இலங்கை பொலிஸார் 24 மணிநேரமும் சேவையில் ஈடுபட வேண்டும்!

பொதுமக்களின் பணம், தங்கம் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க சொத்துக்களைக் கொள்ளையிடுவதற்கும், திருடுவதற்கும் அல்லது பலவந்தமாகப் பறிப்பதற்கும் குற்றவாளிகள் கையாளும் உத்திகள் குறித்து தெளிவுபடுத்தவும், அத்தகைய அச்சுறுத்தல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகாட்டல்களை வழங்கவும் இலங்கை பொலிஸ் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.

இலங்கை பொலிஸார் 24 மணிநேரமும் சேவையில் ஈடுபட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாழவும், நம்பிக்கையுடன் எவ்விடத்திற்கும் சுதந்திரமாக நடமாடவும் கூடிய பாதுகாப்பான சூழலைப் பேணுவதற்குப் பாடுபடுகின்றனர். நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, பொதுப் பாதுகாப்பிற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், கவனக்குறைவு அல்லது விழிப்புணர்வு இன்மையால் மக்கள் இன்னமும் பாரிய குற்றங்களுக்குப் பலியாகி வருவதை அண்மைக்காலச் சம்பவங்கள் காட்டுகின்றன.

இதற்கு அண்மைய உதாரணமாக, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற சம்பவத்தைக் குறிப்பிடலாம். அங்கு இரு வேறு சந்தர்ப்பங்களில் இரு பெண்கள் கடத்தப்பட்டு, அவர்களுக்குப் பலவந்தமாக மயக்கமருந்து கலந்த பானம் புகட்டப்பட்டு, அவர்களது தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இதில் ஒரு பெண் கொல்லப்பட்டதுடன், மற்றவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

இவ்வாறான சம்பவங்களைக் கருத்திற் கொண்டு, பொதுமக்கள் தமது அன்றாட வாழ்வில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் பின்வரும் விடயங்களைக் கடைப்பிடிக்குமாறும் இலங்கை பொலிஸ் கேட்டுக்கொள்கிறது:

கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்

பொது இடங்களிலோ அல்லது பொதுப் போக்குவரத்துகளிலோ உங்களை அணுகி நட்பாகப் பழக முனையும் அறிமுகமில்லாத நபர்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் போலவோ அல்லது தெரிந்தவர் போலவோ நடிக்க முயற்சிக்கும் நபர்களை நம்புவதைத் தவிர்க்கவும்.
அந்நிய நபர்களால் வழங்கப்படும் டொபி(Toffees), சொக்லேட் (Chocolates), ஏனைய உணவுப் பொருட்கள், பானங்கள் அல்லது குடிநீரை உட்கொள்ள வேண்டாம். இவற்றில் மயக்கமருந்து அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கலக்கப்பட்டிருக்கலாம்.
நபர்களைக் செயலிழக்கச் செய்யவோ அல்லது தீங்கு விளைவிக்கவோ பயன்படுத்தப்படும் நச்சுத் தெளிப்பான்கள் (Poisonous Sprays) அல்லது மிளகாய்த் தூள் போன்ற பொருட்கள் குறித்து விழிப்புடன் இருக்கவும்.

மேலதிக பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்

நெடுஞ்சாலைகளிலோ அல்லது பொது இடங்களிலோ அறிமுகமில்லாத நபர்களிடம் வாகன உதவிகளைப் (Lift) பெறுவதைத் தவிர்க்கவும்.
எந்தச் சூழ்நிலையிலும் அந்நியர்களால் வழங்கப்படும் உணவு அல்லது பானங்களை உட்கொள்ள வேண்டாம்.
தேவையற்ற முறையில் அறிமுகமில்லாத நபர்களையோ அல்லது குழுக்களையோ அணுக வேண்டாம்.
உங்களிடமுள்ள பணம், நகைகள் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க பொருட்கள் குறித்து விழிப்புடன் இருக்கவும்.
ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நபர், வாகனம் அல்லது குற்றச்செயல் தொடர்பான நடவடிக்கைகளை அவதானித்தால், உடனடியாக 119, 118 ஆகிய இலக்கங்கள் ஊடாக பொலிஸாரைத் தொடர்பு கொள்ளவும் அல்லது அருகிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தரிடம் முறையிடவும்.
இவ்வழிகாட்டல்களைப் பின்பற்றி புத்திசாலித்தனமாகவும் விழிப்புணர்வுடனும் செயற்படுவது மிகவும் அவசியமென இலங்கை பொலிஸ் வலியுறுத்துகிறது. இத்தகவல்களை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அயலவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் சமூக விழிப்புணர்வை வலுப்படுத்தி, இவ்வாறான குற்றங்களைத் தடுக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

இந்த அறிவுறுத்தல்களைப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு செல்லுமாறு ஊடக நிறுவனங்களிடம் இலங்கை பொலிஸ் கோரிக்கை விடுக்கின்றது.

pro

மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

March 24, 2026

இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி பொத்துவில் கனகர் கிராம மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (23) முன்னெடுக்கப்பட்டது

vet

மேஜர் ஜெனரல் சில்வா மற்றும் ஆளுநர் வேதநாயகன் விசேட சந்திப்பு

March 24, 2026

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பி. டி சில்வா மற்றும் வட மாகாண ஆளுநர் ந.

arj

அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராக முறைப்பாடு!

March 24, 2026

கிளிநொச்சி பகுதியில் வாழும் மலையக மக்களை கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இழிவாக பேசியதாகக் கூறப்படும் அர்ச்சுனா எம்.பி.க்கு

Gold

ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்த தங்க விலை

March 24, 2026

நாட்டில் இன்று (24) தங்கத்தின் விலை மூன்று முறை அதிகரித்துள்ளதாக இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி,

xa

அமெரிக்க விமான நிலையங்களில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு: ஒரு கனடியராக நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால் தெரிந்து கொள்ள வேண்டியவை

March 24, 2026

அமெரிக்க அரசாங்கத்தின் பகுதி முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக ((TSA) அதிகாரிகளுக்கு உதவியாக குடிவரவு

his

ஹெஸ்புல்லாவுடன் தொடர்பு: வான்கூவர் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை

March 24, 2026

ஈரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பிற்கு நிதி வழங்கும் 100 மில்லியன் டொலர் வலையமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி வான்கூவரைச் சேர்ந்த

nalinda-jayatissa_2025.01

எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

March 24, 2026

தற்போதைய இக்கட்டான சூழலில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்வதற்கு விலை சூத்திரம் பயன்படுத்தப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த

ceb

மீண்டும் மின்வெட்டு

March 24, 2026

மின்சார உற்பத்திக்காக தேவையான எரிபொருள் கிடைக்கப்பெறுவதனால் இதுவரை மின்வெட்டு மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என தேசிய கட்டமைப்பு செயற்பாட்டு

rea

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற முறைமைக்கு எதிர்ப்பு; ஆசிரியர்கள் போராட்டம்

March 24, 2026

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி கடந்த 8

phil

எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் நாடு

March 24, 2026

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் மோதலைத் தொடர்ந்து, தேசிய அளவிலான எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த உலகின் முதல் நாடாக

ca

கனடாவுக்கு அனுப்புவதாக நடந்த பாரிய நிதி மோசடி

March 24, 2026

முழு குடும்பத்தையும் கனடாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஒரு கோடியே 58 லட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ்,

fi

அமெரிக்காவில் நீதிமன்றக் கட்டிடத்தில் தீ விபத்து

March 24, 2026

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணம், பிளாய்ட் கவுண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றக் கட்டடத்தில் திங்கள்கிழமை (23) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.