இராணுவத்தினரின் பெற்றோருக்காக வழங்கப்படும் கொடுப்பனவை இடைநிறுத்தவில்லை!

இராணுவத்தினரது பெற்றோருக்காக வழங்கப்பட்ட கொடுப்பனவை இடைநிறுத்தவில்லை. பயனாளர்களின் விபரம் மாத்திரமே கோரப்பட்டுள்ளது. கொடுப்பனவு இடைநிறுத்தியதாக குறிப்பிட்டு ஒரு தரப்பினர் அரசாங்கத்துக்கு எதிரான தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற அமர்வின்போது பாதுகாப்பு அமைச்சரின் பிரதிநிதியாக விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இராணுவத்தினரது பெற்றோருக்காக வழங்கப்படும் ‘மௌபிய’ கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் தவறான செய்தியை சமூகமயப்படுத்தியுள்ளார்கள். இந்த கொடுப்பனவை இடைநிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இராணுவ வீரர் ஒருவரின் பெற்றோருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும். அவர்கள் உயிருடன் இருக்கும் வரையில் இராணுவத்தால் இந்த கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்படுகின்ற நிலையில் அவர்கள் உயிரிழந்ததன் பின்னர் மரண சான்றிதழை இராணுவத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற பொது அறிவித்தல் குறித்த பயனாளர்களின் குடும்பத்தாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் பெற்றோர் உயிரிழந்ததன் பின்னர் தகவல் வழங்கும் வீதம் மிகவும் குறைவானதாகவே காணப்பட்டது. ஒருவர் உயிரிழந்ததன் பின்னர் அவர் சார்ந்த கொடுப்பனவுகளை பிறிதொருவர் முறையற்ற வகையில் பெற்றுக்கொள்வது அரச நிதி முறைகேடாக கருதப்படும்.

இராணுவத்தினரது பெற்றோருக்கான ‘மௌபிய’ கொடுப்பனவு தொடர்பில் வருடத்தில் இரண்டு முறை தகவல் கோரப்படும். கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் பயனாளர் உயிருடன் உள்ளாரா என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இவ்வாறு தகவல் கோரப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தகவல் கோரப்பட்ட போதும் முழுமையான விபரங்கள் அளிக்கப்படவில்லை. இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் இராணுவ சேவை பிரிவு குறித்த கொடுப்பனவை விடுத்துள்ளது.

இராணுவத்தினரது பெற்றோருக்கான கொடுப்பனவை இடைநிறுத்த எவ்வித தீர்மானத்தையும் பாதுகாப்பு அமைச்சு எடுக்கவில்லை. ஒரு தரப்பினர் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இராணுவத்தினரதும் அவர்களின் குடும்பத்தினரினதும் நலன் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம் என்றார்.

ஊடக சுதந்திரம் பொய்யுக்கு இடமளிக்காது – சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்

நாட்டில் தீ மூட்டுவதற்வோ, பொய்யில் அரசியல் செய்யவோ எதிர்க்கட்சித் தலைவர் முயற்சிக்க கூடாது. ஊடகவியலாளர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டமை தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். ஒருசில ஊடகங்கள் இந்த நாட்டில் தீ வைத்துள்ளன. வைத்தியர் சாபி விடயத்தில் எவ்வாறு நடந்து கொண்டது. ஊடக சுதந்திரத்திற்காக நாங்கள் முன்னிருப்போம். ஊடக சுதந்திரத்துக்குள் இருந்துக் கொண்டு தவறான விடயங்களை சமூகமயப்படுத்த முடியுமா? கடவுளாக இருந்தாலும் ஊடகமாக இருந்தாலும் பொய் கூறினால் அதற்கு எதிராக எதிர்க்கட்சி முன்னிலையாக வேண்டும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

பொதுமக்கள் பொலிஸ் சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக சிவில் பாதுகாப்பு குழு தலைவரிடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்,

இந்த விடயத்தை சுட்டிக்காட்டி உரையாற்றிய சபை முதல்வர், பொலிஸ் பதிவுகளை பெறும் போது சிவில் பாதுகாப்பு குழு தலைவரிடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என சுற்றுநிருபங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பலமுறை சபையில் குறிப்பிட்டு, விடயத்தை தெளிவுப்படுத்தியுள்ளார். நாட்டில் தீயை மூட்டுவதற்கு முயற்சிக்கவோ, ,பொய்யில் அரசியல் செய்யவோ முயற்சிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

ஏதேனும் உதாரணங்களை காட்டி கூறலாம். ஆனால் அமைச்சர் இங்கு பொறுப்புடன் அதுபற்றி பாராளுளுமன்றத்தில் விடயங்களை தெளிவுப்படுத்தியுள்ளார்.இந்நிலையில் உங்களின் பதவியுடன் நீங்கள் இவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படலாம். தயவு செய்து பொய்கூற வேண்டாம். மக்களே இதனால் பாதிக்கப்படுவர். உங்களுக்கு அரசியல் இலாபம் கிடைக்கலாம். அதற்காக இல்லாத விடயங்களை குறிப்பிட வேண்டாம்.

பொதுமக்களுக்கு நற்சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் சிவில் பாதுகாப்பு குழுக்களிடம் அதற்கான அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விளக்கமளித்துள்ளார். உங்களுக்கு இதில் இன்னும் தெளிவு பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அமைச்சருடன் கலந்துரையாட முடியும். இந்த நாட்டை பொறுப்பேற்கவுள்ளவர் என்றுதானே கூறுகின்றீர்கள். இந்த நிலைமையில் எப்படி உங்களிடம் நாட்டை ஒப்படைப்பது.

இதேவேளை ஊடகவியலாளர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டமை தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.ஒருசில ஊடகங்கள் இந்த நாட்டில் தீ வைத்துள்ளன. வைத்தியர் சாபி விடயத்தில் எவ்வாறு நடந்துகொண்டது. ஊடக சுதந்திரத்திற்காக நாங்கள் முன்னிருப்போம்.ஊடக சுதந்திரத்துக்குள் இருந்துக் கொண்டு தவறான விடயங்களை சமூகமயப்படுத்த முடியுமா, கடவுளாக இருந்தாலும் ஊடகமாக இருந்தாலும் பொய் கூறினால் அதற்கு எதிராக எதிர்க்கட்சி முன்னிலையாக வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பொலிஸ் சான்றிதழை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் வேண்டுமென்றால் ஊர், பெயர் விபரங்களுடன் தகவல்களை முன்வைக்கின்றேன். அக்மிமன மற்றும் கம்புறுப்பிட்டிய பொலிஸ் நிலையங்களில் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள பொதுமக்கள் செல்லும் போது இவ்வாறு நடக்கின்றது என்பதனை நான் உண்மையாகவே கூறினேன். இதில் பொய்கள் ஏதும் இல்லை என்றார்.

CXM5FMXRZJBINANOWRLZJRBOUI (1)

செயின்ட் ஜானில் இரண்டு சிறுவர்களைக் குத்திக் கொன்ற வழக்கில் நபர் குற்றவாளி எனத் தீர்ப்பு!

June 24, 2026

செயின்ட் ஜான் (Saint John, N.B.): கடந்த ஆண்டு நியூ பிரன்சுவிக் மாகாணத்தின் செயின்ட் ஜான் நகரில் இரண்டு சிறுவர்கள்

62YK4YSVLJEMLBM3BFPBKIL7ME

பேஸ்புக் மார்க்கெட்பிளேஸ் மோசடி: போலிப் பணத்தைக் கொடுத்து ஏமாற்றிய ஹாமில்டன் நகர சிறுவர்கள் இருவர் கைது!

June 24, 2026

ஹாமில்டன் (Hamilton): பேஸ்புக் மார்க்கெட்பிளேஸ் (Facebook Marketplace) இணையத்தளம் ஊடாகப் பொருட்களை விற்பனை செய்த பலரிடம், பல்லாயிரக்கணக்கான டாலர் மதிப்புள்ள

730511042_3065084723680884_6958274398119403866_n

ஒஷாவா காப்பக ஊழியர் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு: 13 வயதுச் சிறுவன் பாதிக்கப்பட்டதாகப் போலீஸ் தகவல்!

June 24, 2026

ஒஷாவா (Oshawa) பகுதியில் உள்ள குழுமக் காப்பகம் (Group Home) ஒன்றின் பெண் ஊழியர் ஒருவர், அங்கு தங்கியிருந்த 13

2ZBCI3FDQZH5PG3FA5LV6F5P4U

மொன்றியால் துப்பாக்கிச்சூடு: பெண்களுக்கும் சமூகத்திற்கும் எதிரான வன்மத்தைக் கக்கிய துப்பாக்கிதாரியின் ‘இன்செல்’ (Incel) கொள்கை அறிக்கை!

June 24, 2026

கனடாவின் மொன்றியால் நகரில் கடந்த திங்கள்கிழமை ஒரு போலீஸ் அதிகாரி, ஒரு பொதுமகன் மற்றும் துப்பாக்கிதாரி உட்பட மூன்று பேர்

ZXJMY2D5IZFKZMKW2SCMALWYUQ

வாட்டர்லூவில் பாலியல் அத்துமீறல் மற்றும் அநாகரிகச் செயல்களில் ஈடுபட்ட நபரைத் தேடும் காவல்துறை

June 24, 2026

வில்ஃப்ரிட் லாரியர் பல்கலைக்கழகத்திற்கு (Wilfrid Laurier University) அருகில் நடந்த தொடர்ச்சியான அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் குறித்து வாட்டர்லூ பிராந்திய காவல்துறை

MediaFile_20260624_203425_345

தெல்தெனிய பெண் உடற்பயிற்சி நிபுணர் கொலை வழக்கு: கழுத்து நெரிக்கப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதி; பிரதான சந்தேக நபரும் மனைவியும் சாவகச்சேரியில் கைது!

June 24, 2026

தெல்தெனிய பகுதியில் வாகனமொன்றினுள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண் உடற்பயிற்சி நிபுணரின் (Physiotherapist) மரணம், கழுத்து நெரிக்கப்பட்டமையினாலேயே (Strangulation) சம்பவித்துள்ளது என்பது

namal

வடக்கு ஆளுநர் அதிகார துஷ்பிரயோகம் – நாமல்

June 24, 2026

வவுனியா மாநகரசபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி. கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து

removed

வவுனியா மேயர் காண்டீபன், சாவகச்சேரி உப தவிசாளர் கிசோர் ஆகியோர் பதவி நீக்கம்

June 24, 2026

வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிசோர் ஆகியோர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக

KKS CEMENT

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் தீ விபத்து: இராணுவ உடைமைகள் சேதம்

June 24, 2026

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகளை வெட்டி அகற்றும் செயலில் ஈடுபட்டிருந்த வேளை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால்

wimal

விமல் வீரவன்சவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வாகன மோசடி வழக்கில் மீண்டும் விளக்கமறியலில்

June 24, 2026

அரசாங்கப் பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் (State Engineering Corporation) சொந்தமான வாகனங்களைத் துஷ்பிரயோகம் செய்து, அதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை

Easter Attacks 1-844647

சஹரான் குழுவின் ஆன்மீகத் தலைவர் நெளபர் மௌலவியின் வாக்குமூலம் தன்னிச்சையானது என நீதிமன்றம் தீர்ப்பு

June 24, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக 24 பிரதிவாதிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கில், முதலாவது குற்றவாளியான சஹரானுடன் தொடர்புடைய

Sri Lanka's President Ranil Wickremesinghe (L) along with country's former President Gotabaya Rajapaksa attend the annual Buddhist Navam procession at the Gangaramaya Temple in Colombo on February 5, 2023. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

கோட்டாபய ராஜபக்ஷவின் மனு மீதான மேலதிக விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஒத்திவைப்பு

June 24, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிமித்தம் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள்