மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் மோதலைத் தொடர்ந்து, தேசிய அளவிலான எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த உலகின் முதல் நாடாக பிலிப்பைன்ஸ் மாறியுள்ளது.
எண்ணெய் விநியோக தடைகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த நாடு தனது எண்ணெயின் 98%-ஐ பாரசீக வளைகுடா பகுதியில் இருந்து இறக்குமதி செய்கிறது. கடந்த மூன்று வாரங்களில், எரிபொருள் விலை பலமுறை உயர்ந்துள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் இரட்டிப்பாக உயர்ந்துள்ளன. நிறைவேற்று உத்தரவில், ஜனாதிபதி Ferdinand Marcos Jr, நாட்டின் எரிசக்தி விநியோகத்திற்கு “உடனடி அபாயம்” இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு, எரிசக்தி நிலைத்தன்மையை உறுதி செய்யவும், பொருளாதாரத்தை பாதுகாக்கவும் அரசு சட்ட அதிகாரத்துடன் நடவடிக்கைகள் எடுக்க உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவின் கீழ், எரிபொருள், உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் ஒழுங்கான விநியோகத்தை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், எரிபொருள் மற்றும் பெட்ரோலிய பொருட்களை நேரடியாக வாங்கி கையிருப்பை அதிகரிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை, எரிசக்தி அமைச்சர் தெரிவித்ததாவது, தற்போதைய பயன்பாட்டின் அடிப்படையில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சுமார் 45 நாட்களுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது.
இந்த அவசரநிலை உத்தரவு ஒரு வருடத்திற்கு நடைமுறையில் இருக்கும். அதனை நீட்டிக்கவோ அல்லது ரத்து செய்யவோ அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது.