சர்வதேச உதவி மாநாட்டை கூட்டுமாறு அரசாங்கத்திடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

கண்டி மாவட்டத்தின் கம்பளை, சரசவிகம, தெல்தோட்டை மற்றும் தொலுவ போன்ற பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட சுழற்காற்று மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் பிரசன்ன பெரேரா தெரிவித்தார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் போதுமான நிதி உதவிகளை வழங்கவில்லை எனக் குற்றம் சுமத்தினார்.

அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளுக்கு மதிப்பீடுகள் இன்றி 5 இலட்சம் ரூபாய் வழங்கப்படுமென அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், கண்டி மாவட்டத்தின் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு அந்த நிதி இன்னும் சென்றடையவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக முதியவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மிகக் கஷ்டமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதோடு, தமது அன்றாடத் தேவைகளுக்காக சொத்துக்களை அடகு வைத்தும் அதிக வட்டிக்குக் கடன் பெற்றும் பாரிய கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் ஏற்பட்ட ஒட்டுமொத்தப் பாதிப்பு 4 மில்லியன் டாலர்கள் என உலக வங்கி மதிப்பிட்டுள்ள போதிலும், அனர்த்தத்தினால் ஏற்பட்ட நேரடி நஷ்டத்தை விடவும் அதனை மீளக் கட்டியெழுப்புவதற்கான செலவு மிக அதிகம் என பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

உதாரணமாக, மலையக புகையிரத பாதையை புனரமைக்க ஒரு வருடத்திற்கு மேலாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனால் சுற்றுலாத்துறைக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் ஏற்படும் மறைமுகப் பொருளாதாரப் பாதிப்புகளை அரசாங்கம் சரியாகக் கணக்கிடவில்லை.

உண்மையில், இந்த அனர்த்தங்களினால் நாட்டுக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த நஷ்டம் 6 முதல் 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 6% முதல் 8% வரையான தொகையாகும். இந்த உண்மையான நஷ்டமானது உலக வங்கியின் மதிப்பீட்டை விட இருமடங்கு அதிகமாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில், அரசாங்கம் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டமொன்றைக் கூட்டி, அதன் அடிப்படையில் சர்வதேச உதவி மாநாட்டை (Donor Conference) நடத்துவதற்குத் தயாராக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்த மாநாட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்களுக்கும், இந்தியா மற்றும் சீனா போன்ற நட்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டின் நிதி நெருக்கடி மற்றும் அனர்த்த நிலைமைகளை முன்னரே எதிர்வுகூறியிருந்ததுடன், அண்மையில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தையின் போது சரியான தரவுகளை முன்வைத்து மக்களின் நலனுக்காக ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.

வெறும் அரசியல் விவாதங்களுக்குள் முடங்கிக் கிடக்காமல், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்க அரசாங்கம் இந்த சர்வதேச உதவி மாநாட்டைக் கூட்ட முன்வர வேண்டும் என்றார்.

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது