வடக்கு – கிழக்கு யுத்தம் சுயநல அரசியல் குறுக்கு வழிகளினாலேயே உருவானது!

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அரசியல்வாதிகள் கையாண்ட குறுகிய, சுயநல அரசியல் குறுக்கு வழிகளினாலேயே வடகிழக்கில் தேவையற்ற யுத்தம் உருவானதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டினார்.

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

நமது நாட்டின் அரசியல் உலகை உற்றுநோக்கினால், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் எந்தவொரு தவறான செயலையும் செய்யத் துணியும் நிலையையே காண முடிகின்றது. நாம் செய்யும் செயல் சரியானதா தவறானதா, சட்டப்பூர்வமானதா அல்லது பிறருக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்று எவருமே சிந்திப்பதில்லை. தற்போதைய சமூகத்தில் நிலவும் மிகப்பெரிய பிரச்சினை இந்த அரசியல் குறுக்கு வழிகளாகும்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்கள் ஒரு தேர்தலை நடத்தி புதியதொரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், அதற்கு அடுத்த நாள் முதலே இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு நாம் எவ்வாறு அதிகாரத்துக்கு வருவது என்ற குறுகிய அரசியல் வியாபாரமே இங்கு ஆரம்பிக்கப்பட்டது. மக்கள் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கின்றார்கள், எனவே அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக்கட்டியெழுப்புவோம் என்று எவரும் சிந்திப்பதில்லை. எப்போதும் மற்றவர்களின் கால்களை இழுத்து வீழ்த்தவே பார்க்கின்றனர். இதுவே அதிகாரத்தைப் பிடிப்பதற்கான குறுக்கு வழியாகும்.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் என்ற எவ்வித இன, மதப் பாகுபாடுகளும் இன்றி அனைத்து மக்களும் சகோதரர்களாக ஒன்றிணைந்தே சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டனர். அக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட தேசியக் கட்சிகள் நாட்டைச் சரியான பாதையில் முன்னோக்கிக் கொண்டு சென்றன.

எனினும், 1956 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அரசியல்வாதிகள் கையாண்ட குறுகிய மற்றும் சுயநல அரசியல் குறுக்கு வழிகளினால் இந்த நாடு முற்றாக வீழ்ச்சியடைந்தது. வடகிழக்கில் ஏற்பட்ட யுத்தமும் இத்தகையதொரு தேவையற்ற அரசியல் சுயநலத்தால் உருவானதே ஆகும்.

எமது நாட்டின் 75 அரசியல் ஆண்டுகாலப் பேரழிவுக்குப் பின்னால் இருப்பது இந்த அரசியல் குறுக்கு வழிகளேயாகும். அத்தகைய குறுக்கு வழிகளைத் தேடி நமது நாட்டுத் தலைவர்கள் எந்தவொரு கீழ்த்தரமான செயலையும் செய்யத் துணிந்தனர். இத்தகைய குறுக்கு வழிகள் மூலம் இலங்கையை ஒருபோதும் அபிவிருத்தி செய்ய முடியாது. நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் அர்ப்பணிப்பு அவசியமாகும்.

நீதியும் நேர்மையும் என்பது அதிர்ஷ்ட இலாபச் சீட்டு போல சுலபமாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல் அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும். தவறான செயல்களைச் செய்து சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. மனச்சாட்சிக்கு இணங்க வேலை செய்யப் பழக வேண்டும். எனவே, வாழ்க்கையிலோ அல்லது நாட்டைக் கட்டியெழுப்புவதிலோ குறுக்கு வழிகள் என்று எதுவுமே கிடையாது என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றார்.

jaffna court

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: “சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது” – எதிர்மனுதாரர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி கடும் வாதம்!

July 27, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கில், “குற்றவாளிகளோ அல்லது சந்தேகநபர்களோ சட்டத்தை ஆயுதமாகப்

Screenshot

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகே திடீர் தீ பரவல் – பெரும் அனர்த்தம் தவிர்ப்பு; பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் கேள்வி!

July 27, 2026

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) எரிபொருள் களஞ்சிய வளாகத்திற்கு அண்மையில் உள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென ஏற்பட்ட தீ பரவல், கடற்படையினரும்

san

நிதி மோசடி; சாந்த பண்டாரவின் புதல்வர் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை

July 27, 2026

தி மோசடிச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரான அனுத ஜனாதித்

deh

கல்கிசை மயான துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியும் கைது

July 27, 2026

தெஹிவளை – கல்கிசை மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

dd

நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட கட்டிடம்

July 27, 2026

தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட “ஹெல பொஜூன்” தேசிய உணவகம் ஒன்று, தற்போது மீண்டும்

sc'

மூங்கிலாறில் ஏழு மாதங்களாக ஆசிரியர் இல்லை

July 27, 2026

முல்லைத்தீவு, முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர்

figd

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தக் கோரி யாழில் போராட்டம்

July 27, 2026

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கோரியும் நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில்

acci main

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்காக சென்ற கணவன் – சகோதரன் பலி

July 27, 2026

மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில்

den

 81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்  

July 27, 2026

இலங்கையில் நாளாந்தம் டெங்கு பரவல் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது. நாட்டில் இவ்வருடம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

gna

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின்

Screenshot_20260726_231847_WhatsApp

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

July 27, 2026

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி

4

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

July 27, 2026

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள்