விமானத்தில் வெடிகுண்டு; அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்

டெல்லியில் இருந்து 230 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

பேக்டோக்ரா (Bagdogra) நோக்கி பயணித்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில், கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறிய டிஷ்யூ காகிதம் ஒட்டுமொத்த விமானத்தையும் அதிர வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இண்டிகோ 6E 6650 விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அதன் கழிவறையில் கையால் எழுதப்பட்ட ஒரு குறிப்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த டிஷ்யூ காகிதத்தில் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எழுதப்பட்டிருந்ததால் விமானத்திற்குள் பெரும் பதற்றம் நிலவியுள்ளது.

இந்த மிரட்டல் காகிதம் எடுக்கப்பட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு நெறிமுறைகளின் படி விமானம் உடனடியாக லக்னோ விமான நிலையத்துக்குத் திசைதிருப்பப்பட்டுள்ளது.

An IndiGo flight from Delhi to Bagdogra was diverted to Lucknow on Sunday after a bomb threat was found onboard. A handwritten note reading “Bomb on the plane” was discovered in the lavatory. All 222 passengers were evacuated safely. Security checks are underway. pic.twitter.com/1aiFj834ts

— Arvind Chauhan (@Arv_Ind_Chauhan) January 18, 2026

காலை 8:46 அளவில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கப்பட்டு, 9:17 அளவில் விமானம் லக்னோவில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் 8 சிறுவர்கள், 2 விமானிகள் மற்றும் 5 பணியாளர்கள் என மொத்தம் 238 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானம் தரையிறங்கியதும் அது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உடனடியாக இராணுவத்தினர் மற்றும் வெடிகுண்டு அகற்றும் பிரிவினர் விமானத்தைச் சூழ்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு, அவர்களது உடைமைகளும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. எனினும், எந்தவித சந்தேகத்துக்கு இடமான பொருட்களும் மீட்கப்படவில்லை என இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்