில்லை.இது நாம் விட்ட தவறாகும்.ஆகவே செம்மணியில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். எதிர்கால தலைமுறையினர் உண்மையை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில், 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்த  மிக மோசமான, ஆசியாவில் நிகழ்ந்த மனிதப் பேரவலத்தின் அடையாளத்தையே செம்மணி மனித எலும்புகூடுகள் பறைசாற்றுகின்றன.

சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை ஆராய்ந்தால்  ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகள், உயர் அதிகாரிகளை கைது செய்ய நேரிடும் என்ற அச்சத்தில் அரசாங்கம் இவற்றை பொருட்படுத்தாமல் இருக்கிறது என்பது தெளிவாக விளங்குகிறது.

காலவோட்டத்துக்கமைய உண்மையை மறைக்க இடமளிக்க முடியாது.சோமரத்ன குறிப்பிட்ட விடயங்கள்  பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்றார்.

kiruba

“சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் நேரடி சாட்சியங்களை சமர்ப்பிக்கத் தயார்!” – செம்மணி மனிதப் புதைகுழி முறைப்பாட்டாளர் கிருபாகரன் அதிரடித் தகவல்!

June 30, 2026

யாழ்ப்பாணம் செம்மணி அணையா விளக்கு திடலில், 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி “உரிமைப் பந்தம்” என்ற தொனிப்பொருளில் 427 தீப்பந்தங்களை

yasmin sooka

ஹெய்ட்டிக்கு படையினரை அனுப்பிவைக்கும் தீர்மானம்: தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் அமையக்கூடாது – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தல்

June 30, 2026

ஹெய்ட்டியில் இலங்கைப் படையினரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அத்தோடு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் தற்போது மீண்டும்

Pillayan-733199

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் ஜூலை

chemma7

செம்மணி மனிதப் புதைக்குழி: உண்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன – எஸ்.சிறிதரன் குற்றச்சாட்டு

June 30, 2026

செம்மணி மனிதப் புதைக்குழி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை

Pillayan-733199

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையான் இன்று (30)

court-judge-hammer-gavel-696x398

யாழில். தனியார் காணியை அரச காணி என பறிக்க முயற்சி ?

June 30, 2026

தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வசாவிளான் குட்டியாபுலம் பகுதியில் உள்ள 2.5 ஏக்கர் தனியார் சொத்தான காணியை, கடந்த செப்டெம்பர்

whats

தொலைபேசி எண் இல்லாமல் வட்ஸ்அப்?

June 30, 2026

உங்கள் தொலைபேசி எண்ணை மற்றவர்களுக்குத் தெரியாமல், ஒரு பயனர்பெயரை (username) மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன் இணைவதற்கான வசதியை வட்ஸ்அப் அறிமுகப்படுத்த

f

சீன தொழிலதிபரான பெண் 42 லட்சம் ரூபாய் சிகரெட்டுகளுடன் கைது

June 30, 2026

சுமார் 42 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற

Fuel_1200px_22_10_17

எரிபொருள் விலைகளைக் குறைத்தது அரசாங்கம்: புதிய விலை விபரங்கள்

June 30, 2026

இலங்கையில் பொதுமக்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில், தெரிவு செய்யப்பட்ட சில எரிபொருள் வகைகளின் விலைகளை உடனடியாகக் குறைப்பதற்குஇலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

eiff

ஈபிள் கோபுரத்தை தாக்கிய மின்னல்

June 30, 2026

பாரிஸ் நகரில் நிலவிய கடும் இடியுடன் கூடிய மழையின் போது, ஐகான் என அழைக்கப்படும் ஈபிள் கோபுரத்தை மின்னல் தாக்கியுள்ளது.

manoga

தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பு எமக்கு கற்பிக்கத் தேவையில்லை

June 30, 2026

தேர்தலில் பெண்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளும் தரப்பினர் எமக்கு பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

Pol

பெரிய அளவிலான இலஞ்ச வலைப்பின்னல் தொடர்பான ஆதாரங்கள் ஆராய்வு

June 30, 2026

பெரிய அளவிலான இலஞ்ச வலைப்பின்னல் தொடர்பான ஆதாரங்கள் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதால், சிறைபிடிக்கப்பட்டுள்ள நதுன் சிந்தக விக்கிரமரத்ன எனும் ‘ஹரக்