விசேட செயற்குழு மீது நம்பிக்கை இல்லை – இந்திக அனுருத்த

மாகாணசபைத் தேர்தல் முறைமையில் சட்ட சிக்கலை ஏற்படுத்த நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிக்கு மக்கள் விடுதலை முன்னணியினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள். மாகாணசபைத் தேர்தலை எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள விசேட செயற்குழு மீது நம்பிக்கை கிடையாது எனஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று நடுத்தர மக்களுக்கு எதிராக செயற்படுகிறது. நடுத்தர மக்கள் எதிர்க்கொள்ளும் எவ்வித பிரச்சினைகளுக்கும் இதுவரையில் தீர்வு முன்வைக்கப்படவில்லை.

எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். தரமற்ற நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.இதனால் எதிர்வரும் காலங்களில் மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக் கூடும்.தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் ஏற்பட்ட நட்டத்துக்கு யார் பொறுப்புக்கூறுவது.

ஊழலுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடிகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்த நிலையில் காணப்படுகிறது. நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை 65 சதவீதமளவில் உயர்வடைந்துள்ளதாக தற்போது குறிப்பிடப்படுகிறது. அவ்வாறாயின் மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் உடன் நடத்தலாமே.அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. ஆகவே எல்லை நிர்ணய பிரச்சினைக்கு ஒருவாரத்துக்குள் தீர்வு கண்டு, தேர்தலை நடத்தலாம்.

மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறையில் நடத்துவது என்று ஆராய்ந்து விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கு வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு புதிய தேர்தல் முறைமை ஊடாக மாகாணசபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சட்டசிக்கல்களினால் மாகாணசபைத் தேர்தல்கள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டது.மக்கள் விடுதலை முன்னணியினர் மாகாணசபை முறைமைக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார்கள். ஆகவே அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான குழு மீது நம்பிக்கை கிடையாது என்றார்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.