உலகில் அதிக ஒல்லியான மக்கள் வாழும் நாடுகள்..

உலகில் உள்ள நாடுகள் மத்தியில் உணவு பழக்கம் , கால நிலை போன்றவை வேறுப்படும். இதனால், மனிதர்களின் அன்றாட வேலை மற்றும் பழக்க வழக்கம் மாறுப்படும். இதனால், மனிதர்கள் உடலில் மாற்றம் ஏற்படும். இதில் சிலர் உடல் பருமனாகவும் , சிலர் ஒல்லியாகவும் காணப்படுவர். ஆனால், ஒரு குறிப்பிட்ட நாட்டில் மட்டும் ​குறைந்த அளவில் உடல் பருமன் கொண்ட மக்கள் தொகை நாடு உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

​ உலகில் உடல் பருமன் மிகக் குறைவாக உள்ள நாடுகளில் வியட்நாம் முதல் இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் வயது வந்த மக்களில் சுமார் 2.1 சதவீதம் பேர் மட்டுமே உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணமாக சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார காரணிகள் இணைந்து செயல்படுகின்றன. வியட்நாம் மக்கள் பெரும்பாலும் உள்ளூர் உணவு வகைகளையே உட்கொள்வது வழக்கமாக கொண்டுள்ளனர். இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதாலும், குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்தப்படுவதாலும் ஆரோக்கியமாகக் கருதப்படுகின்றன. அதே நேரத்தில் நீண்ட நேர வேலை மற்றும் சில பகுதிகளில் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாடும் இதற்குக் காரணமாக உள்ளது என கூறப்படுகிறது.

இதேபோல், வங்காள தேசமும் உடல் பருமன் குறைவாக உள்ள நாடுகளில் ஒன்றாகும். அங்கு வயது வந்தோரில் சுமார் 3.6% பேர் மட்டுமே உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஆண்களை விடப் பெண்களில் இந்த விகிதம் அதிகமாக உள்ளது. சில பகுதிகளில் குழந்தைகள் எடை குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர். கிழக்கு திமோரில் வயது வந்தோரில் சுமார் 3.8% பேர் மட்டுமே உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் உணவு பற்றாக்குறை ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. மக்கள் தொகையில் சுமார் 27% பேர் உணவுப் பற்றாக்குறையைச் சந்தித்து வருகின்றனர். இதுவும் உடல் பருமன் குறைவாக இருப்பதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவிலும் உடல் பருமன் விகிதம் குறைவாகவே உள்ளது. வயது வந்தோரில் சுமார் 3.9% பேர் மட்டுமே உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில பகுதிகளில் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் உணவு கிடைக்காத நிலையும் இதற்குக் காரணமாக இருக்கிறது. இருப்பினும், நகர்ப்புற வாழ்க்கை முறை மற்றும் மாற்றம் அடையும் உணவுப் பழக்கவழக்கங்களால் இந்தியாவில் உடல் பருமன் மெதுவாக அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கம்போடியா, நேபாளம், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளும் குறைந்த உடல் பருமன் விகிதம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. கம்போடியாவில் சுமார் 3.9% பேர் மட்டுமே பருமனாக உள்ளனர். அந்நாட்டில் பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்து விவசாயத்தை நம்பியுள்ளதால் இயற்கை உணவுகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். நேபாளத்தில் தொலைதூர பகுதிகளில் உணவு கிடைப்பதில் உள்ள சவால்களும் இதற்குக் காரணமாக இருக்கின்றன.

ஜப்பான் உலகில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றும் நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அங்கு பாரம்பரிய உணவில் அதிக காய்கறிகள், மீன் போன்றவை இடம்பெறுகின்றன; இறைச்சி பயன்பாடு குறைவாக உள்ளது. அதேபோல் மக்கள் உடற்பயிற்சி மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையையும் கடைப்பிடிக்கின்றனர். தென் கொரியாவிலும் ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் சுகாதார விழிப்புணர்வு அதிகமாக உள்ளது.

puputhu

ஆகஸ்ட் மாதம் முதல் மின்வெட்டு ஏற்படும் அபாயம் – முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை

March 9, 2026

நாட்டில் கடந்த பத்து நாட்களாக நிலக்கரி ஏற்றிய கப்பல்கள் எதுவும் வருகை தராத காரணத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல்

ni

புதிய தவிசாளராக றியாஸ் ஆதம் தெரிவு!

March 9, 2026

நிந்தவூர் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதுடன் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார். அம்பாறை

en

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி விபத்தில் உயிரிழப்பு

March 9, 2026

இன்று (09) மாலை வாத்துவ ரயில் நிலையத்திற்கும் பின்வத்தை ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள ரயில் பாலத்தின் மீது, இரண்டு

fire

கடும் வறட்சி; பற்றி எரியும் காடு

March 9, 2026

மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலையைத் தொடர்ந்து, ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியின் அளுத்கம பகுதியில் நேற்று

ha

“வளமான நாட்டின் அபிமானம் – அவளே நாட்டின் முன்னோடி” – பிரதமர்

March 9, 2026

பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் சட்டப் புத்தகங்களுக்குள் மட்டும் முடங்கிவிடாமல், அவை ஒவ்வொரு பெண்ணும் நிஜ வாழ்க்கையில்

arrest

பல  காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது 

March 9, 2026

ஹட்டன் பகுதியில் பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப்

wil

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

March 9, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கை

keri

கேரி கிர்ஸ்டன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம்

March 9, 2026

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன்

thekk

வன்னியில் தேக்குமரக் குற்றிகளை கடத்திய சாரதி கைது

March 9, 2026

வன்னி பகுதியில் இருந்து தேக்குமரக் குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்த லொறி ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் புத்தூர் சந்தி பகுதியில்

pu

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து

March 9, 2026

ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முஜ்தபா காமேனிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு

sa vas

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது

March 9, 2026

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை

ta

தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயம்

March 9, 2026

பத்தேகமவில் உள்ள பாடசாலையொன்றில் இன்று (9) மதியம் தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பத்தேகம