சென்னை,
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், போக்குவரத்து வசதிகள் இல்லாததால் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் பேருந்து நிலையங்களில் தவித்து வருவது குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் விஜய் கூறியிருப்பதாவது: “சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பேருந்துகள் இன்றி தவித்து வருகின்றனர். தேர்தல் பணிக்காகப் பெருமளவிலான பேருந்துகள் மற்றும் வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டதால், சாதாரணப் பொதுமக்கள் உதவியற்ற நிலையில் விடப்பட்டுள்ளனர். இது அரசின் திட்டமிடல் குறைபாட்டையே காட்டுகிறது.
வாக்களிப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. போக்குவரத்துத் தடையால் அந்த உரிமை பறிக்கப்படுவது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்குச் சவாலாக அமையும். எனவே, மக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, உடனடியாகப் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். மேலும், சொந்த ஊர் சென்று வாக்களிக்கத் தாமதமாகும் வாக்காளர்களுக்காக, வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும்,” என விஜய் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
#Vijay #TVK #ElectionCommission #TNElection2026 #TransportIssue #Kilambakkam #Koyambedu #VoteForTamilNadu #TVKChiefVijay #ElectionRules #VotingTimeExtension #TamilPolitics #VijayLetter #PublicInterest #TNAssemblyElection #April23 #BreakingNews #TransportationCrisis #RightToVote #PoliticalNews