ஜனாதிபதியின் முழு நாடுமே ஒன்றாக எனும் தேசிய செயற்பாட்டிற்கு இணைந்த வகையில் விஷ போதைப்பொருளை தடுப்பதற்கான கிராம மட்ட குழு ஒன்று இன்று வடமராட்சி புலோலியில் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு பருத்தித்துறை பிரதேசசபையின் புலோலி வட்டார உறுப்பினர் புலோலியூர் ரமணன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இதில் 6ம் வட்டாரமான புலோலி வட்டாரத்தின் j.408 கிராமத்திற்கு உட்பட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிகள், கிராம மக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் போதைப்பொருளை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்களை வடமராட்சி வடக்கு பிரதேச செயலக போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் நந்தகுமார், கிராம சேவகர் ரங்கநாதன், சமுர்த்தி உத்தியோகத்தர் சியாமளா, சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் திவ்வியா, பருத்தித்துறை போலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் புத்திக குமார, மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விதுஷன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
அத்துடன் போதை ஒழிப்பு குழுவின் செயற்பாடுகள் தொடர்பாகவும் விளக்கமளித்தனர். தொடர்ந்து போதை விழிப்புணர்வு செயலாற்ற குழு ஒன்றும் அமைக்கப்பட்ட்து.