இவ்வாண்டு 676 வீதி விபத்துக்களில் 706 பேர் உயிரிழப்பு!

நாடளாவிய ரீதியில் இவ்வருடம் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 676 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, அவற்றில் 706 பேர் மரணித்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை (6) இலங்கை மருத்துவச் சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது வீதி விபத்துக்கள் ஒரு பேரழிவாக உருவெடுத்துள்ளது. 2024, 2025 ஆம் ஆண்டுகளை விட 2026 ஆம் ஆண்டில் விபத்துக்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது. அந்தவகையில் கடந்த ஆண்டு மாத்திரம் 2,549 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, இதன்போது 2,721 பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். அதேபோல் இவ்வருடத்துக்கான தரவுகளுக்கமைய ஜனவரி 1 முதல் ஏப்ரல் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 676 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு, அவற்றில் 706 பேர் மரணித்துள்ளனர்.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு விபத்துக்களின் எண்ணிக்கை 74 இனாலும், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 80 ஆகவும் அதிகரித்துள்ளது. விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாக உள்ளனர். கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி வரையான தரவுகளின்படி, உயிரிழந்தவர்களில் 230 பேர் பாதசாரிகளாவதுடன், 247 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களாவர். இது நாட்டுக்கு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும். சமீபத்தில் பள்ளேகல பகுதியில் 17 வயதுடைய இரண்டு மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தனர்.

அவர்கள் இருவரிடமும் சாரதி அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை. பெற்றோர்கள் பிள்ளைகள் மீதுள்ள அன்பினால் மோட்டார் சைக்கிள்களை வாங்கிக் கொடுக்கின்றனர், எனினும் இறுதியில் பிள்ளைகளையே இழக்க நேரிடுகிறது. ஆகையால் சாரதி அனுமதிப்பத்திரமில்லாத பிள்ளைகளுக்கு வாகனங்களை வழங்க வேண்டாம் எனப் பெற்றோரிடம் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், தந்தையும் தாயும் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது, இடையில் சிறிய பிள்ளையை எவ்வித பாதுகாப்புக் கவசமும் இன்றி வைத்துக்கொண்டு செல்வதை அவதானிக்க முடிகிறது. இது எவ்வகையான அன்பு? விபத்து சம்பவிக்கும் பட்சத்தில் பிள்ளைக்கு பாரிய பாதிப்பு ஏற்படுமல்லவா?

மேலும் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் அனைத்து பொலிஸ் நிலையங்களும் வீதி ஒழுங்குமுறைகளை அமுல்படுத்தி வருகின்றன. மதுபோதை, போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்துபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரையான காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 5,291 சாரதிகளும், போதைப்பொருள் பயன்படுத்திய 4,055 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டு காலத்தில் தூரப் பிரதேசங்களுக்குப் பயணம் செய்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். பஸ் சாரதிகளுக்கும் உரிய ஓய்வு தேவை.

மேலும், கிராமங்களில் நடத்தப்படும் துவிச்சக்கர வண்டி மற்றும் ஓட்டப்பந்தயப் போட்டிகளை நடத்துவோர், முறையான பொலிஸ் அனுமதியைப் பெற வேண்டும். தற்போது நிலவும் கடும் வெப்பம் காரணமாகப் போட்டியாளர்களின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு இவ்வாறான போட்டிகளின் தூரத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். வீதியில் செல்லும் ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் அனைவருமே வீதி ஒழுக்கத்தைப் பேணிச் செயற்பட்டால் மாத்திரமே இந்த விபத்துப் பேரழிவைத் தடுக்க முடியும் என்றார்.

722205425_2516904032157267_6855962867046714642_n

மயிலிட்டி மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற நாளைய போராட்டத்திற்கு பூரண ஆதரவு, அனைவரையும் கலந்து கொள்ளுமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை

June 14, 2026

போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மக்களது காணிகள் 36 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலையில் மயிலிட்டி மக்கள்

pta

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) நீக்கப்படுகிறது; இரண்டு மாதங்களில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது

June 14, 2026

கொழும்பு: இலங்கையில் நீண்டகாலமாகப் பலத்த விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) முழுமையாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக

QLLE5GRSC5F5FCSDC7A63GB54U

பிரிட்டிஷ் கொலம்பியா இளைஞரைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்: தொடர் அச்சுறுத்தல் குற்றச்சாட்டு

June 14, 2026

ரொறன்ரோ: நபர் ஒருவருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் மற்றும் தொல்லை கொடுத்து வந்த குற்றச்சாட்டின் பேரில், பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தைச்

VFSVNY33WNCS5IL6IWULQ3EVUQ

ரொறன்ரோவில் கத்திக்குத்துச் சம்பவம்: 50 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயம்

June 14, 2026

ரொறன்ரோ: கனடாவின் ரொறன்ரோ நகரின் கிழக்குப்பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 13, 2026) இரவு நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 50 வயது

JZTK3F6L2NCDDLTE6OY6XIQ4OI

கனடாவில் கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் பலி

June 14, 2026

ஒண்டாரியோ: கனடாவின் ஒண்டாரியோ (Ontario) மாகாணத்தில் நிகழ்ந்த மிக மோசமான வாகன விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள்

sss

சியான்’ விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

June 14, 2026

தமிழ் திரையலகின் பெருமிதமாக ஜொலிக்கும் சர்வதேச தரத்திலான நட்சத்திர நடிகர் சியான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்

ang

நவீன தொழில் நுட்பத்தில் தயாரான பாடலை வெளியிட்ட ‘அங்கீகாரம்’ படக் குழு

June 14, 2026

அறிமுக நாயகன் கே ஜே ஆர் நடிப்பில் தயாராகி உள்ள ‘அங்கீகாரம்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெற்றி விழா ஆந்தம்’எனும்

sam

நடிகை சமந்தா நடிக்கும் ‘எங்கள் தங்கம்’

June 14, 2026

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையாக திகழும் சமந்தா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

100

இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படம்

June 14, 2026

மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இயக்குநர் சசி

sea

கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை!

June 14, 2026

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, காங்கேசன்துறையிலிருந்து மன்னார்

Legends_1

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 14, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

Shakthivel

இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் கொடூர உண்மைகளை செம்மணி புதைகுழி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது – அருட்தந்தை மா. சத்திவேல்

June 14, 2026

செம்மணி சமூக புதைகுழி அகழ்வுப் பணிகளில் வெளிவரும் மனித எச்சங்களும், குழந்தைகளின் பாவனை பொருட்களும் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும்