வடமராட்சியில் மிதுன்ராஜின் சாதனையைப் பாராட்டி மதிப்பளிப்பு

தெற்காசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்று பதக்கம் வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தி பெருமை சேர்த்துள்ள வடமராட்சியை சேர்ந்த மிதுன்ராஜின் சாதனையை பாராட்டி மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று பருத்தித்துறையில் மிக சிறப்பான முறையில் இடம்பெற்றுள்ளது.

இந்தியா – ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா கால்பந்தாட்ட விளையாட்டரங்கில் கடந்த 24.10.2025 ஆரம்பமாகி இடம்பெற்ற 4ஆவது தெற்காசிய மெய்வல்லுனர் சிரேஷ்ட சம்பியன்ஷிப் போட்டி தொடரில் இலங்கை சார்பில் பங்கேற்றிருந்த ஹாட்லி கல்லூரி மாணவனும் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டு கழக வீரருமான சுசீந்திர குமார் மிதுன்ராஜ் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 14.68 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

நீண்ட காலத்திற்கு பின்னர் வடக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவர் சர்வதேச ரீதியில் இலங்கை சார்பில் பங்கேற்று பதக்கம் வென்றமை வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது.

அந்த வகையில் தாயகம் திரும்பியுள்ள வடமராட்சி மண்ணின் மைந்தனான மிதுன்ராஜின் சாதனையை பாராட்டி மதிப்பளிக்கும் நிகழ்வு பருத்தித்துறை வர்த்தகர் சங்கத்தின் அனுசரணையில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறையில்  மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை சித்தி விநாயகர் (பெரிய பிள்ளையார்) ஆலயத்தில் காலை 10.00 மணியளவில் இறை வழிபாட்டை தொடர்ந்து சாதனை வீரனுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவிக்கப்பட்டது.

தொடர்ந்து திறந்த வாகனத்தில் சாதனை வீரன் மிதுன்ராஜ் ஏற்றப்பட்டு மங்கல வாத்திய மரியாதையுடன் சூரிய மஹால் திருமண மண்டபம் வரை பிரதான வீதியூடாக அழைத்து செல்லப்பட்டு மதிப்பளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. வழி நெடுகிலும் வர்த்தகர்கள், பருத்தித்துறை முச்சக்கர வண்டி சேவை சங்கத்தினர்,பொது மக்கள் மிதுன்ராஜிற்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தது பாராட்டு தெரிவித்தனர்.

பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டு கழகத்தை சேர்ந்த அரவிந்தன் தலைமையில் சூரிய மஹால் மண்டபத்தில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் ஹாட்லி கல்லூரி முன்னாள் அதிபர் த.கலைச்செல்வன் மற்றும் ஆசிரியர்கள், பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டு கழகத்தினர், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள், யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் சார்பில் அதன் தலைவர் கு.மகாலிங்கம் உள்ளிட்டோர் சாதனை வீரன் மிதுன்ராஜிற்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து மதிப்பளித்தனர்.

மிதுன்ராஜின் பயிற்றுவிப்பாளர் வ.ஹரிகரன் மற்றும் நா.முகுந்தன் ஆகியோருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச செயலாளர் நடராசா திருலிங்கநாதன் பிரதம விருந்தினராக வும் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் சிறப்பு விருந்தினர்களாகவும் யோகாசன ஆசான் ம.இரத்தினசோதி மற்றும் பருத்தித்துறை வர்த்தகர் சங்க பொருளாளர் ஆதித்தன் ஆகியோர் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் மா.முரளி, மாவட்ட, பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள்,பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக வீரர்கள், வர்த்தகர்கள்,பொதுமக்கள், மிதுன்ராஜின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

fs

காதல் என்பது ‘ஒன்றும் இல்லை’ – தனுஷ்

November 17, 2025

காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் தனுஷ்ஜி என்று இந்தி செய்தியாளர்கள் ஆர்வமாக கேட்க, அவர் சொன்ன பதில் தான் அனைவரையும்

sk26

SK26 படம்; சிவகார்த்திகேயன் -வெங்கட் பிரபு

November 17, 2025

கங்கை அமரன் சமீபத்தில் SK26 படம் குறித்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் SK26 திரைப்படம்

roj

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் ரோஜா

November 17, 2025

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் ரோஜா. அரசியலில் ஈடுபட்டு வரும் அவர் முதல்வர் பதவிக்கு வருவது

theep

விஜயகாந்த் பட நடிகை: பெரிய வீட்டு மருமகள்?

November 17, 2025

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா சகோதரரின் மருமகள் தீப்தி பட்நாகர் பற்றி சினிமா ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தீப்தி தமிழ் படங்களிலும்

ma

‘மாஸ்க்’ படத்துக்கு திடீர் சிக்கல்…

November 17, 2025

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஜிவி

55

இலங்கை சுற்றுலாத் துறையில் மைல்கல்: இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கைக் கடந்தது

November 17, 2025

2025 ஆம் ஆண்டுக்கான இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை இலக்கை மீறி, இலங்கை சுற்றுலாத் துறை இன்று (17)

2

உள்ளூர் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிரந்தர வேலைத்திட்டம்!

November 17, 2025

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (17)

gajen

திருமலை விவகாரம்: உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

November 17, 2025

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை என

chan

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில் சஜித் தலையிட்டால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

November 17, 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும்

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்

gg

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

November 17, 2025

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும்