கனடாவில் தமிழீழ தேசியக்கொடியை வாகனத்திலிருந்து அகற்றுமாறு மிரட்டல்!

கனடாவில் கிழக்கு மாகாணத் தளபதி தீபன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், விஜயரத்தினம் தனுஷன் என்பவரை (இலக்கியா றினோவேர்ஷன்ஸ் நிறுவனர்) அவரது வாகனத்திலிருந்து தமிழீழ தேசியக்கொடியை அகற்றுமாறும் தன்னைத் தாக்குவேன் என மிரட்டியுள்ளதாகவும் வீடியோக்களையும் குரல்பதிவுகளையும் எமது Behind me ஊடக நிறுவனத்துக்கு பிரத்தியேகமாக தனுஷன் பகிர்ந்துள்ளார்.

மே 20 ஆம் திகதியன்று கனடி சியோன் விற்பனை நிலையத்துக்குச் சென்ற போது அங்கிருந்த ஒருவர் தன்னைத் தாக்கும் நோக்கத்துடன் அருகில் வந்து தனது வாகனத்தை மறித்து அதற்குள் ஏற முற்பட்டார் எனவும் அதை தான் தடுத்துவிட்டு என்ன விடயம் என அவரை விசாரித்தபோது கிழக்கு மாகாணத் தளபதி தீபன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தனது வாகனத்திலுள்ள தமிழீழ தேசியக்கொடியை அகற்றிவிடுமாறும் இல்லாவிட்டால் தன்னையும் தாக்கி தனது வாகனத்தையும் சேதப்படுத்துவேன் எனவும் அவர் மிரட்டியதாகவும் தனுஷன் தெரிவித்துள்ளார்.

இலக்கியா றினோவேர்ஷன்ஸ் நிறுவனர் விஜயரத்தினம் தனுஷன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று (மே 18) பிரம்டன் சிங்குசி பூங்காவுக்குச் சென்று அங்கே தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் பிரபாகரனை இலங்கை இராணுவம் அழித்த காட்சிகளையும் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட எமது மக்களுக்குக் கிடைக்காத நீதி பற்றியும் கனடாவிலுள்ள மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தார் .

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலையும் தனது நிறுவனத்தின் ஊடாக அவர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் மார்க்கம் எம்.சி பிளாஸா சென்று அங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி அவரால் வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் ஸ்கார்பரோவில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை விஜயரத்தினம் தனுஷன் வழங்க முற்பட்டபோது அங்கு வந்த ஒருவர், தனது இலக்கியா நிறுவனம் குறித்தும் தன்னைத் தமிழ்த் தேசியவாதி இல்லை என்றும் இலங்கை இராணுவத்தோடு நிற்பவர் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பணத்தைக் கையாடல் செய்தவர் எனவும் தன் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி Behind me ஊடக நிறுவனத்தோடு தான் செயற்படும் போது இலங்கை இராணுவப்புலனாய்வுப் பிரிவுக்கு Behind me வேலை செய்வதாகவும் தன்னையும் அதே கட்டமைப்புக்குள் கொண்டு கருத்துக்கள் வெளி வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

மேற்குறித்த மிரட்டல்களுக்கு அடிபணிந்து தேசியம் சார்ந்து பயணிக்கும் தனது செயற்பாடுகளில் எந்த மாற்றத்தையும் தன்னால் செய்ய முடியாது என்பதையும் இராணுவப் புலனாய்வாளர்களுடன் தான் செயற்படுகின்றேன் என்பதை முற்றுமுழுதாக மறுப்பதோடு இரு சகோதரர்களை யுத்தத்தில் பறிகொடுத்தவன். போராட்டத்தின் தார்மீகம் குறித்த சிந்தனையோடு இன்று வரை வாழ்ந்து வருகின்றேன் எனவும் தனுஷன் தெரிவித்துள்ளார்.

go

50 கிராம் தங்கக்கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி

August 24, 2026

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி “தங்கம் தின்னும் மிருகம்” (அதிகமாகப் பணம் செலவழிப்பவர்கள் என்ற என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு.

phi

தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

August 24, 2026

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க

sak

கிளிநொச்சியில் விபத்து: அல்வாய் இளைஞன் உயிரிழப்பு

August 24, 2026

கிளிநொச்சி பளைப் பகுதியில் சனிக்கிழமை (22.08.2026) மாலை நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

j

ஜப்பானின் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 37 பேர் காயம்

August 23, 2026

டோக்கியோவிற்கு வடகிழக்கே உள்ள இபராக்கி மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், குறைந்தபட்சம் 37 பேர்

1376391

“எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு சிபிஐ மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

August 23, 2026

சென்னை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர்

images - 2026-08-23T201653.538

“கலைஞராக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன்!” – மு.க.ஸ்டாலினைச் சாடிய தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு அதிரடி!

August 23, 2026

ன்னை சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் (தவெக) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, முதலமைச்சர் விஜய்

hindutamil-prod_2026-07-25_wfbbokby_09c42ddb-771b-4856-8469-a2bd3d39469a

“அறநிலையத்துறை செயல்பாடுகளைச் சேகர்பாபு வேவு பார்ப்பது ஏன்?” – அமைச்சர் ரமேஷ் சரமாரி கேள்வி!

August 23, 2026

திருச்சி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது அடுக்கடுக்கான