ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு விளைவிக்கிறார் சின்மயி!

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் நடந்து கொண்ட பாடகி சின்மயி, அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குநர் பேரரசு காட்டமாக தெரிவித்தார்.

கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ரெட் லேபில்’. இதன் கதையினை பொன்.பார்த்திபன் எழுதியிருக்கிறார். லெனின், அஸ்மின், ஆர்.வி.உதயகுமார், முனிஷ்காந்த், தருண், கெவின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினரும் மற்றும் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் இயக்குநர் பேரரசு பேசும் போது, “கதாநாயகன் லெனினைப் பார்த்தால் புதியவர் போலத் தெரியவில்லை. அனுபவசாலி போலத் தெரிகிறார். கதாநாயகி அஸ்மினுக்கும் அவருக்கும் உள்ள ஜோடிப் பொருத்தம் நன்றாக உள்ளது. கமல் -ஸ்ரீதேவி , ரஜினி – ஸ்ரீபிரியா போல இந்த லெனின் – அஸ்மின் ஜோடியும் நன்றாக இருக்கிறது. இந்த ஜோடி தொடர்ந்து நடிக்க வேண்டும்.

ஒரு காலத்தில் கதை , கதாசிரியருக்கு முக்கியத்துவம் இருந்தது. கதையை வைத்துக்கொண்டு பிறகுதான் கதாநாயகர்களைத் தேடுவார்கள். ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், டி.ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற இயக்குநர்களுக்குப் பிறகு கதை திரைக்கதை வசனம் என்று முழுமையாக அவர்களே பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

பிறகு கதை என்ன என்பதை விட, யார் கதாநாயகன் என்ற காலம் வந்தது. கதாநாயகர்கள் கதையை முடிவு செய்யும்படி ஆனது. இப்போது கதையை தயாரிப்பாளர் முடிவு செய்வதில்லை. கதாநாயகன் தான் முடிவு செய்வார். ஆனால் இந்தத் தயாரிப்பாளர் கதையைத் தேர்ந்தெடுத்ததற்குப் பாராட்டுகிறேன். அது படத்தின் மீது நம்பிக்கை தரும் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் இது முறையாக எடுக்கப்பட்ட படமாகத் தோன்றுகிறது.
தயாரிப்பாளருக்குக் கதை பிடித்துவிட்டால் நம்பி ஒப்புக்கொண்ட பிறகு, இயக்குநரைத் தொந்தரவு செய்யக்கூடாது. அது சித்திரவதையாக மாறிவிடும். இயக்குநர் சுதந்திரமாக இருந்தால் தான் அந்தப் படைப்பு சரியாக வரும்.

இந்தப் படத்தில் பாடியுள்ள சின்மயி ஏன் இங்கே வரவில்லை? இயக்குநர் யார் என்று தெரிந்துதான் பாட்டு பாடினாரா? இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டி இருக்கிறது. சின்மயி ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் அவர் நடந்து கொண்டிருக்கிறார். தெரியாமல் பாடிவிட்டேன் என்கிறார், வருத்தம் தெரிவிக்கிறார். ஒரு படத்தில் பாடல் பாடும் போது என்ன சூழல்? என்ன வரிகள் என்பதைத் தெரிந்து கொண்டு தான் பாட வேண்டும். எல்லாமும் பாடி முடித்த பிறகு வியாபாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்துவது போல் நடந்து கொள்ளக் கூடாது.

ஒரு படத்தின் கேப்டன் இயக்குநர் தான். இயக்குநர் யார் என்று தெரியவில்லை என்று சொல்வதெல்லாம் தவறானதாகும். சின்மயி இப்படிச் சொல்வது அந்த இயக்குநருக்கு மட்டும் அவமானம் அல்ல. ஒவ்வொரு இயக்குநருக்கும் அவமானம். அதற்காக சின்மயி மன்னிப்பு கேட்க வேண்டும்.

இன்று ஒரு படம் எடுப்பது என்றால் உயிர் போகிற விஷயமாக இருக்கிறது. எவ்வளவு சிரமப்பட்டு படம் எடுக்கிறார்கள். ஆனால் சுலபமாக இப்படி இடையூறு செய்கிறார்கள்.

எஸ்.ஜானகி, பி.சுசீலா போன்ற பாடகிகள் எவ்வளவு பெரிய பாடகிகள். இந்தத் திரையுலகில் அவர்கள் எல்லாவிதமான பாடல்களையும் பாடினார்கள். அப்போதெல்லாம் இப்படியா நடந்தது?

குறிப்பாக இயக்குநரை, தயாரிப்பாளரை அவமானப்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது. பாடி முடித்து விமர்சனம் செய்வது, தொந்தரவு தருவது தவறானதாகும்” என தெரிவித்தார்.

nalinda-jayatissa_2025.01

முக்கிய பிரமுகர்களுக்கு விசேட பாதுகாப்பு

July 14, 2026

11 முக்கிய பிரமுகர்களுக்கு விசேட பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

jud

பிரசன்ன ரணதுங்கவின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

July 14, 2026

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு கொழும்பு

tru

கப்பல்களுக்கு விதிக்கப்படவிருந்த 20% கட்டண திட்டத்தைக் கைவிட்டார் டிரம்ப்!

July 14, 2026

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு விதிக்கப்படவிருந்த 20 சதவீதக் கட்டணத் திட்டத்தை அமெரிக்கா கைவிடுவதாக

exa

முக்கிய அறிவித்தல்!

July 14, 2026

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகளுக்கான மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களைக்

neddd

சிறை மோதலுக்குப் பின்னால் சதித்திட்டமா?

July 14, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டங்கள் அடங்கிய செயல்பாடுகள் காணப்பட்டதா என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு

e3961bd6498a57a0ecd957375dafe91e

79 வயதுடைய காணாமல் போன முதியவரைத் தேடிவரும் கியூபெக் மாகாண பொலிஸார்

July 14, 2026

செவ்வாய்க்கிழமை காணாமல் போன 79 வயதுடைய முதியவர் ஒருவரைக் கண்டறிய கியூபெக் மாகாண பொலிஸார் அவசரக் கால ‘சில்வர் அலர்ட்’

3efd6adafaa3b0343fd40456085ce23a

வடக்கு எட்மன்டன் அடுக்குமாடி குடியிருப்புத் தீ விபத்தில் ஒருவர் பலி, பலர் காயம்

July 14, 2026

வடக்கு எட்மன்டன் (Edmonton) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை காலையிலும்

73VXPJ53XZH37J567O52V3QDPU

எஸ்கசோனியில் ஐந்து பேர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு: நோவா ஸ்கோஷியா ஆர்.சி.எம்.பி

July 14, 2026

இந்த மாத தொடக்கத்தில் நோவா ஸ்கோஷியாவின் (N.S.) எஸ்கசோனி (Eskasoni) பகுதியில் இடம்பெற்ற கடுமையான தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஐந்து

745487959_1006299015619928_5107752489134674917_n

விட்பி நீர்க்கரை நடைபாதை அருகே நடந்த வன்முறை -பாலியல் தாக்குதலைத் தொடர்ந்து சந்தேகநபரை பொலிஸார் தேடி வருகின்றனர்

July 14, 2026

விட்பி (Whitby) பகுதியில் உள்ள ‘இரோகுவாஸ் பீச் பார்க்’ (Iroquois Beach Park) பூங்காவிற்கு அருகில், திங்கட்கிழமை இரவு பெண்

748593131_1051673127217505_1132822808804161962_n

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள “அரவணன்” நோய்த் தடுப்பு சிகிச்சை நிலையம் இன்று (14.07.2026) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

July 14, 2026

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள “அரவணன்” நோய்த் தடுப்பு சிகிச்சை நிலையம் இன்று (14.07.2026) உத்தியோகபூர்வமாக திறந்து

arrest1

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவர்களை தாக்கிய சக மாணவர்கள் மூவர் விளக்கமறியலில்!

July 14, 2026

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் 13.07.2026 அன்று பாடசாலை நேரம் வகுப்பு ஒன்றுக்குள் புகுந்து சக மாணவரை இரும்புக் கம்பியால்

745885172_1779187646407243_2821693291413648739_n

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – தொல்லியல் திணைக்களத்துடன் நடைபெற்ற சந்திப்பில் சாணக்கியன் வலியுறுத்தல்

July 14, 2026

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – தொல்லியல் திணைக்களத்துடன் நடைபெற்ற சந்திப்பில் சாணக்கியன் வலியுறுத்தல் வடக்கு