வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் வெள்ள அபாயம்

வடக்கு மாகாணத்தில் மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, குளங்களின் கீழ்ப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம்.” – இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை தலைவரும் காலநிலை ஆய்வாளருமான பேராசிரியர் நா. பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட காலநிலை அவதானிப்பு அறிக்கையில், “நாட்டின் தென்கிழக்கே நிலவும் காற்றுச் சுழற்சி மற்றும் தென்மேற்கு பகுதியில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக தற்போது கிடைத்து வரும் மழை நாளை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் பல மணித்தியாலங்களுக்கு மேலாக மழை கிடைத்து வருகின்றது. தொடர்ந்தும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குளங்கள் பலவும் வான் பாய்கின்றன. ஆறுகளும் அவற்றின் கொள்ளளவை எட்டியுள்ளன.

ஆகவே, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நில பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.

குறிப்பாக குளங்களின் கீழ்ப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம். குறிப்பாக, யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

ஆகவே, யாழ்ப்பாணம் நகரை அண்மித்த தாழநிலப்பகுதி மக்கள், ஏனைய தாழ் நிலப்பகுதிகளில் பகுதிகளில் உள்ள மக்களும் அவதானமாக இருப்பது சிறந்தது.

வெள்ள நிலைமைகளை அவதானித்து முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வது சிறந்தது. மன்னார் மாவட்டத்துக்கு நீரை கொண்டு வரும் பாலியாறு, பறங்கியாறு போன்றவற்றின் நீரேந்து பிரதேசங்களில் மழை கிடைத்து வருகின்றது.

எனவே, இந்தப் பகுதிகளில் உள்ள மக்களும் அவதானமாக இருப்பது அவசியம். கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் நாளை வரை கனமழை தொடரும். மத்திய, தென், ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும் மழை தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனவே, இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ளம், நிலச்சரிவு தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.” என்றுள்ளது.

lax

லக்சபான தேயிலை தொழிற்சாலையின் மீள் புனரமைப்பு பணிகள் தீவிரம்

December 14, 2025

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான மஸ்கெலியா–லக்சபான தேயிலை தொழிற்சாலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி நள்ளிரவில் ஏற்பட்ட திடீர்

high

‘தித்வா’ சூறாவளி அனர்த்தத்தில் மக்கள் உயிரிழந்தமைக்கு அரசாங்கமே பொறுப்பு ; உயர் நீதிமன்றில் எதிர்க்கட்சிகள் வழக்கு

December 14, 2025

‘தித்வா’ சூறாவளி அனர்த்தத்தில் மக்கள் உயிரிழந்தமைக்கு முன்னெச்சரிக்கைகளை அரசாங்கம் உரிய முறையில் கவனத்தில் கொள்ளத் தவறியதே காரணம் எனக் குற்றம்

van

ஆற்றில் கவிழ்ந்த வேன்

December 14, 2025

வெலிகந்த, கினிதம கிராமத்தில் இருந்து வெலிகந்த நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று இசெட் டீ ஆற்றுக்கு விழுந்துள்ளதுடன்

ell

சுனாமியில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு நிவாரணம் அனுப்பினோம்

December 14, 2025

தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாடு இருந்த காலத்தில் 10-15 லொறிகளில் சுனாமியில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு தாம் நிவாரணம் அனுப்பியதாக

ris

ரிட்ஸ் கார்ல்டன் அதி சொகுசு கப்பல் கொழும்பு வருகை

December 14, 2025

ரிட்ஸ் கார்ல்டன் (Ritz Carlton) வலையமைப்பிற்குச் சொந்தமான அதி சொகுசு கப்பல் ஒன்று, 400 பேருடன் இன்று (14) கொழும்பு

sss

யூத அவுஸ்திரேலியர்கள் மீதான தாக்குதல் தீவிரவாத சம்பவமாக அறிவிப்பு!

December 14, 2025

சிட்னியின் பாண்டி கடற்கரையில் ஒரு யூத ஹனுக்கா கொண்டாட்டம் நடந்தபோது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, மொத்தம் இரண்டு

19

நிவாரணம் இல்லையாயின் 1904 க்கு அழைக்கவும்

December 14, 2025

நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதில் அல்லது அத்தியாவசிய சேவைகள் கிடைக்காததில் பொதுமக்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், ‘1904’ என்ற ஹாட்லைன் மூலம்

thesa

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்

December 14, 2025

யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் இன்றைய (14) தினம் தேசத்தின் குரல் என தமிழ் மக்களால் அழைக்கப்படும் அன்ரன்

kank

காங்கேசந்துறை இந்து மயானத்தை மீட்டு தருவதாக உறுதி!

December 14, 2025

காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவித்து தருமாறு அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ,நாடாளுமன்ற உறுப்பினர்

CEB

நெருக்கடியில் இலங்கை மின்சார சபை!

December 14, 2025

இலங்கை மின்சாரசபை அனர்த்தநிலை காரணமாக சுமார் 20 பில்லியன் ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும், தடைப்பட்ட மின்சார விநியோகத்தில்

444

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கை வந்த அமெரிக்க மற்றும் இந்திய விமானங்கள் நாட்டை விட்டு புறப்பட்டன!

December 14, 2025

எமது நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு என்பன ஏற்பட்டது இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் மற்றும்

mano2

பேரவலத்துக்கு பின்னர் எழுந்துள்ள “பாதுகாப்பான வதிவிட காணித்தேவை ” மலையக பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்பட தயார் – மனோ கணேசன்

December 14, 2025

மலைநாட்டில், இந்த பேரவலத்துக்கு பின்னர் எழுந்துள்ள, “பாதுகாப்பான வதிவிட காணி” என்ற உரிமை கோரிக்கையை அரசுடன் உரையாடி பெற அரசாங்கத்தில்