கரைவலை மீனவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட கரைவலை மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைத்த ஜனாதிபதி, அவர்களுடன் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், 2010 ஆம் ஆண்டு தொடங்கி, தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக 2013 ஆம் ஆண்டு முதல் வின்ச் இயந்திரத்தைப் பயன்படுத்தி செயல்பட்டு வரும் கரைவலை மீன்பிடித் தொழில்துறையின் தற்போதைய நிலைமை குறித்து அவர்கள் ஜனாதிபதியிடம் விளக்கினர்.

மேலும், மீனவர் பிரதிநிதிகள், தாங்கள் எதிர்கொள்ளும் நிலைமை குறித்து கவனத்தை ஈர்த்து, இந்தக் கலந்துரையாடலை வழங்கியதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

மீனவர் பிரதிநிதிகள் தங்கள் அனுபவங்களின் அடிப்படையில் எழுப்பிய அனைத்துப் விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, கரைவலை மீன்பிடித் தொழில் தொடர்பாக எழுந்துள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும்போது, பொருளாதார ரீதியாக யாருடைய வாழ்க்கைத் தரத்திலும் பாதிப்பை ஏற்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை என்றும், ஒவ்வொருவரின் பொருளாதார நிலைமையையும் வலுப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் வலியுறுத்தினார்.

மேலும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில், பொது மீனவ சமூகம் முன்வைத்துள்ள முறைப்பாடுகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், இது தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சியில் ஈடுபடுகின்ற அரச நிறுவனங்கள், கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அறிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதன்படி, மீனவர்களுக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்பைத் தடுப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சர்வதேச இணக்கப்பாடுகளுக்கு ஏற்பவும், எதிர்கால சந்ததியினருக்காக கடற்றொழில் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அதன்படி, அனைத்து தரப்பினரும் இணைந்து குறுகிய காலத்திற்குள் கலந்துரையாடல்கள் மூலம் மிகவும் பொருத்தமான தீர்வுகளை பரிந்துரைக்க இதன்போது ஒப்புக்கொண்டதுடன், போராட்டத்தை கைவிடவும் முடிவு செய்யப்பட்டது.

அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் அடுத்த திங்கட்கிழமை குறித்த கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவும் முடிவு செய்யப்பட்டது. கலந்துரையாடல்கள் இடம்பெறும் காலத்தில் தற்போது கரைவலை முறையின் கீழ் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்கொள்ளும் குத்தகை போன்ற கட்டணச் சிக்கல்கள் குறித்து நிதி அமைச்சுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் மேலும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கோலித கமல் ஜினதாச, ஜனாதிபதி மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே ஆகியோருடன் கரைவலை மீனவ சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு

kumara

அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

March 4, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக

Andreas

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மாகாணசபைத்தேர்தல்கள் குறித்து இன்று அரசிடம் பேசுவதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

March 4, 2026

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார்

Nish

இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளார்கள் – நிசாம் காரியப்பர்

March 4, 2026

ரானுக்கு எதிராக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம்

eu

உலகப் பொருளாதார பாதிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் – வளைகுடா கவுன்சில் அவசர பேச்சுவார்த்தை

March 4, 2026

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் விசேட காணொளி மாநாடு (EU) மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) வெளியுறவு