இலங்கைக்குக் கடல் வழியாகக் கடத்த முயன்ற 120 பந்தயப் புறாக்கள் பறிமுதல்

இலங்கைக்குக் கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற 120 பந்தயப் புறாக்களை, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் வடக்கு மீன்பிடித் துறைமுகம் அருகே கியூ (Q) பிரிவுப் பொலிஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டக் கடற்கரைப் பகுதிகள் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால், மண்டபம், மரைக்காயர் பட்டினம், வேதாளை, பாம்பன், குந்துகால் மற்றும் தனுஷ்கோடி போன்ற பகுதிகளில் இருந்து மஞ்சள், கடல் அட்டை, கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இலங்கைக்குக் கடத்தப்படுவதும், இலங்கையிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகள் தமிழகத்திற்குப் புழக்கத்திற்கு வருவதும் தொடர்கதையாகி வருகிறது. இவற்றைத் தடுக்கக் கடற்படை, கடலோர காவல் படை மற்றும் கியூ பிரிவு உள்ளிட்ட பல அமைப்புகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், பாம்பன் வடக்கு மீன்பிடித் துறைமுகம் வழியாக நாட்டுப் படகின் மூலம் இலங்கைக்குப் பந்தயப் புறாக்கள் கடத்தப்பட இருப்பதாக ராமநாதபுரம் கியூ பிரிவு ஆய்வாளர் ஜீவமணிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நேற்று நள்ளிரவு முதல் கியூ பிரிவு பொலிஸார் பாம்பன் பாலம் மற்றும் மீன்பிடித் துறைமுகப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பாம்பன் சாலைப் பாலத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த கார் ஒன்றை பொலிஸார் செவ்வாய்க்கிழமை (07) அன்று சுற்றி வளைத்தனர். காரில் இருந்த இருவரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர். இதனையடுத்து காரைப் பரிசோதித்தபோது, அதற்குள் ஆறு இரும்பு கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 120 பந்தயப் புறாக்களைக் கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

விசாரணையில், அவர்கள் மதுரை சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த நவாப் செரிப் (22) மற்றும் மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (39) என்பது தெரியவந்தது. புறாக்களைக் கடத்திக் கொண்டு வந்த காரையும், கூண்டுகளையும் பறிமுதல் செய்த போலீசார், பிடிபட்ட இருவரையும் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

புறாக்களுடன் காரைப் பறிமுதல் செய்ததைத் தொடர்ந்து, கடலோரப் பகுதியில் ஆய்வு செய்யச் சென்ற கியூ பிரிவு பொலிஸாரைக் கண்டதும், அங்கு நின்றிருந்த நாட்டுப் படகு ஒன்று வேகமாக நடுக்கடலுக்குள் தப்பிச் சென்றது. அந்தப் படகு குறித்து மரைன் போலீசாரின் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது.

பிடிபட்ட இருவரும், மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்தப் புறாக்களைக் கடல் வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்றதை ஒப்புக்கொண்டனர். இலங்கைக்குப் பந்தயப் புறாக்கள் கடத்த முயன்றது இப்பகுதியில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ba4598f0-5b62-11ee-8789-13750be9e58d.jpg

“நாவைக் காக்க வேண்டும்”: திமுகவினரின் அநாகரிகப் பேச்சுக்குத் திருக்குறள் வழியே கனிமொழி கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு அறிவுரை

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“ஆ.ராசா மற்றும் சேகர்பாபுவின் பேச்சுகள் திமுகவின் வன்மத்தைக் காட்டுகிறது” – அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; ஆவணங்கள் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

September 13, 2026

துரை: அவசரநிலையின் போது மிசா சட்டத்தின் (MISA) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகவே அவர்

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை

Untitled-5

தொடர் விடுமுறை: 2,354 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – விதிகளை மீறிய 400 ஆம்னி பேருந்துகள் மீது அதிரடி நடவடிக்கை!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையையொட்டிப் பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காகக் கிளாம்பாக்கத்திலிருந்து 2,354 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில்,

2

பரந்தூரைப் போல பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக விவகாரத்திலும் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார்: எம்.பி. துரை வைகோ நம்பிக்கை!

September 13, 2026

திருச்சி: திருச்சி மாவட்டம் கே.கள்ளிக்குடி ஊராட்சியில், தனது தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய

725c2e6d9fca0dc4aada0ee563cfb1b495b36e3eddff80882083ace68426ca4f

மலேசியப் பிரதமரைச் சந்திக்க முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தைத் தள்ளிவைக்க ஆளுநர் மாளிகை கோரிக்கை: பரபரப்புத் தகவல்!

September 13, 2026

சென்னை: புதுடெல்லிக்கு வருகை தந்துள்ள மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமைச் சந்திப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தைத் தள்ளிவைக்குமாறு

1200-675-26766517-thumbnail-16x9-trichy2-aspera

“ஆபாசமாகப் பேசுவதுதான் திமுகவின் அரசியல்!” – சேகர்பாவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!

September 13, 2026

சென்னை: அரசியல் என்ற பெயரில் ஆபாசத்தையும், அவதூறையும் பேசுவதையே திமுகவினர் வாடிக்கையாக வைத்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்

1200-675-27622338-thumbnail-16x9-ministersrinath

தூத்துக்குடி கப்பல் கட்டும் தள எதிர்ப்பு: செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளிக்காமல் நழுவிய அமைச்சர் ஸ்ரீநாத்!

September 13, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமையவுள்ள புதிய கப்பல் கட்டும் தளத் திட்டத்திற்கு உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து

HSBts-6bwAAGySO

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற சர்வதேசக் கார் பந்தயம்: இங்கிலாந்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

September 13, 2026

லண்டன் / சென்னை: தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த “மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்” அமைப்பதற்கான முன்னோட்டமாக, இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்