சட்டவிரோத புத்தர் சிலை விவகார வழக்கு ஒத்திவைப்பு

திருகோணமலை கடற்கரையின் கரையோரப் பாதுகாப்பு வலயத்துக்குள் சட்டவிரோதமான முறையில் கட்டடம் அமைத்தமை மற்றும் புத்தர் சிலையினை அங்கு நிறுவியமை தொடர்பான வழக்கு இன்று (8) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பை மீறி துறவிகளைக் கைது செய்வதற்கு முன்னர் பின்பற்றப்படவேண்டிய நடைமுறை வழிமுறைகளை கரையோரப் பாதுகாப்பு திணைக்களமும் பொலிஸாரும் பின்பற்றுவதில் தவறிழைத்துள்ளனர் என்று வழக்கின் எதிராளிகளில் ஒருவரான பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சிரேஷ்ட வழக்கறிஞர் கிரிஷாந்த நிஸ்ஸங்க எழுத்துமூலமான சமர்ப்பணத்தை சமர்ப்பித்தார்.

இதேவேளை தாமும் இதே நிலைப்பாட்டில் உள்ளதாக ஏனைய எதிராளிகள் தரப்பில் மன்றில் ஆஜரான சிரேஸ்ட வழக்கறிஞர் சஞ்ஜீவ வீர விக்ரம வாதங்களை முன்வைத்தார்.

இதனை கருத்தில் கொண்ட திருகோணமலை பிரதம நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமான சமர்ப்பணங்களை மன்றில் முன்வைக்க கால அவகாசம் வழங்கி, வழக்கை ஒக்டோபர் 7ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

சாட்சியங்களை முன்வைத்த வழக்கறிஞர் சஞ்சீவ வீர விக்ரம, வழக்குக் கோப்பில் உள்ள ஆவணங்கள் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஆவணங்கள் மட்டுமே என்றும், பிக்குகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பௌத்த விவகார ஆணையரிடமிருந்தோ அல்லது புத்தசாசன அமைச்சகத்திடமிருந்தோ எந்த ஆவணங்களும் பெற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

புத்த சாசனத்தைக் கையாளும்போது, அதன் பாதுகாப்பு மற்றும் பேணல் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். துரைராஜா வழங்கிய நீதிமன்றத் தீர்ப்பை அரசாங்க அதிகாரிகள் அறிந்துகொள்ளாத நிலையில், இந்த வழக்கைத் தொடர்வது சிக்கலானது என்றும் தமது வாதத்தை மன்றில் முன்வைத்தார்.

இவற்றை கருத்தில் கொண்ட நீதிபதி, தமது தரப்பு சமர்ப்பணங்களை எழுத்துப்பூர்வ அறிக்கையாக மன்றுக்கு முன்வைக்க வாய்ப்பளித்து, வழக்கை ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும், இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகாத எதிராளிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறும் பொலிஸ் தரப்புக்கு உத்தரவிட்டார்.

எதிராளிகள் சார்பில் சிரேஷ்ட வழக்கறிஞர்களான கிரிஷாந்த நிஸ்ஸங்க, சஞ்சீவ வீரவிக்ரம, மனோஜ் அரவிந்த செபஸ்டியன், கலன பின்னடுவ ஹெவா ஆகியோர் ஆஜரானார்கள்.

அதேவேளை, கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் சார்பில் அதன் சட்ட அதிகாரி பாஞ்சாலி பெர்னாண்டோ, கரையோரப் பாதுகாப்பு அபிவிருத்தி அதிகாரி சு.தீபராஜ் ஆகியோர் ஆஜரானார்கள்.

மேலும், பொலிஸ் தரப்பில் துறைமுக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதம இன்ஸ்பெக்டர் சசங்க குமார சமரசிங்க நீதிமன்றத்தில் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்றுக்கு கசிப்பு கடத்திய இருவர் 800 லீற்றர் கசிப்புடன் கைது

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்று பிரதேசத்திற்கு வாவி ஊடாக தோணியில் கசிப்பு கடத்தி வந்த இருவரை மண்முனைபற்று வாவிக்கரையில் வைத்து புதன்கிழமை (08) 800 லீற்றர் கசிப்புடன் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அந்த பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தவராஜா றஜீவ்காந்தன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பகுதியில் சம்பவ தினமான இன்று பகல் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்

இதன்போது அங்கு தோணில் கடத்தி கொண்டுவரப்பட்ட வாவிக்கரையில் வைக்கப்பட்ட கசிப்பை எடுத்துச் செல்ல வந்த இருவரை 800 லீற்றர் கசிப்புடன் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் 25,26 வயதுடையவர்கள் எனவும் கொக்கட்டிச்சோலை முனைக்காடு மற்றும் மாவிலங்குதுறை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை

Untitled-5

தொடர் விடுமுறை: 2,354 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – விதிகளை மீறிய 400 ஆம்னி பேருந்துகள் மீது அதிரடி நடவடிக்கை!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையையொட்டிப் பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காகக் கிளாம்பாக்கத்திலிருந்து 2,354 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில்,

2

பரந்தூரைப் போல பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக விவகாரத்திலும் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார்: எம்.பி. துரை வைகோ நம்பிக்கை!

September 13, 2026

திருச்சி: திருச்சி மாவட்டம் கே.கள்ளிக்குடி ஊராட்சியில், தனது தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய

725c2e6d9fca0dc4aada0ee563cfb1b495b36e3eddff80882083ace68426ca4f

மலேசியப் பிரதமரைச் சந்திக்க முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தைத் தள்ளிவைக்க ஆளுநர் மாளிகை கோரிக்கை: பரபரப்புத் தகவல்!

September 13, 2026

சென்னை: புதுடெல்லிக்கு வருகை தந்துள்ள மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமைச் சந்திப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தைத் தள்ளிவைக்குமாறு

1200-675-26766517-thumbnail-16x9-trichy2-aspera

“ஆபாசமாகப் பேசுவதுதான் திமுகவின் அரசியல்!” – சேகர்பாவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!

September 13, 2026

சென்னை: அரசியல் என்ற பெயரில் ஆபாசத்தையும், அவதூறையும் பேசுவதையே திமுகவினர் வாடிக்கையாக வைத்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்

1200-675-27622338-thumbnail-16x9-ministersrinath

தூத்துக்குடி கப்பல் கட்டும் தள எதிர்ப்பு: செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளிக்காமல் நழுவிய அமைச்சர் ஸ்ரீநாத்!

September 13, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமையவுள்ள புதிய கப்பல் கட்டும் தளத் திட்டத்திற்கு உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து

HSBts-6bwAAGySO

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற சர்வதேசக் கார் பந்தயம்: இங்கிலாந்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

September 13, 2026

லண்டன் / சென்னை: தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த “மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்” அமைப்பதற்கான முன்னோட்டமாக, இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

b

குற்றக் கும்பல்களுக்குக் கைக்குண்டு கிடைத்தது எப்படி?

September 13, 2026

தெஹிவளை வீடொன்று மீது அண்மையில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

bom

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 குண்டுத் தாக்குதல்கள்

September 13, 2026

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ்

pa

காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை

September 13, 2026

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை” குறித்து