குவஹாத்தியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரோமி பிந்தர் (Romi Bhinder) கைபேசியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் தற்போது விசாரணைக்கு உள்ளாகியுள்ளார்.
: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு (ACSU), இது தொடர்பாக ரோமி பிந்தருக்கு ‘காரணம் காட்டும்’ நோட்டீஸை வழங்கியுள்ளது. இதற்கு 48 மணி நேரத்திற்குள் அவர் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
: ஐபிஎல் ஊழல் தடுப்பு விதிமுறைகளின்படி, போட்டி நடைபெறும் போது வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கியிருக்கும் பகுதியில் (PMOA) அல்லது டக்-அவுட்டில் கைபேசிகளைப் பயன்படுத்தக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
காணொளி ஆதாரம்: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின் போது, பிந்தர் கைபேசியைப் பயன்படுத்திய காட்சிகள் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பானதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. பிந்தரின் விளக்கத்தைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை அமையும். ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகமும் இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.