அரசுக்கு சமல் ராஜபக்ஷவின் நிறுவனத்தால் 3.5 கோடி நஷ்டம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் கிலோகிராம் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காகக் கோரப்பட்ட டெண்டர் நடைமுறையில் பாரிய நிதி முறைகேடு இடம்பெற்றுள்ளதாக சிவில் புலனாய்வு முன்னணி (Civil Intelligence Front) குற்றஞ்சாட்டியுள்ளது.

குறித்த டெண்டர் கோரலின்போது மிகக் குறைந்த விலையைக் குறிப்பிட்டிருந்த தகுதியான நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை வழங்காது, விதிகளுக்குப் புறம்பான முறையில் அதிக விலை குறிப்பிட்டிருந்த நிறுவனத்துக்கு அது வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 8 அன்று கோரப்பட்ட இந்த டெண்டரில் மூன்று நிறுவனங்கள் விலைமனுக்களை சமர்ப்பித்திருந்தன. அதில் ஒரு கிலோகிராம் கழிவை அகற்றுவதற்கு முறையே 179 ரூபாய், 230 ரூபாய் மற்றும் 260 ரூபாய் என விலைகள் கோரப்பட்டிருந்தன. விதிகளின்படி, ஆகக் குறைந்த விலையான 179 ரூபாயைக் கோரிய நிறுவனத்துக்கே இந்த டெண்டர் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக சில நாட்களிலேயே அந்த டெண்டர் இரத்து செய்யப்பட்டு, ஒரு கிலோகிராமுக்கு 230 ரூபாய் கோரியிருந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிக விலைக்கு இந்த டெண்டரைப் பெற்றுக்கொண்ட நிறுவனம், முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது என சிவில் புலனாய்வு முன்னணி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.

‘சமல் ராஜபக்ஷ வேஸ்ட் பெசிலிட்டி மெனேஜ்மென்ட்’ (Chamal Rajapaksa Waste Facility Management) என்ற பெயரில் இருந்த இந்த நிறுவனம், தற்போது அதன் பெயரை ‘ஜி.எஃப்.சி’ (GFC) என மாற்றியுள்ளதாக போதிய ஆதாரங்களுடன் சிவில் புலனாய்வு முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

குறைந்த விலை சமர்ப்பிப்பை நிராகரித்து, அதிக விலை கொண்ட இந்த நிறுவனத்தைத் தெரிவு செய்தமையினால், ஒரு கிலோகிராமுக்கு 51 ரூபாய் வீதம், மொத்தம் 6 இலட்சத்து 50 ஆயிரம் கிலோகிராமுக்கு கணக்கிடும்போது அரசாங்கத்திற்கு 3 கோடியே 31 இலட்சத்துக்கும் அதிக நிதி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதனா வைத்தியசாலைகளின் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது என்பது சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான விடயமாக இருக்கும் நிலையில், டெண்டர் தொழில்நுட்பக் குழுவில் உள்ள சில அதிகாரிகள் தங்களின் தனிப்பட்ட லாபங்களுக்காக அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தகுதியான நிறுவனங்களை ஓரங்கட்டியுள்ளனர்.

இந்த முறைகேடு மற்றும் ஊழல் குறித்து சிவில் புலனாய்வு முன்னணியினர் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்துப்பூர்வமான ஆவணங்களுடன் உத்தியோகபூர்வ முறைப்பாட்டை அளித்துள்ளனர்.

அமைச்சர் மட்டத்தில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை எனக் குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு, இது அப்பட்டமான பொதுப்பண ஊழல் என்பதால், இதுகுறித்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், சுகாதார அமைச்சின் செயலாளர் உடனடியாகத் தலையிட்டு இந்த டெண்டரை ரத்து செய்து, அரசுக்கு ஏற்படவிருக்கும் இந்த கோடிக்கணக்கான நஷ்டத்தைத் தடுக்க வேண்டும் எனவும், இது குறித்து ஜனாதிபதிக்கும் விரைவில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிவில் புலனாய்வு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

hurm

ஹோர்முஸில் நீரிணையில் பயணித்த எண்ணெய் கப்பல் வெடிப்பு?

July 27, 2026

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று கண்ணிவெடி ஒன்றில் சிக்குண்ட நிலையில் வெடித்து சிதறியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள்

Death-2

பாடசாலை மாணவி திடீர் மரணம்: பெற்றோர் சந்தேகம்

July 27, 2026

பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த

den

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு

July 27, 2026

இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது. அதன்படி நாட்டின் பொதுச் சுகாதாரத்துறைய​ை வலுப்படுத்தும்

sajith-2

விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம் விவசாயிகளினாலேயே வீடு செல்லும்

July 27, 2026

விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம், விவசாயிகளினாலேயே வீடு செல்லும் காலம் வரக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அநுராதபுரம்

arrest

பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற பொலிஸ் அதிகாரி கைது

July 27, 2026

இரண்டு இளம் பெண்கள் மீது காரை ஏற்ற முயன்ற ஹோமாகம சிரேஷ்ட பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, மீகோட பொலிஸாரால் கைது

cru oil

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி

July 27, 2026

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இரண்டு வாரங்களாக ஈரான் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு

6

மேகதாது பிரச்சனைக்கு முந்தைய திமுக அரசு தான் காரணம் – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!

July 26, 2026

சென்னை: காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தமிழ்நாடு அரசு உறுதியாக காக்கும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

5

தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் விரிவடையும்: நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு தகவல்!

July 26, 2026

சென்னை: தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம், நாடு முழுவதும் விரிவடையும் என்று நீட் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிரத்தினம்

4

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப்பேரவைச் செயலர் கடிதம்!

July 26, 2026

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த சத்தியபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு

li

இரும்பு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு

July 26, 2026

லிந்துலை – மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததால், அப்பகுதி மக்களின்

dol

எல் நினோவால் 20 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும்

July 26, 2026

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண வெப்பநிலை மாற்றங்களால் உருவாகும் சூப்பர் எல் நினோ வானிலை மாற்றம் காரணமாக, ஆபிரிக்க

ddfs

இத்தாலியிலிருந்து சூட்சுமமாக கொண்டுவரப்பட்ட உலோகக் கூடுகள்

July 26, 2026

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற சகோதரர்கள் இருவருக்கு சுங்க