வெருகலில் நிவாரணங்களை வழங்குமுhறும் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யுமாறும் மக்கள் போராட்டம்

திருகோணமலை மாவட்ட வெருகல் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு நிவாரணங்களை வழங்க கோரியும் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யுமாறு கோரியும் மக்கள் நேற்று (13) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீரற்ற காலநிலை காரணமாகவும் மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்ததாலும் பல சேதங்கள் ஏற்பட்டன.

இதனால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணங்களை அலுவலகத்தில் பூட்டி வைக்காது பகிருமாறும் கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த வெருகல் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள் பிரதான நுழைவாயிலை மறித்து போராடினர்.

பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வெருகல் பிரதேச செயலக வளாகம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் கொடுப்பனவுகளை வழங்குமாறும் குரல் எழுப்பிய மக்கள் பிரதேச செயலாளரை வெளிதே விடாது தடுத்தனர்.

இதன் பின்னர் குறித்த இடத்திற்கு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் W.G.m.ஹேமந்தகுமார வருகைதந்து பொதுமக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில், அரச உத்தியோகத்தர்கள் வெள்ள நிலைமை ஏற்பட்டதன் பின்னர் சுமார் இரண்டு மூன்று மணித்தியாலங்களை தூங்குகின்றனர்.உங்களுக்காகவே சேவையாற்றுகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்த உதவிகள் சகல பிரதேச செயலகங்களுக்கும் இப்போதுதான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .அவர்கள் உங்களுக்கு பகிர்ந்து தருவார்கள் அதுவரையில் அமைதியாக இருங்கள் என்று கூறி பொதுமக்களை சமாதானப்படுத்த முற்பட்டார்.

இதன் பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் அவ்விடத்தில் இருந்து வெளியேற முற்பட்டபோது வெருகல் பிரதேச செயலகத்தின் இரண்டு நுழைவாயில்களையும் பொதுமக்கள் மறித்து பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யாது இவ்விடத்திலிருந்து வெளியேற முடியாது என தடுத்தனர்.

இந்த விடயத்தில் ஆராய்வதாக மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதேவேளை வெள்ளம் ஏற்பட்ட நாள் தொட்டு இன்று வரை வெருகல் பிரதேச செயலாளர் மற்றும் அதற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் வீடு செல்லாது மக்களுக்கு பணி செய்து வருவதாகவும் இந்நிலையில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமை கவலை அழிப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் நாளை திங்கட்கிழமை(15) வெருகல் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் தெரிய வருகிறது.

1751730278-rice-hjg-L

அனர்த்தம் ஏற்பட்டிருந்தும் கூட எதிர்காலத்தில் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது – விவசாய அமைச்சர்

December 14, 2025

அனர்த்தம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். சில

arre

ஹேரோயினை கடத்த முற்பட்டவர் கைது

December 14, 2025

ஹெரோயினுடன் நாட்டிற்கு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மலேசியாவிலிருந்து நாட்டிற்கு வந்துள்ளதாக

3 dd

டித்வா புயல் காரணமாக சுமார் 6164 வரையிலான வீடுகள் முழுமையான சேதம்

December 14, 2025

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

gun

காட்டுப் பகுதியில் கட்டப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி

December 14, 2025

பலாங்கொடை, சமனல வேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்தெட்டுவ கிராமத்தின், காட்டுப் பகுதியில், கட்டப்பட்ட துப்பாக்கியொன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம்

HAri

புதிய டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை மீளாய்வு!

December 14, 2025

யுனிசெஃப் (UNICEF) நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை (10) அன்று பிரதமர்

Mujibar Rahuman

குழு ஒன்று முஜிபுரின் தங்கையிடம் விசாரணை: முஜிபுர் முறைப்பாடு

December 14, 2025

குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்ததாகக் கூறிக்கொள்ளும் குழு ஒன்று, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் கல்கிஸையில் உள்ள

ரயிலில் யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த இளைஞர்!

December 14, 2025

ரயிலில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த அனாதை பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின்

சிரியாவில் அமெரிக்க வீரர்கள் படுகொலை!

December 14, 2025

சிரியாவில் ஒரு தனி இஸ்லாமிய அரசு துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவில் மொழிபெயர்ப்பாளரும்

ஓமன் வளைகுடாவில் எரிபொருளுடன் கடத்தப்பட்ட கப்பல் ஒன்றை கைப்பற்றிய ஈரான்!

December 14, 2025

கடத்தப்பட்ட எரிபொருட்களுடன், ஓமன் வளைகுடாவில் ஒரு எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது இந்தியா, இலங்கை

சீனாவின் செல்வாக்கு இந்தியப் பெருங்கடலில் விரிவடைகின்றது?

December 14, 2025

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் ஒரு கொடிய சூறாவளியிலிருந்து இலங்கை மீண்டு வருவதால், கடல்சார் பாதுகாப்பு,

ஹமாஸின் முக்கிய தளபதி படுகொலை

December 14, 2025

காசா நகரில் ஒரு கார் மீது நடத்திய தாக்குதலின் போது ஹமாஸின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க பல்கலைக்கழத்தில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி

December 14, 2025

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்