உலகளாவிய போர்ச்சூழல்; விலையேற்றங்களால் அல்லலுறும் மக்களுக்கு நிவாரணம் அவசியம் – சஜித் பிரேமதாச

தற்போதைய உலகளாவிய போர்ச்சூழல் நிலைமை காரணமாக, இந்நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை (Fuel Security) உறுதிப்படுத்துவது, போதுமான கையிருப்புகளைப் பேணிக்கொள்வது மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடியின் போது எரிபொருட்களை முகாமைத்துவம் செய்து கொள்ளல் தொடர்பாக அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகளைத் தெளிவுபடுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும். இதன் பொருட்டு வலுச்சக்தி அமைச்சரிடமிருந்து சில விடயங்கள் தொடர்பில் விரிவான பதில்களை எதிர்பார்க்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செவ்வாய்க்கிழமை (07) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் முன்வைத்த கேள்விகளாவன,

இந்நாட்டிற்கு எரிபொருட்களை இறக்குமதி செய்து, கப்பலிலிருந்து இறக்கும் நிலை வரையிலும், பெட்ரோல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நிலை வரையிலும் ஏற்படும் செலவு ஒவ்வொரு எரிபொருட்கள் வாரியாகவும் எவ்வளவு? அந்த செலவு தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய விரிவான அறிக்கையை இந்த சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா?

துறைமுகத்தில் இறக்குமதி செய்யும் அதே விலைக்குச் சமமான விலையில் எரிபொருட்களை மக்களுக்குப் பெற்றுத் தருவோம் எனத் தேர்தல் காலங்களில் மக்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் வாக்குறுதிகளை நீங்கள் வழங்கினீர்கள். ஆனால் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. துறைமுகத்தில் இறக்குமதி செய்யும் விலைக்கு சமமான விலையில் எரிபொருட்களை இன்னும் கூட வழங்க முடியாமல் இருப்பதற்கான காரணம் யாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.

எரிபொருட்கள் மீது விதிக்கப்படும் வரி வகைகள் மற்றும் அவற்றின் அளவுகளும் ஒவ்வொரு எரிபொருட்கள் வாரியாக எவ்வளவு? தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எரிபொருள் விலை நிர்ணயம் செய்வதில் பயன்படுத்தப்படும் எரிபொருள் விலை சூத்திரம் யாது? அவ்வாறெனில், எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் விலைகள் கணக்கிடப்படும் விதம் தொடர்பான விரிவான அறிக்கையை இந்த சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா?

நடைமுறையில் காணப்படும் எரிபொருள் விலை சூத்திரத்தை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என நீங்கள் தேர்தல் காலங்களில் பிரஸ்தாபித்திருந்தீர்கள். அவ்வாறே இந்த விலை சூத்திரத்தை மாற்றியமைத்து மக்கள் நலன் சார்ந்த, மக்களுக்கு சார்பான விலை சூத்திரமொன்றை முன்வைப்போம் என்றும் கூறியிருந்தீர்கள். அவ்வாறாயின் அவ்வாறு கூறிய மக்களுக்கு சார்பான விலை சூத்திரத்தை முன்வைக்க முடியாமைக்கான காரணம் யாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.

இந்நாட்டின் மொத்த நுகர்வுக்குத் தேவையான மதிப்பிடப்பட்ட எரிபொருட்களின் (கச்சா எண்ணெய், டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய், உராய்வு நீக்கி (Lubricant) மற்றும் விமான எரிபொருள்) அளவுகள் மாதாந்த அடிப்படையிலும் வருடாந்த அடிப்படையிலும் எவ்வளவாக அமைந்து காணப்படுகின்றன? கடந்த மூன்று (03) மாதங்களில் மாதாந்தம் விநியோகிக்கப்பட்ட மேற்கண்ட எரிபொருள் வகைகள் மெட்ரிக் டொன் அடிப்படையில் எவ்வளவு? இந்த காலகட்டத்தில் எரிபொருள் வகைகளுக்கு ஏற்ப பதிவான நுகர்வுகளின் அளவுகள் யாவை?

2026 ஜனவரி முதல் மார்ச் வரை இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மொத்த எரிபொருட்களின் அளவு, கச்சா எண்ணெய், டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய், உராய்வு நீக்கி மற்றும் விமான எரிபொருள் என்றடிப்படையில் தனித்தனியாக எவ்வளவு? இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கப்பல் வாரியாக (shipment-wise) எவ்வளவு ? குறித்த கப்பல்கள் இந்நாட்டிற்கு வருகை தந்த திகதிகள் யாவை ? அந்த எரிபொருட்கள் முதுராஜவல மற்றும் கொழும்பு சேமிப்பு களஞ்சிய முனைய வளாகங்களில் இறக்கப்பட்ட அளவுகளை தனித்தனியாக தெரிவிக்க முடியுமா?

இந்நாட்டில் பயன்படுத்தப்படும் எரிபொருட்களின் வகைகளில் (பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், உராய்வு நீக்கி, விமான எரிபொருள்) சுத்திகரிக்கப்பட்டு நேரடியாக இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களின் வகைகள் யாவை? கச்சா எண்ணெயாக இறக்குமதி செய்து இந்நாட்டிலேயே சுத்திகரித்து வழங்கப்படும் எரிபொருட்களின் வகைகள் யாவை? மேற்கண்ட ஒவ்வொரு பிரிவிலும் மேற்கொள்ளப்படும் மொத்த எரிபொருள் இறக்குமதிகள் (refined imports) மற்றும் உள்நாட்டு சுத்திகரிப்பு மூலம் வழங்கப்படும் அளவுகள் தனித்தனியாக எவ்வளவு?

இந்நாட்டில் எரிபொருள் சுத்திகரிப்புச் செய்வதன் தற்போதைய நிலை தொடர்பாக, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் தற்போதைய இயல் திறன் (capacity) மற்றும் பயன்படுத்தப்படும் உண்மையான அளவு (utilization) எவ்வளவு? இந்த சுத்திகரிப்பு நிலையம் முழு இயல் திறனில் இயங்காவிட்டால், அதற்கான காரணங்கள் யாவை?

அரசாங்கம் இதுவரை கொள்வனவு செய்துள்ள மொத்த எரிபொருட்களின் அளவு எவ்வளவு? இந்த கொள்வனவு வழங்கல்களை மேற்கொள்வதற்கு பொறுப்பெடுத்துள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் குறித்த நிறுவனங்கள் யாவை? கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்களுக்காக இணக்கம் கண்டுள்ள பிரீமியம் (premium) அளவுகள் யாவை? இதுவரை இறக்குமதி செய்யப்ட்ட எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்திய பிரீமியம் அளவுகள் யாவை?

எண்ணெய் விலைகளின் அதிகரிப்புக்கு மத்தியிலும் போர்த்துகல், ஸ்பெயின், துருக்கி, மலேசியா, இந்தோனேசியா, இந்தியா, இத்தாலி, ஜெர்மன் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் தமது நாட்டு மக்களுக்காக விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன. சேமித்து வைத்துள்ள மேலதிக கையிருப்புப் பணத்தை, தொழிலாள வர்க்கத்தினருக்கும், நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்ட பொதுமக்களுக்கும் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் பயன்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

3

“ரஜினிகாந்த் பெயரையோ, புகைப்படத்தையோ எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது!” – அண்ணாமலை, லாரன்ஸ் விவகாரத்தில் ரஜினி நற்பணி மன்றம் அசுர வேக அறிக்கை!

June 14, 2026

சென்னை: “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயரையோ அல்லது அவரது புகைப்படத்தையோ எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ தங்களது சுயலாபத்திற்காகப்

2

“திமுக-வை காப்பி அடிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை; டாஸ்மாக் ரெய்டுக்காக டெல்லி சென்றவர் ஸ்டாலின்!” – திமுக தலைவருக்குத் தவெக ஐடி விங் அசுர வேக மாஸ் பதிலடி!

June 14, 2026

சென்னை: “வாய்ப்பு கிடைக்கும் துறைகளில் எல்லாம் மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக

1

“சாதி, மத, பணபல அரசியலைக் கடந்து மக்கள் மௌனப் புரட்சி செய்துள்ளனர்!” – திமுக கூட்டணி குறித்து துரை வைகோ அசுர வேக அதிரடிப் பேட்டி!

June 14, 2026

மதுரை: “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சாதி, மத, பணபல அரசியலை அடியோடு தூக்கி எறிந்துவிட்டு, மக்கள் மாபெரும் மௌனப்

722205425_2516904032157267_6855962867046714642_n

மயிலிட்டி மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற நாளைய போராட்டத்திற்கு பூரண ஆதரவு, அனைவரையும் கலந்து கொள்ளுமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை

June 14, 2026

போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மக்களது காணிகள் 36 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலையில் மயிலிட்டி மக்கள்

pta

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) நீக்கப்படுகிறது; இரண்டு மாதங்களில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது

June 14, 2026

கொழும்பு: இலங்கையில் நீண்டகாலமாகப் பலத்த விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) முழுமையாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக

QLLE5GRSC5F5FCSDC7A63GB54U

பிரிட்டிஷ் கொலம்பியா இளைஞரைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்: தொடர் அச்சுறுத்தல் குற்றச்சாட்டு

June 14, 2026

ரொறன்ரோ: நபர் ஒருவருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் மற்றும் தொல்லை கொடுத்து வந்த குற்றச்சாட்டின் பேரில், பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தைச்

VFSVNY33WNCS5IL6IWULQ3EVUQ

ரொறன்ரோவில் கத்திக்குத்துச் சம்பவம்: 50 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயம்

June 14, 2026

ரொறன்ரோ: கனடாவின் ரொறன்ரோ நகரின் கிழக்குப்பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 13, 2026) இரவு நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 50 வயது

JZTK3F6L2NCDDLTE6OY6XIQ4OI

கனடாவில் கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் பலி

June 14, 2026

ஒண்டாரியோ: கனடாவின் ஒண்டாரியோ (Ontario) மாகாணத்தில் நிகழ்ந்த மிக மோசமான வாகன விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள்

sss

சியான்’ விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

June 14, 2026

தமிழ் திரையலகின் பெருமிதமாக ஜொலிக்கும் சர்வதேச தரத்திலான நட்சத்திர நடிகர் சியான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்

ang

நவீன தொழில் நுட்பத்தில் தயாரான பாடலை வெளியிட்ட ‘அங்கீகாரம்’ படக் குழு

June 14, 2026

அறிமுக நாயகன் கே ஜே ஆர் நடிப்பில் தயாராகி உள்ள ‘அங்கீகாரம்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெற்றி விழா ஆந்தம்’எனும்

sam

நடிகை சமந்தா நடிக்கும் ‘எங்கள் தங்கம்’

June 14, 2026

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையாக திகழும் சமந்தா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

100

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படம்

June 14, 2026

மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இயக்குநர் சசி