ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் நடப்புக் கணக்கைப் பொறுத்தமட்டில், 2025 ஜனவரியில் 100 மில்லியன் டொலர்களாக இருந்த வருமானம், 2026 ஜனவரியில் சுமார் 370 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞான முதுகலை பட்டப்படிப்பு பீடத்தின் பணிப்பாளர் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண முடிகிறது. குறிப்பாக, 2025 ஜனவரியுடன் ஒப்பிடும்போது 2026 ஜனவரியில் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதில் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி 8.8 சதவீத வளர்ச்சியையும், கைத்தொழில் பொருட்களின் ஏற்றுமதி 5.9 சதவீத வளர்ச்சியையும் எட்டியுள்ளது.

நாட்டின் நடப்புக் கணக்கைப் பொறுத்தமட்டில், 2025 ஜனவரியில் 100 மில்லியன் டொலர்களாக இருந்த வருமானம், 2026 ஜனவரியில் சுமார் 370 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. இந்த சாதகமான மாற்றத்திற்கு வாகன இறக்குமதி செலவுகள் குறைந்தமை ஒரு முக்கிய காரணமாகும்.

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026 ஆம் ஆண்டு முழுவதும் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவு குறையும். இதனால் இறக்குமதி செலவுகள் குறைந்து வர்த்தகப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த முடியும். உலகப் பொருளாதாரத்தில் இலங்கை படிப்படியாக வலுவடைந்து வருவதை இது காட்டுகிறது.

சேவைத் துறையிலிருந்து கிடைக்கும் வருமானத்தை விட, உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈட்டப்படும் வருமானமே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நீண்ட காலத்திற்கு வலுப்படுத்தும். உலகளாவிய ரீதியில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் குறைய வாய்ப்புள்ள போதிலும், ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் வாகன இறக்குமதி செலவு குறைப்பு ஆகியவற்றின் மூலம் அந்த இடைவெளியை நிரப்ப முடியும்.

இந்த நிலை தொடர்ந்தால், 2026 ஆம் ஆண்டு முழுவதும் இலங்கையின் செலுத்தல் மீதியில் சாதகமான வருமானத்தை பேண முடியும் என்பதுடன், இது உலகப் பொருளாதார அரங்கில் இலங்கையை ஒரு சிறந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என நம்புகின்றோம் என்றார்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.