வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை சபலென்கா 6-2 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட ஜெசிகா பெகுலா அடுத்த இரு செட்களை 6-4, 7-6 (7-2) என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதன்மூலம் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா தொடரில் இருந்து வெளியேறினார்.
maalaimalar