கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு பிரச்சினை காரணமாக கியூபாவில் மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான மின்சார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
நாட்டின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றில் ஏற்பட்ட “எதிர்பாராத” செயலிழப்பு நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளில் மின் தடைக்கு வழிவகுத்ததாக அறிக்கை கூறுகின்றது.
தலைநகர் ஹவானாவில் இருந்து மேற்கு பினார் டெல் ரியோ மாகாணமான காமகுவே வரையிலான பகுதியில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஹவானாவில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் கிழக்கே அமைந்துள்ள அன்டோனியோ கைடெராஸ் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு இந்த செயலிழப்புக்கு காரணம் என்று அறிக்கை கூறுகின்றது.