செம்மணி மனித புதைகுழி அகழ்வு குறித்து இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி யாழ்ப்பாணத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். ஐ.நாவின் நிரந்தரவதிவிடப் பிரதிநிதி இது குறித்து சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளதாவது
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தடய அறிவியல் துறைக்கு விஜயம் செய்து, செல்லையா பிரணவன் அவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் மீண்டும் தொடங்கப்படவுள்ள செம்மணி மனிதப் புதைகுழி (Chemmani exhumation) அகழ்வுப் பணிகள், பொதுப் புதைகுழிகள் தொடர்பான நடைமுறைகள் மற்றும் இந்தச் செயல்முறையை சுதந்திரமான முறையிலும் வெளிப்படையான முறையிலும் முன்னெடுப்பதற்குத் தேவையான வளங்கள் குறித்து நாங்கள் ஆலோசித்தோம்.
இந்த மிக முக்கியமான பணிக்கு ஆதரவளிக்க இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை (UN Sri Lanka) தயாராக உள்ளது.