ஈரான் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியைப் படுகொலை செய்த பின்னணி

ஈரான் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியைப் படுகொலை செய்வதற்கான திட்டத்தைத் தீட்டியபோது, இஸ்ரேல் எவ்வாறு தெஹ்ரானின் கண்காணிப்பு கெமெரா அமைப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து தரவுகளைத் திருடியது என்பது குறித்த தகவல்களை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இதன் மூலம் கமேனியின் அன்றாட நடமாட்டங்கள், வாகனங்களை நிறுத்தும் முறை முதல் அவரது பாதுகாவலர்களின் பணி மாற்ற முறைகள் வரையிலான நுணுக்கமான விடயங்கள் மிக நெருக்கமாகக் கண்காணிக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

இவ்வாறு திரட்டப்பட்ட தரவுகளைக் கொண்டு, மொசாட் அமைப்பின் ‘8200’ (Eighty-Two Hundred) எனும் பிரிவினால் ஒரு தரவு வலைப்பின்னல் உருவாக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று, கமேனியின் அலுவலகத்தின் தொலைபேசித் தொடர்பாடல் கட்டமைப்பிற்கு இடையூறு விளைவிக்கப்பட்டதோடு, அங்கிருந்த உளவாளிகளின் உதவியுடன் இத்திட்டம் உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு தாக்குதலை ஈரான் சற்றும் எதிர்பார்க்காத ஒரு பகல் வேளையில் ஆரம்பிக்கப்பட்ட இத்தாக்குதலின் முதல் ஒரு மணித்தியாலத்திலேயே கமேனி கொல்லப்பட்டமை, இத்திட்டத்தின் நுணுக்கமான தன்மையைப் பறைசாற்றுகிறது.

இதேவேளை, இஸ்ரேலிய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானங்கள், தெஹ்ரானிலுள்ள ஈரானிய ஆட்சியாளர் வளாகத்திலிருந்த அலி கமேனியின் நிலத்தடி இராணுவப் பதுங்கு குழியை அழித்ததாகக் கூறப்படும் காணொளிகளையும் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ஈரான் தலைவர் கமேனியைப் படுகொலை செய்யும் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீட்டப்பட்டதாகவும், அதனை 6 மாதங்களுக்குப் பின்னரே நடைமுறைப்படுத்தத் தீர்மானித்திருந்ததாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கேட்ஸ் தெரிவித்துள்ளார். எனினும், அந்த இலக்கை அதற்கு முன்னரே அடைய முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில்:

“கடந்த ஆண்டு நவம்பரிலேயே கமேனியைக் கொல்லத் தீர்மானித்தோம். இது குறித்து எமது இராணுவம் மற்றும் மொசாட் அமைப்புடன் ஆலோசித்தோம். அதன் பின்னர் பிரதமர் நெதன்யாகு மற்றும் ஜனாதிபதி ட்ரம்ப் இடையிலான பேச்சுவார்த்தைகளிலும் இது குறித்துப் பேசப்பட்டது.

அந்தச் சமயத்தில்தான் ஈரானில் போராட்டங்கள் தொடங்கின. ஈரான் எங்களை முந்திக்கொண்டு தாக்கும் என்ற சந்தேகம் எமக்கு ஏற்கனவே இருந்தது. அதனுடனேயே இவ்வாறானதொரு நடவடிக்கை அவசியம் என்பது உறுதியானது.”

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் மீது தாக்குதல்களைத் தொடங்கி இன்றுடன் ஒரு வாரமாகிறது.

சுமார் 40 ஆண்டுகள் இரும்புக்கரம் கொண்டு ஈரானை ஆட்சி செய்த ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உட்பட 1,332 பேர் இதுவரை நடத்தப்பட்ட பாரிய தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர்.

ஈரானிய செம்பிறை சங்கத்தின் தரவுகளின்படி, இப்போரினால் ஈரானில் 3,090 பொதுமக்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மருந்தகங்கள் மற்றும் செம்பிறை மையங்கள் உட்பட சுமார் 600 இடங்கள் சேதமடைந்துள்ளன. ஈரானின் மீதான தாக்குதல்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் அறிவித்துள்ளபடி கடந்த 72 மணித்தியாலங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் எண்ணிக்கை 200-க்கும் அதிகமானது.

இதேவேளை, ஈரானின் புதிய தலைவரைத் தனது விருப்பப்படியே நியமிக்கப் போவதாகவும், கமேனியின் மகனை அந்நாட்டின் ஆன்மீகத் தலைவராக நியமிக்கத் தான் எதிர்ப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் பேசிய அவர், ஈரானிய இராணுவப் பிரிவினர் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், ஈரான் அண்டை நாடுகளின் மீதான தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி, அண்மையில் இஸ்ரேலின் டெல் அவிவ் மீது நடத்திய தாக்குதலுக்குத் தாங்கள் முதன்முறையாக ஈரானில் தயாரிக்கப்பட்ட ‘கொரம்ஷார்-4’ (Khorramshahr-4) வகை ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. இது தொடர்பான காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

எனினும், ஈரான் நடத்திய எந்தவொரு தாக்குதலாலும் தங்கள் நாட்டிற்குப் பாரிய சேதங்கள் ஏற்படவில்லை என இஸ்ரேல் கூறியுள்ளது.

ஈரானில் தயாரிக்கப்பட்ட கொரம்ஷார் ஏவுகணைகள் ஒரே நேரத்தில் பல இடங்களைத் தாக்கக்கூடிய அதிநவீன ஏவுகணைகளாகக் கருதப்படுகின்றன.

அதிகபட்சமாக 2,000 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கக்கூடிய இந்த ஏவுகணை, 1.5 டன் எடையுள்ள வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ir

இலங்கைக் கடற்பரப்பில் வெடித்து சிதறிய கப்பவிவ் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை முடிவுகள்

March 7, 2026

இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அருகே ஈரானின் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற ஈரானின் போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி

kin

சட்டவிரோத மணல் அகழ்வு : 15 படகுகள் பறிமுதல்

March 7, 2026

​கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர், 15 மணல் ஏற்றிய படகுகளுடன்

du

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கருகில் வெடிப்பு

March 7, 2026

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு மேலே இன்று (7) காலை வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வான்பரப்பில் புகைமூட்டம் காணப்பட்டதாகவும்

gu

ஜா-எலவில் துப்பாக்கிச் சூடு!

March 7, 2026

ன்று (07) அதிகாலை ஜா-எல பகுதியில் பட்டுவத்தே சாமரவின் மனைவியின் வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும்

is

இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

March 7, 2026

நிலவும் மோதல் நிலைமை காரணமாக, இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் தமது பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு

1688202098-EARTHQUAKE-6

ஈரானில் நிலநடுக்கம்

March 7, 2026

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07) காலை ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவான

war

கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட ஈரானின் 30 போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

March 7, 2026

ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30 இற்கும் மேற்​பட்ட கப்​பல்​களை தகர்த்​த​தாக​வும், கடந்த 72 மணி நேரத்​தில்

mur

முதியவர் அடித்துக் கொலை: ஒருவர் கைது!

March 7, 2026

மின்னேரியா – ரொட்டவெவ பகுதியில், தனது சகோதரியைக் காப்பாற்றச் சென்ற முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம்

wate

கடலில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இருவர் மீட்பு!

March 7, 2026

ஹிக்கடுவை துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடலில் நீராடச் சென்று, கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

ko

கோடாவுடன் இருவர் கைது!

March 7, 2026

கட்டுநாயக்க – தடுகங்ஓயா பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை

arrest

அக்குரேகொட இரட்டைக் கொலைக்கு உதவிய மேலும் இருவர் கைது!

March 7, 2026

தலங்கமை – அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைச் சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு

acc

பிரதான வீதியில் லொறி மோதி பாதசாரி உயிரிழப்பு

March 7, 2026

கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்