சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

இலங்கையில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் (Leptospirosis) சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், கிட்டத்தட்ட 300 மரணங்கள் சம்பவித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

உலகளவில் எலிக்காய்ச்சல் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாக தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் துஷானி தாபரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முன்னதாக 2025ஆம் ஆண்டில் இந்த நோயால் சுமார் 200 மரணங்கள் பதிவாகியிருந்தன.

கடும் காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, தசை வலி மற்றும் கண்கள் சிவப்படைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை உதாசீனம் செய்ய வேண்டாம் எனவும், சிக்கல்களை தவிர்க்க உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.

நோய்த்தொற்றுள்ள விலங்குகளின் சிறுநீர் கலந்த நீர் அல்லது மண்ணுடன் மக்கள் தொடர்பு கொள்ளும்போது, தோலில் உள்ள காயங்கள் அல்லது சளிச்சவ்வு வழியாக பாக்டீரியாக்கள் உடலுக்குள் நுழைகின்றன என்று வைத்தியர் தாபரேரா விளக்கியுள்ளார்.

இரத்தினபுரி, காலி, கேகாலை, களுத்துறை, மொனராகலை மற்றும் மாத்தறை உள்ளிட்ட மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதிக அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள், குறிப்பாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காது சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

g

சர்வதேச எரிசக்தி முகவரகம் எண்ணெய் விடுவிப்புக்கு அனுமதி

March 11, 2026

ஹோர்முஸ் நீரிணை செயலற்ற முறையில் மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தடையைச் சமாளிக்க, 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை விடுவிக்க

ceb

மின்சார சபை ஊழியர் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

March 11, 2026

மின்சார சபை ஊழியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு இன்று (11) கைவிடப்பட்டுள்ளது. மின்சார சபை கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட

cu

454 ஆப்பிள் ரக கையடக்கத் தொலைபேசிகள் தொகை பறிமுதல்

March 11, 2026

சுமார் ஒரு கோடியே 36 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய 454 ஆப்பிள் ரக கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமான

lau

இன்று நள்ளிரவு முதல் லாஃப் விலையும் அதிகரித்தது

March 11, 2026

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப் சமையல் எரிவாயு விலையும் அதிகரித்துள்ளது. 12.5 கிலோ சிலிண்டர் 300

hur

ஆபத்தான கண்ணிவெடிகளை ஹார்முஸ் ஜலசந்தியில் இறக்கிய ஈரான்!

March 11, 2026

உலகின் மிக முக்கியமான எரிசக்தி மையங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் ஈரான் ஆபத்தான கண்ணிவெடியை வைத்துள்ளமையினால் அமெரிக்கா

kim

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

March 11, 2026

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது மகள், போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட மூலோபாய க்ரூஸ் ஏவுகணை சோதனைகளை

45

வடக்கின் பங்களிப்பு தேசிய பொருளாதாரத்தில் 10 சதவீதமாக உயரும்!

March 11, 2026

இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு வளமான வடக்கு மாகாணத்தின் பங்களிப்பானது தற்போது 4.5 சதவீதமாகக் கடைசி மட்டத்திலேயே காணப்படுகின்றது, எதிர்வரும்

sur4

சிறையில் சுரேஷ் சலேவை கொலை செய்ய சதித் திட்டம்?

March 11, 2026

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை சிறையில் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல்

44

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் மண்டைதீவு சுற்றுலா மையம் தொடர்பாக முறைப்பாடு

March 11, 2026

வேலணை – மண்டைதீவு சுற்றுலா மையத்தின் உருவாக்கலில் (எகோ ரூரிசம்) அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் அரச உயர்

Daugh

ஒன்டாரியோவில் ஸ்டீவன்சன் ஞாபகார்த்த மருத்துவமனை விரிவாக்கப்பணிகள் ஆரம்பம் – முதல்வர் டக் பேர்ட்

March 11, 2026

ஒன்டாரியோ அரசு 174 மில்லியன் டொலர் முதலீட்டுடன் ஸ்டீவன்சன் ஞாபகார்த்த மருத்துவமனை (Stevenson Memorial Hospital)புனரமைப்புத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளை

WhatsApp Image 2026-03-11 at 10.45.13

கனடா மிசிசாகா பிரதேச திருட்டு விசாரணை; 13 வாகனங்கள் மீட்பு

March 11, 2026

பீல் பிராந்தியம் – 11 டிவிஷன் தானியங்கிப் பதில் வழங்கிக் குழு (Break and Enter Auto Response Unit)மற்றும்

jud

84 ஈரானிய சடலங்களையும் ஒப்படைக்குமாறு உத்தரவு

March 11, 2026

அமெரிக்கா நீர்மூழ்கி கப்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் இரண்டு குளிர்சாதன பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை