இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் உள்ள கடற்றொழிலாளர்களுடைய உபகரணங்கள், வாடிகள் என்பன பலத்த சேதமடைந்துள்ளன.
கடற்பகுதிகளில் வீசிய கடுமையான காற்றால் பல கடற்றொழிலாளர்களின் உபகரணங்கள் வலைகள் மண்ணால் மூடப்பட்டுள்ளது.
அத்தோடு, சிலருடைய உபகரணங்கள் கடலோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அதனை கடற்றொழிலாளர்கள் தேடி வருகின்றனர்.