அரசாங்கம் தற்போதைக்கு மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு முயற்சிக்கப்போவதில்லை

கூட்டுறவு சங்க தேர்தல்களில் தோல்வியடைந்துவரும் அரசாங்கம் இந்நிலையில் மாகாணசபை தேர்தலை நடத்தினால் படுதோல்வியடையும் என்பது தெரியும். அதனால் அரசாங்கம் தற்போதைக்கு மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு முயற்சிக்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (11) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் மக்களின் நன்மதிப்பை தற்போது இழந்து வருகிறது. இதற்கு உதாரணம்தான், இடம்பெற்றுவரும் கூட்டுறவு சங்க தேர்தல்களாகும். அண்மையில் இடம்பெற்ற குருணாகல் மாவட்ட கூட்டுறவு சங்க தேர்தல் அனைத்திலும் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. நாடு பூராகவும் இந்த நிலையே இருந்து வருகிறது. தேர்தல்களுக்கு பயப்படப்போவதில்லை என அரசாங்கம் தெரிவித்தாலும், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு எந்த தேவையும் இல்லை.

ஏனெனில் தற்போதைய நிலையில் மாகாணசபை தேர்தலை நடத்தினால், அரசாங்கத்துக்கு தோல்வியல்ல, படுதோல்வியே ஏற்படும் என்பதை அரசாங்கம் நன்கு தெரிந்து வைத்திருக்கிறது. அதனால் தேர்தல் வரைபை அரசாங்கம் சுறுட்டிக்கொண்டிருக்கிறது. மிகவும் குறுகிய காலத்தில் மக்கள் ஆணையை இல்லாமலாக்கிக்கொண்டிருக்கும் அரசாங்கம் தற்போது ஒருசில நாடகங்களை அரங்கேற்றிக்கொண்டே முன்னுக்கு செல்கிறது.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடகாலத்தில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதாக கர்தினால் ஆண்டகைக்கு ஜனாதிபதி வாக்குறுதி வழங்கினார். அரசாங்கத்துக்கு ஒருவருடம் கடந்துள்ளபோதும் புதிய அரசியல் யாப்பு அமைப்பது தொடர்பில் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன? அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் வாக்குறுதி வழங்கி இருந்தது. இந்த வருடம் ஏப்ரல் 22ஆம் திகதிக்கு இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இடம்பெறும் இரண்டாவது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்வாகும்.

அப்படியானால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எங்கே? பிரதான சூத்திரதாரியை மறைத்து வைத்திருப்பதாகவும், ஆட்சிக்கு வந்ததுடன் அதனை வெளிப்படுத்துவதாகவும் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதாகும் இவர்கள் அன்று தெரிவித்து வந்தார்கள்.

ஆனால் எதுவும் இடம்பெறவில்லை.கர்தினால் ஆண்டகையையும் அரசாங்கம் ஏமாற்றி இருக்கிறது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடம் கடந்துள்ளபோதும் இவர்களினால் நாட்டுக்கு அபிவிருத்தியோ, மறுமலர்ச்சியோ அல்லது வேறு ஏதாவது மாற்றங்களோ இடம்பெற்றுள்ளதா என பார்த்தால், எதுவும் காணக்கூடியதாக இல்லை. அதனால் நாட்டை முன்னோக்கு கொண்டுசெல்ல இந்த அரசாங்கத்துக்கு எந்த சக்தியும் இல்லை. அதற்காக அவர்களிடம் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்துவதையும் காணக்கூடியதாக இல்லை.

மாறாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாடங்களை அரங்கேற்றி வருகிறது. பாராளுமன்ற நாடகம், சபாநாயகர் நாடகம் அரங்கேறியுள்ள நிலையில், அடுத்ததாக தற்போது ஏப்ரல் மாதம் வரும்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நாடகத்தை அரங்கேற்றுவார்கள். அதனால் தயவு செய்து இந்த நாடகத்தை அரங்கேற்றாமல், வாக்குறுதி அளித்த பிரகாரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரியை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

ne

“ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்” – இஸ்‌ரேல் எச்சரிக்கை

March 4, 2026

ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் ஒவ்வொரு தலைவரும், யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என புதிய ஆட்சியாளருக்கு இஸ்‌ரேல் எச்சரிக்கை

boa

வலி. வடக்கு ஊரணி மீனவர்கள் இருவர் காணமற் போயுள்ளமை குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை

March 4, 2026

யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அரசாங்கம்

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த