விவசாய காப்புறுதி மாதம் பிரகடனம்!

2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள விவசாய காப்புறுதிச் சபையினால் விவசாயிகளுக்காக ‘காப்புறுதி மாதம்’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நெல், மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சோயா அவரை, மிளகாய் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களுக்கும் வறட்சி, வெள்ளம், காட்டு யானைகள், பூச்சித் தாக்கம், தீ விபத்துக்கள், நோய்கள் மற்றும் பீடைகளினால் ஏற்படும் அனைத்துச் சேதங்களுக்கும் காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்.

குறைந்த தவணைக் கட்டணத்தைச் செலுத்திப் பெற்றுக்கொள்ளும் இக்காப்புறுதித் திட்டங்களின் மூலம், இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட பயிர்ச் சேதங்களுக்கு இழப்பீடு பெற்றுக்கொள்ள முடியும்.

கௌபி, பாசிப்பயறு, உளுந்து, குரக்கன், நிலக்கடலை, எள், கொள்ளு ஆகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூபா 60,000/- பெற்றுக்கொள்வதற்குச் செலுத்த வேண்டிய தவணைக் கட்டணம், காப்புறுதித் தொகையில் 7% ஆகும்.

இது தவிர, சர்க்கரைவள்ளி, மரவள்ளி, பால் கிழங்கு, பீட்ரூட், கோவா, கரட், லீக்ஸ், சிறிய வெங்காயம், கத்தரி, வெண்டை, அவரை, குடை மிளகாய், தக்காளி, பாகற்காய், பூசணி ஆகிய பயிர்களுக்கும் ஏக்கருக்கு காப்புறுதித் தொகையில் 7% செலுத்துவது போதுமானதாகும்.

அதன்படி, சர்க்கரைவள்ளி செய்கையில் ஏக்கருக்கு ரூபா 100,000/- காப்புறுதிப் பாதுகாப்பைப் பெறுவதற்குச் செலுத்த வேண்டிய காப்புறுதித் தவணைக் கட்டணம் ரூபா 7,000/- ஆகும்.

இஞ்சி, மஞ்சள், கறுவா, மிளகு, அன்னாசி, பப்பாளி மற்றும் வாழை செய்கைகளுக்கும் மிகச் சலுகை அடிப்படையிலான தவணைக் கட்டணங்களின் கீழ் காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்காகக் கவர்ச்சிகரமான காப்புறுதித் திட்டங்களை விவசாய காப்புறுதிச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டங்களில் பங்களிப்புச் செய்து பயிர்ச் சேத அபாயங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை விவசாயிகளிடம் கேட்டுக்கொள்கிறது.

இது தொடர்பான விபரங்களை விவசாய காப்புறுதிச் சபையின் தலைமை அலுவலகம் மற்றும் நாடு முழுவதும் அமைந்துள்ள மாவட்ட அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.