வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கான e-BMD திட்டம்

அரசாங்கத்தின் அரச சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் பிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட e-BMD கட்டமைப்பு, தற்போது 62 தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது.

மேலும் இது ஆரம்பிக்கப்பட்ட முதல் ஆண்டில் 8,027 நபர்கள் நேரடியாக பயனடைந்துள்ளனர். அரச சேவைகளை மக்களுக்கு நெருக்கமாகக்கும் ஜனாதிபதியின் கருத்தியலுக்கு இணங்க, e-BMD திட்டம் 2025 ஜனவரி 06 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயற்பாட்டின் 07 நாடுகளில் ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இந்த சேவை 2025 பெப்ரவரி 07ஆம் திகதி முதல் 62 வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

இதன் மூலம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட நகல்களை தாம் வசிக்கும் நாட்டில் உள்ள தூதரகம் அல்லது உயர் ஸ்தானிகராலயத்திலிருந்து நேரடியாகப் பெற முடியும். இந்தச் சான்றிதழ்கள் சட்டப்பூர்வ அங்கீகாரத்துடன் வழங்கப்படுவதுடன், இதற்காக இனிமேல் இலங்கைக்கு நேரடியாக வருகை தரவோ அல்லது நீண்ட கால செயல்பாட்டில் ஈடுபடவோ தேவையில்லை.

இந்தச் சேவை ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் இங்கிலாந்து, இத்தாலி, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, ஐக்கிய அரபு இராச்சியம், ஜப்பான், மலேசியா, இந்தியா மற்றும் ஏனைய ஆசிய பிராந்தியங்களில் வசிக்கும் இலங்கையர்களுக்குக் கிடைக்கிறது. பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதை டிஜிட்டல் மயப்படுத்தி, தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களை தலைமை பதிவாளர் திணைக்களத்துடன் நேரடியாக இணைப்பதன் மூலம், ஆவணங்களின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து ஆவணங்களை தயார் செய்வதற்கான காலம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

தலைமை பதிவாளர் திணைக்களத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பப் பிரிவால் வழங்கப்படும் நிகழ்நேர (Real-time) தொழில்நுட்ப ஆதரவு காரணமாக, தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களில் செயல்பாட்டு சிக்கல்களைத் தீர்த்து தடையின்றி தொடர்ந்து இச்சேவையை செயல்படுத்த உதவியுள்ளது. வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கைகளுக்குத் தேவையான சான்றிதழ்களைப் பெறுவதில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு இந்தத் திட்டம் பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.

tru

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிடின் மீண்டும் குண்டுவீச்சு – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும்

ele dea

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

April 18, 2026

ஹாலி-எல, உடுவர பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வயல் நிலத்திற்கு சட்டவிரோதமான முறையில்

hurm

ஹோமுஸ் நீரிணையை ஈரான் இராணுவம் மீண்டும் மூடியது

April 18, 2026

ஈரான் தனது இராணுவத்தின் மூலம் ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு அரசு

lal

10 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோருகிறார் அமைச்சர் லால் காந்தா

April 18, 2026

தனது 2025-ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்தலைத் தவறாகச் சித்தரித்து, அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாகக்

bud

வெள்ளை மாளிகையில் உலக அமைதிக்காக பௌத்த மத வழிபாட்டு நிகழ்வு

April 18, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், உலக அமைதி மற்றும் நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கத்திற்காக ஆசி வேண்டி, கடந்த

sc

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம்

April 18, 2026

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) எச்சரிக்கை

d

யாழில் நிதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத வீதி

April 18, 2026

நிதி ஒதுக்கப்பட்ட யாழ்.வடமராட்சி கிழக்கு கேவில் பிரதான வீதி நான்கு மாதங்களுக்கு பின்பும் புனரமைக்கப்படாமல் காணப்படுவதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Ikkiya

 எரிசக்தி அமைச்சர் மற்றும் செயலாளரின் இராஜினாமா ஒரு கண்துடைப்பு 

April 18, 2026

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் இராஜினாமாவானது நிலக்கரி கொள்முதல் மோசடியைப் பொதுமக்களின்

east

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; விசாரணையில் உள்ள பலவீனங்களை சுட்டிக்காட்டும் புதிய அறிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை, இலங்கையின் நீண்டகால விசாரணைகள் இப்போதுதான் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக்

bal

அதிமுக தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கின்றது – மார்க்​சிஸ்ட் கட்​சி​

April 18, 2026

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன்

st

‘தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல் இருக்​கு’ – பிரேமலதா

April 18, 2026

“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான்

vij

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு?

April 18, 2026

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக தவெக தலை​வர் விஜய் மீது 3 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். தவெக