உள்நாட்டு எல்.பி எரிவாயு (LP gas), நீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களின் விலைகள் வரவிருக்கும் மாதங்களில் அதிகரிக்கக்கூடும் என்று ஐக்கிய எரிசக்தி மற்றும் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் அழைப்பாளருமான ஆனந்த பாலித எச்சரித்துள்ளார்.
‘ பாலித, இந்த வார இறுதிக்குள் எல்.பி எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 300 ரூபாய்க்கும் அதிகமாக உயரக்கூடும் என்றும், ஜூன் 15 ஆம் திகதிக்குள் நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
“எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி, எல்.பி எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 500 ரூபாய் வரை அதிகரிக்கப்படலாம்” என்று அவர் கூறினார்.
தரம் குறைந்த நிலக்கரி இருப்புக்களை இறக்குமதி செய்தமை மற்றும் நாட்டிலிருந்து தேவையற்ற முறையில் வெளிநாட்டு நாணயம் வெளியேறியமை ஆகியவற்றுடன் இந்த எதிர்பார்க்கப்படும் விலை உயர்வுகள் தொடர்புடையவை என்று பாலித குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கனவே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் திண்டாடிக் கொண்டிருக்கும் நுகர்வோர் மீது, இந்த கூடுதல் செலவுகள் மேலும் சுமையை ஏற்படுத்தும் என்று அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இருப்பினும், எல்.பி எரிவாயு விலைகள், நீர் கட்டணங்கள் அல்லது மின்சாரக் கட்டண திருத்தங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை