வேலணை பிரதேசத்திற்குள் அனுமதி பெறாத நுண் நிதி நிறுவனங்கள் உள் நுழையத் தடை

வேலணைப் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உட்பட்ட பகுதிகளில், நுண்கடன் நிதி நிறுவனங்கள் பிரதேச சபையின் அனுமதியின்றி செயற்பட முடியாது என சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம், புதன்கிழமை தவிசாளர் சிவலிங்கம் அசோக் குமார் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது நுண்கடன் தொல்லையால் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்தும் அந்த நிறுவனங்களை கட்டுப்படுத்துவது அவசியம் என வலியுறுத்தி உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த்  முன்மொழிவொன்றை சபையில் சமர்ப்பித்தார்.

முன் மொழிவை சமர்ப்பித்து சபையில் கருத்து தெரிவிக்கையில்,

 வறிய மக்களின் இலக்குவைத்து அதிக வட்டி வீதங்களுடன் பல நுண்கடன் நிதி நிறுவனங்கள் கண்கவர் பரப்புரைகள் மூலம் பிரதேசத்திற்குள் நுழைந்து மக்களை அதன் பொறிக்குள் வீழ்த்தி ஏமாற்றி வருகின்றனர்.

எமது பிரதேச மக்கள் நிதிக்கான அவசர தேவை கருதி அதிகூடிய வட்டிகளுக்கு நிதியை பெற்றுக்கொள்கின்றனர்.அதன் பின்னர் குறித்த கடனை செலுத்துவதில் பெரும் இடர்களை சந்திக்கின்றனர்.

பின்னர் நிதி கட்டத்தவறும் கடனாளிகள் வீடுகளுக்கு நேரகாலம்.பாரது நிதி வசூலிக்கும் நபர்கள் சென்று பெரும் தொல்லை கொடுக்கும் நிலை உருவாகின்றது. அத்துடன்  கடன் பெற்றவர்களுக்கு மிக அழுத்தங்களை வசூலிப்போர் கொடுக்கின்ற நிலையும் காணப்படுகின்றது.

குறிப்பாக பெண் தலைமை குடும்பம் இக்கடனை பெற்றிருந்தால் குறித்த பெண்களுடன் தவறான முறையில் நடந்துகொள்ள சில வசூலிப்பாளர்கள் முயற்சிப்பது மட்டுமல்லாது அதற்கான மன அழுத்தங்களையும் கொடுக்கின்றனர்.

இதனால் தற்கொலை முயற்சிக்கு கடனாளர்கள் செல்லும் துர்ப்பாக்கிய நிலை உருவாக்கப்படுகின்றது.

எனவே எமது பிரதேச மக்களது வறுமையை குறித்த நிறுவனங்கள் தமக்கான முதலீட்டு இடங்களாக பயன்படுத்துவதற்கு எமது சபை அனுமதிக்கக் கூடாது என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து உறுப்பினர் சு.பிரகலாதன் கருத்து தெரிவிக்கையில்,

சட்ட விதிகளை பேணாது எமது பகுதிக்குள் 40 இற்கும் அதிகமான நுண்கடன் நிறுவனங்கள் நுழைந்து மக்களுக்கு கடும் குடைச்சலை கொடுக்கின்றன. இந்த நிறுவனங்களில் பல பதிவுகள் அற்றவையாக இருக்கின்றன.

அத்துடன் இந்த நிறுவனங்களின் பாதிப்பு எமது மக்களுக்கு அதிகமாக வருகின்றது. இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றார்.

அதனை தொடர்ந்து உறுப்பினர் நாவலன் கருத்து கூறுகையில்,

 எமது மக்களின் உழைப்பை உறிஞ்சும் இந்த நிறுவனங்களை சபை ஊடாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் இனிவருங் காலத்தில் மக்கள் நுண் நிதி நிறுவனங்களை நாடாதிருக்க விழிப்புணர்வுகளை மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதும் அவசியம்.

சில பிரதேச சபைகள் நுண் நிதி நிறுவனங்கள் தமது ஆளுகைக்குள் செல்வதையே தடைசெய்துள்ளது. அதுபோன்று எமது சபையும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என தெரிவித்தார்.

அதனை அடுத்து உறுப்பினர் பார்த்தீபன் கருத்து தெரிவிக்கையில்,

 மக்கள் தமக்கான நிதியின் அவசிய தேவையை நிவர்த்தி செய்ய இந்த நிறுவனங்களை நாடுகின்றனர். அதைத் தடுக்க நாம் எமது பிரதேசங்களில் உள்ள பொது அமைப்புக்கள் ஊடாக மக்கள் அவசர கடன் வசதி  பெறக்கூடிய பொறிமுறையை உருவாக்கி இந்த பிரச்சினைக்கு மாற்றீடாக தீர்வாக கொடுக்கலாம். அது தொடர்பில் எனது வட்டாரத்தில் ஒரு கட்டமைப்பை சட்ட ரீதியாக உருவாக்கி வருவதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து உறுப்பினர் இதய தீபன் கருத்து தெரிவிக்கையில்,

 இந்த நுண்கடன் தொல்லையால் சில நாள்களுக்கு முன்னர் எனது கிராமத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.  சமூர்த்தி வங்கிகள் போன்ற அமைப்புகள் மக்களுக்கு இலகுவான முறையில் கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்வது அவசியம் என தெரிவித்தார்.

அதனை அடுத்து சபையின் தவிசாளர் அசோக்குமார் தலைமையில் , சபையின் அனுமதி பெறாது எந்த ஒரு நுண் நிதி நிறுவனமும் உள்நுழைய முடியாது. மாறாக நியாயமான வட்டி வீதங்களுடன் பிரதேச சபையின்  நியமங்களை ஏற்று  சபையின் அனுமதி பெற்றே செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். அவ்வாறு சபையின் நிபந்தனைகளை  ஏற்றுக்கொள்ளாத  நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என  குறித்த முன்மொழிவு ஏகமனதாக தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

pa

இஸ்ரேலில் பாலைவனத்தை சோலைவனமாக்கிய இந்தியர் மறைவு

November 18, 2025

இஸ்ரேலில் பாலைவனத்தை சோலைவனமாக்கியவர் என்ற பெருமைக்குரியவரும், இந்திய அரசின் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான உயரிய ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருதை

dolf

மன்னாரில் தென்பட்ட டொல்பின்கள் இராமநாதபுரம் சென்றன?

November 18, 2025

மன்னார் இலுப்பைக்கடவை கடற்பகுதிக்கு கூட்டமாக வருகை தந்த டொல்பின்கள் தற்போது இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி கடலோரப் பகுதிகளுக்கு

wome

2025 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு!

November 18, 2025

கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் பெண்களுக்கு

Man on the chair in Handcuffs. Rear view and Closeup ,Men criminal in handcuffs arrested for crimes. With hands in back,boy  prison shackle in the jail violence concept.

ஏழாலையில் பெருமளவான கோடாவுடன் ஒருவர் கைது

November 18, 2025

யாழ்ப்பாணம் – ஏழாலை வடக்கு பகுதியில் 180 லீட்டர்கள் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். கசிப்பு தயாரிப்பதற்காக

parliament-of-sri-lanka-1-1

கொடுப்பனவை இழக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

November 18, 2025

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 1971 ஆம் ஆண்டு முதலாம் இலக்க நாடாளுமன்ற

ha

பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள்; உள்நாட்டு பாதணி உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பு!

November 18, 2025

கல்வி அமைச்சினால் தற்போது 250க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளை மையமாகக் கொண்டு, பாடசாலைச் சப்பாத்து கொள்வனவிற்காக வழங்கப்படும் வவுச்சர்

tr

புத்தர் சிலை விவகாரம்; தடயவியல் பொலிஸார் கள ஆய்வு

November 18, 2025

திருகோணமலை கடற்கரை பகுதிக்கு சென்ற தடயவியல் பொலிஸார் புத்தர் சிலை விவகாரம், அதன் சேத நிலைவரம் தொடர்பில் கண்டறிய, கள

anan

80 பாதாள உலக செயற்பாட்டாளர்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

November 18, 2025

பாதாள உலக செயற்பாட்டாளர்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (18)

sev

கைது செய்யப்பட்டுள்ள செவ்வந்தி தொடர்பில் முக்கிய தகவல்

November 18, 2025

கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த

air

விமான நிலையத்தில் பயணிகளால் கைவிடப்பட்ட பொதிகளில் சிக்கிய மர்மம்

November 18, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளால் விட்டுச் செல்லப்பட்ட பொதிகளில் இருந்து போதை பொருள் தொகை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. சுங்க அதிகாரிகளால்

ai

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று ஆண்களிடம் அதிகரிப்பு

November 18, 2025

தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமீப தரவுகளின் படி, இலங்கையில் ஆண்களை மட்டுமே மையமாகக் கொண்ட எச்.ஐ.வி தொற்றுகள்

po

அஞ்சலை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுப்பு

November 18, 2025

இலங்கை அஞ்சல் வாடிக்கையாளர்களின் வெளிநாட்டு நாணயம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. சர்வதேச அமைப்பொன்று இலங்கை தபால்